Saturday, December 26, 2020

2004 சுனாமி

துர்நாற்றத்தின் மூலம் காப்பாற்றிய அல்லாஹ்
-----------------------------------------------------------------------------------------
       2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி எங்கள் வாழ்க்கையில் விளையாடப் பார்த்தது.சரியான நேரத்தில் அல்லாஹ் எங்களைக் காப்பாற்றினான். 

அரையாண்டு பரீட்சை விடுமுறையில் குடும்பத்தாருடன் சென்னை சென்றிருந்தேன். 

திருவல்லிக்கேணி ஹைரோட்டில் வசிக்கின்ற என மாணவன் மவ்லவி ஐதுருஸ் நாமி வீட்டில் தங்கி இருந்தோம். 
26 ஆம் தேதி காலை ஸுப்ஹூத் தொழ எழுந்த பொழுது பூமி சுற்றுவது போன்று தோன்றியது. எனக்கு சக்கரை நோய் இருப்பதால் தலை சுற்றுவதாக நினைத்துக் கொண்டேன். 

தொழுத பின்னால் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்க நானும் என் மனைவியும் சிறிது நேரம் கடற்கரையில் உலாவி வரலாம் என்று புறப்பட்டோம். கண்ணகி சிலைக்கு எதிரே உள்ள தெருவில் இருந்து ரோட்டை தாண்டினால் கடற்கரை. அதன் அருகே நெருங்கும் பொழுது பாதையின் ஓரத்தில் பலரும் காலைக் கடனைக் கழித்து இருந்ததால் பயங்கர துர்நாற்றம் வீசியது. 

நாற்றத்தை தாங்க முடியாத என மனைவி எனக்கு வாந்தி வருவது போல் இருக்கின்றது, வீட்டிற்கு திரும்பி விடலாம் என்று சொன்னார். 

 மூணாவது மாடியில் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்த பொழுது உறவினர் ஒருவர் தொலைப்பேசியின் வழியாக கடல் பொங்கி ஐஸ் ஹவுஸ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

சன் நியூஸைப் பாருங்கள் என்று சொன்னார். நியுஸைப்பார்த்து அதிர்ந்து போனோம். எல்லோருடைய கண்களும் கலங்கி விட்டன.  கடற்கரைக்கு செல்லும் பொழுதெல்லாம் எங்கே அமர்வோமோ அந்த இடம் நீரில் மூழ்கி இருப்பதுடன்   காரொன்று தலைகீழாக கிடக்கும் காட்சியைக் கண்டோம்.
 துர்நாற்றத்தின் மூலம் அல்லாஹ் எங்களை பெரும் விபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றினான். 
            அன்று என் சொந்த ஊரான கணியூரிலிருந்து எங்கள் உறவினர் ஒருவர் கடலூர் பீட்சைப் பார்க்க குடும்பத்தாருடன் காரில் வந்து இருந்தார். தனது ஐந்து வயது குழந்தையைக் காரில் உட்கார வைத்து விட்டு கடற்கரை சென்ற அவர்கள் சுனாமியில் மறைந்து விட்டார்கள். 

நீங்கள் பூமியில் எங்கு மவ்த்தாவீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என அல்லாஹ் சொல்கிறான். சுனாமி நமக்கு பல பாடங்களிக் கற்றுக் கொடுத்து இருக்கின்றது. அதில் ஒன்று, அல்லாஹ் நமக்கு மரணத்தை எவ்வழியில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எனவே, நாம் மவ்த்துக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

தீடீர் மவ்த்து இறை மறுப்பாளர்களுக்கு தீமையாகும். விசுவாசிகளுக்கு நன்மையாக இருக்கின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு முஃமீன் 24 மணி நேரமும் உண்மையான விசுவாசியாகவே இருப்பான். பெரும் பாவங்கள் செய்ய மாட்டான். தான் செய்கின்ற சிறு சிறு பாவங்களுக்கும் உடனுக்குடன் பாவ மன்னிப்பு தேடுவான். தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுவான். எனவே, எந்நேரமும் மரணத்திற்கு தயாராக இருப்பான். 

ஆனால், இறைமறுப்பாளர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படாத நிலையில் பாவம் செய்தவர்களாக   மரணத்தை தழுவுவார்கள்.

எனவே, நாம் எந்நேரத்திலும் மரணம் வரலாம் என பயந்து நமது வணக்கங்களை சரி வர நிறை வேற்ற வேண்டும். நம்மை போன்றவர்களுக்காகத் தான் “#யா அல்லாஹ்! திடீர் மவ்த்தை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்து உள்ளார்கள்.
 நாமும் அவ்வாறே துஆ செய்வோம்

ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்

நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது
ஸலவாத் சொல்லுவதால் கிடைக்கும் நாற்பது நன்மைகள். 
----இப்னுல் கய்யூம் (ரஹ்)
இதன் மொழிபெயர்ப்ப இன்ஷாஅல்லாஹ் விரைவில்

(( أربعون منفعة لمن يُصلي على النبي ﷺ ))
قال ابن القيّم رحمه الله :
أربعون فائدة للصلاة على النبي ﷺ :
(1) امتثال أمر الله.
(2) موافقة الله سبحانه وتعالى في الصلاة على النبي ﷺ وإن اختلفت الصلاتان.
(3) موافقة الملائكة فيها.
(4) الحصول على عشر صلوات من الله تعالى على المصلي مرة واحدة.
(5) يرفع العبد بها عشر درجات.
(6) يكتب له بها عشر حسنات.
(7) يمحى له بها عشر سيئات.
(8) أنها سبب في إجابة الدعاء.
(9) سبب حصول شفاعة المصطفى ﷺ .
(10)سبب لغفران الذنوب.
(11) سبب لكفاية الله سبحانه وتعالى العبد ما أهمّه.
(12) قُرب العبد من النبي ﷺ يوم القيامة.
(13) قيام الصلاة مقام الصدقة لذي العسرة.
(14) سبب لقضاء الحوائج.
(15) سبب لصلاة الله وملائكته عليه.
(16) سبب زكاة المصلي وطهارة له.
(17) سبب تبشير العبد بالجنة قبل موته.
(18) سبب النجاة من أهوال يوم القيامة.
(19) أنها سبب لتذكير العبد مانسيه
(20) سبب رد سلام النبي ﷺ على المصلي والمسلم عليه.
(21) سبب طيب المجلس فلا يعود حسرة على أهله يوم القيامة.
(22) سبب نفي الفقر.
(23) سبب نفي البخل عن العبد.
(24) سبب نجاته من الدعاء عليه برغم الأنف.
(25)سبب طريق الجنة،لأنها ترمي بصاحبها على طريق الجنة،وتخطئ بتاركها عن طريقها.
(26) النجاة من نتن المجلس الذي لا يذكر فيه الله ورسوله ﷺ
(27) سبب تمام الكلام في الخطب وغيرها.
(28) سبب وفور (كثرة)نور العبد على الصراط.
(29) سبب خروج العبد من الجفاء.
(30) سبب لإبقاء الله سبحانه وتعالى الثناء الحسن للمصلي عليه بين أهل السماء والأرض.
(31) سبب البركة على المصلي وعمله وعمره .
(32) سبب نيل رحمة الله تعالى.
(33) سبب دوام محبة المصلي للرسول ﷺ
(34) سبب دوام محبة الرسول ﷺ للمصلي عليه .
(35) سبب هداية العبد وحياة قلبه.
(36) سبب عرض اسم المصلي على النبي ﷺ
(37) سبب تثبيت القدم على الصراط.
(38) سبب أداء بعض حق المصطفى ﷺ
(39) أنها متضمنة لذكر الله وشكره تعالى.
(40) أنها دعاء لأنها سؤال الله عز وجل أن يثني على خليله وحبيبه ﷺ أو سؤال العبد لحوائجه ومهماته..
----------------------------------------------------------------------------
كتاب جلاء الأفهام في فضل الصلاة والسلام على خير الأنام ﷺ ..📚

Friday, December 18, 2020

முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் முஃமினாக இருக்கிறோமா?

முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் மூஃமீனாக இருக்கிறோமா???
****************************************
------ அரபி இணைய தளத்திலிருந்து
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
--------------------------------------------------
முஸ்லிமுக்கும் மூஃமினுக்கும் இடையே உள்ள வித்தியாசம் - குர்ஆன் கூறுவது என்ன??
குர்ஆன் கூறுவதை சற்று ஆய்வு செய்யுங்கள்.
குழப்பமான வேளையில் நம் நிலை என்னவென்று புரியும்..

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடையாளமான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி கொண்டிருப்பார்கள். ஆனால், கல்வியில், பொருளாதாரத்தில், வாழ்வியலில் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்கள். 

இந்த துர்பாக்கியங்களுக்கு என்ன காரணம்??

குர்ஆனில் வருகிறது – 
49:14. “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக.

ஏன் முஸ்லிம்கள் இந்த துர்பாக்கியங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்??

இதற்கான விடையை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. ஏனென்றால், முஸ்லிம்கள் மூஃமினுடைய நிலைக்கு உயரவில்லை.
பின் வரும் ஆயத்துகள் சிந்தித்து பாருங்கள்.
முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைத்து இருக்கும். 
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.
30:47.முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
அவர்கள் மூஃமீனாக இருந்தால் உலக சமுதாயத்திற்கு மத்தியிலே உயர்வான இடத்தை அடைந்திருப்பார்கள்.

அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.

3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் எந்த எதிரியாலும் அவர்கள் வீழ்த்தப்பட மாட்டார்கள்.

அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.

4:141. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.

அவர்கள் உண்மையான மூஃமீனாக இருந்திருந்தால் 
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; 

முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் எல்லா நிலையிலும் அல்லாஹ் அவர்களுடன் இருந்திருப்பான்.

அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.

8:19. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்.

ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் நிலையிலேயே நின்று விட்டார்கள். மூஃமின் நிலைக்கு உயரவில்லை. 

அல்லாஹ் சொல்கிறான்.

அவர்களில் அதிகமானவர்கள் மூஃமீனாக இல்லை.

மூஃமின் என்றால் யார்??
   
இதற்கான விடையை குர்ஆன் இப்படி சொல்கிறது.

9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

சிந்தித்து பாருங்கள்!!

அல்லாஹ்வின் உதவியும், எதிரிகளை மிகைக்கும் ஆற்றலையும், உயர் அந்தஸ்த்தையும் அல்லாஹ், மூஃமீன்களுடன் இணைத்துள்ளான். முஸ்லிம்களுடன் அல்ல.

அல்லாஹ் விரும்புகிற அளவுக்கு நாம் உண்மையான மூஃமீனாக இருக்கிறோமா?????....

உங்களையும் என்னையும் அல்லாஹுத்தஆலா உண்மையான மூஃமினாக வாழ செய்து அந்நிலையிலேயே மரணிக்க செய்வானாக.

நம் தொழுகை எந்த வகையைச் சேர்ந்தது?



நம் தொழுகை எந்த வகையைச் சேர்ந்தது?
??????????????????????????????????????????

ذكر ابن القيم - رحمه الله - في كتابه : ( الوابل الصيب ) 
أن الناس في الصلاة على خمسة أقسام :
இமாம் இப்னுல் கய்யிம் ( ரஹ்) அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்      
* معاقب :
( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை
அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
அவனைத் தண்டிப்பான்.
* محاسب:
( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை
அந்தத்தொழுகையைப் பற்றி 
அல்லாஹ் விசாரிப்பான்.

* مكفرٌ عنه:
( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்கு பரிகாரமாகும் தொழுகை
 அந்த தொழுகையின் காரணமாக அல்லாஹ்
 அவனின் பாவங்களை மன்னிப்பான்
* مثاب:
( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை
 அந்தத் தொழுகையின் காரணமாக 
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான்
* مقرَّب
( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ் வின் பால்  நெருக்கமாக்கும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.
*
முதல்வகைதொழுகை.
ஒருவன் தொழுகிறான் ,ஆனால் ஒழுங்காக முழுமையாக ஒழுசெய்வதிலோ, தொழுகையுடைய,பர்லு,வாஜிபு,சுன்னத் போன்றவைகளை சரிவர செய்யவேண்டும் என்ற 
கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகிறான்
இத்தகைய தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்
*
இரண்டாவது வகை.
  ஒருவன் தொழுகை நிறைவதற்குத் தேவையான பர்லு ,வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான்,

 ஆனால் தக்பீர் கட்டி தொழுகையில் நுழைந்ததிலிருந்து  அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறி தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் எனத் தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கியவாரே தொழுது முடிக்கிறான்.

தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.

மூன்றாவது வகை:
தொழுகையின் அனைத்து ஷர்த்துகளையும்  முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது  முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல்  தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே தொழுது முடிக்கிறான்.
இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.
*

நான்காவது வகை:
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழு கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் 
அளப்பறிய நன்மைகளை வழங்குகிறான்.

ஐந்தாவது வகை: மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து ஷரத்துகளையும்,சுன்னத்துகளையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லா வின்முன் அல்லாஹ் இருப்பதை போன்ற உள்ளச்சத்துடன் தொழுகிறான்.

இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்த தொழுகைக்குமுள்ள வித்தியாசம்.
அதில்  உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும்அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு  இருக்காது.

ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப் தன் முன்னால் இருப்பதை  உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுகவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது.
இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை.
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ் வின் பால் அவனை நெருங்கச்செய்யும்.

சொல்லுங்கள் சகோதரர்களே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை?

 வாருங்கள்
நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம்.
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி,பாஜில் மன்பஈ,தேவ்பந்தி

Thursday, December 17, 2020

எந்த வகை மனிதர் நீங்கள்?

எந்த வகை மனிதர் நீங்கள்?

                                -கணியூர் இஸ்மாயில் நாஜி.பாஜில் மன்பஈ, தேவ்பந்தி
---------------------------------------------------------

நான்கு வகையான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்.

1,வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

2, வணக்கசாலிகள்,  சிரமமான வாழ்க்கை

3, பாவம்செய்பவர்;  மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

4, பாவம் செய்பவர்: சிரமமான வாழ்க்கை

இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால்

அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்.

ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்
مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌  وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 16:97)

நீங்கள் நான்காவது நபராக இருந்தால்

அதுவும் இயல்பான ஒன்று தான்.
பாவம் செய்பவருக்கு  பல நேரங்களில் உடனுடக்குடன் தண்டனை கிடைக்கிறது
ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்;

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ 
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)

நீங்கள் இரண்டாவது வகை நபராக வணக்கசாலியாக இருந்தும் சிரமமான வாழ்க்கையாக இருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று அல்லாஹ் உங்களை நேசித்து உங்களை சோதிப்பதின் மூலம் உங்களின் அந்தஸ்த்தை உயர்த்த நாடியிருக்கலாம்.

அல்லாஹ் சொல்கிறான்;
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ 
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)

அல்லது, உங்கள் வணக்கங்களில் குறைபாடு ஏற்பட்டு அதில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அல்லது ஏதேனும் பாவமான காரியங்களில் ஈடுபட்டு அதைப்பற்றிய சிந்தனையில்லாமல் இருந்தால் உங்களை தன் பால் தவ்பா செய்து ஈர்க்க அல்லாஹ் செய்யும் ஏற்பாடாக  உங்களுக்கு துன்பத்தைத் தரலாம்.

அல்லாஹ் சொல்கிறான்;

وَلَنـــُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ 
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
(அல்குர்ஆன் : 32:21)

நீங்கள்  மூன்றாவது நபராக பாவங்கள் பல செய்தும் இவ்வுலக வாழ்க்கை மேலும் மேலும் இன்பகரமான வாழ்க்கையாக இருந்தால் 
என் அன்புச்சகோதரனே! எச்சரிக்கை,எச்சரிக்கை
இது மெது,மெதுவாக உங்களை அழிவின் பால் இட்டுச்செல்லும் தூண்டிலாக இருக்கலாம். நிரம்பவும் ஆபத்தான வாழ்க்கை இது

அல்லாஹ் சொல்கிறான்;

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ  حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏ 
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
(அல்குர்ஆன் : 6:44)

விழித்துக்கொள். திருத்திக்கொள்.

அல்லாஹ் நம்மை காப்பானாக! என்றென்றும் அவனுக்கு நன்றியுள்ள நல்லடியாராக வாழ வைப்பானாக! ஆமீன்.
أقوال و دروس شيخ الإسلام ابن تيمية 
என்ற அரபி முக நூல் பக்கத்திலிருந்து தமிழாக்கம்  கணியூர் இஸ்மாயீல் நாஜி

டிசம்பர்-18 உலக அரபி மொழி தினம்

டிசம்பர் - 18 உலக அரபி மொழி தினம்
- அ. முஹம்மது கான் பாகவி

ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் நாளை உலக அரபி நாளாக 2010இல் அறிவித்தது. முக்கிய அம்சங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்து, அதை உலகெங்கும் கொண்டாடுவதும் கொண்டாடச் சொல்வதும் ஐ.நா.வின் பணிகளில் ஒன்று. அவ்வாறு செய்ய வேண்டுமானால், அப்பொருள் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

மொழிதான் ஒரு சமூகத்தின் வரலாறு; காலசாரம்; புவியியல்; சிந்தனை; கனவு….. எல்லாம். உலகத்தில் சுமார் 10 ஆயிரம் மொழிகள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1977ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலக மொழிகளின் பதிவு’ என்ற நூல் 20ஆயிரம் மொழிகளும் வழக்குகளும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. மூலமொழிகள் நான்காயிரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் 18 மொழிகள் செம்மொழிகளாக அறியப்படுகின்றன. அவற்றுள் அரபிமொழியும் ஒன்று. செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளும் அரபிக்கு உண்டு. உலக அளவில் அரபி மொழி பேசுவோர் 323 மில்லியன்பேர் என்கிறது ஒரு புள்ளி விவரம். அரபு நாடுகளின் மக்கட் தொகையின்படி இந்த எண்ணிக்கை சரியாக இருக்கலாம். இதற்கேற்ப உலக மொழிகளில் மூன்றாவது இடத்தை அரபி பெறுகிறது. சீனாவும் ஸ்பெய்னும் முதலிரு இடங்களைப் பெறுகின்றன.

கணக்கெடுப்பின்படி பார்த்தால் உலகில் அரபிமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட வர்கள் சுமார் 175-185 மில்லியன்பேர் உள்ளனர். இதன்படி அரபி மொழிக்கு 25ஆம் இடம் கிடைக்கும்.

அரபிமொழியின் தனித்தன்மைகள் என்று பார்த்தால் நிறைய உண்டு. முதல் தரமாக, அது இறுதி வேதமாம் திருக்குர்ஆனின் மொழி என்ற சிறப்பே அதற்குக் கிடைத்த மாபெரும் செல்வாக்கு ஆகும். அவ்வாறே நபிமொழியின் மொழியாகவும் அவ்விரண்டின் தொடர்பில் பிறந்த இலக்கியங்களின் மொழியாகவும் அரபி விளங்குகிறது.

மூன்றெழுத்து மொழி என்பது அரபியின் அடுத்த சிறப்பாகும். பெயரில் மட்டும் மூன்றெழுத்து (ஐன், ரா, பா) இருப்பதாகக் கருத வேண்டாம். அரபிச் சொற்களின் வாய்பாடுகள் பெரும்பாலும் மூன்றெழுத்து கொண்டவையாகவே இருக்கும். இதனாலேயே ‘ஃபஅல’ எனும் வாய்பாட்டை அடிப்படையானதாக அரபியர் கொண்டனர். அத்துடன் வினைவடிவங்கள் சொல்லிலேயே முக்காலத்தில் ஒன்றைப் பிரதிபலிப்பவையாக இருப்பது தனிச்சிறப்பாகும்.

அரபி மொழிக்குள்ள மிகப்பெரும் தனிச் சிறப்பு என அதன் இரத்தனச் சுருக்கத்தைக் கூறலாம். பொதுவாக உரை என்பது, இயல்பிலேயே சுருக்கமானதாக இருப்பதுதான் அதன் பலமே. இதனாலேயே, ஒரு வரி அரபி வாக்கியத்தைப் பிறமொழிகளில் பெயர்க்கும்போது குறைந்தபட்சம் மூன்று வரிகள் தேவைப்படுகின்றன.

திருக்குர்ஆன் இதற்கு மிகச் சரியான சான்றாகும். நபிமொழிகள் அடுத்த சான்று.

கனடாவைச் சேர்ந்த ஒரு தத்துவ அறிஞரிடம் அவருடைய மாணவர்கள், இந்த குர்ஆனைப் போன்ற ஒன்றை எங்களுக்காக நீங்கள், ஏன் படைக்கக் கூடாது? என்று பேச்சோடு பேச்சாகக் கேட்டுவைத்தனர். சரி என்று ஏற்றுக்கொண்ட தத்துவமேதை ஒருசில வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டு, நீண்டநாள் தலைமறைவாகிவிட்டார்.

பிறகு ஒருநாள் வெளியே வந்து நண்பர்களிடம் சொன்னார்: சத்தியமாகச் சொல்கிறேன்; இது என்னாலும் முடியாது; வேறு யாராலும் முடியாது. குர்ஆனைத் திறந்தேன்; ‘அல்மாயிதா’ அத்தியாயம் கண்ணில் பட்டது. அதன் முதலாம் வசனத்தை நோட்டமிட்டேன். இரண்டு வரிகள்தான். ஆனால், அதில் ஒளிந்திருந்த பொருள்கள் பல!

ஆம்! ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்கிறது! மோசடிக்குத் தடை விதிக்கிறது. சிலவற்றைப் பொதுவாக ஹலால் ஆக்குகிறது. பிறகு ஒன்றன்பின் ஒன்றாக விலக்கு அளிக்கிறது. இறைவனின் ஆற்றலையும் சட்டமியற்றும் வல்லமையையும் பறைசாற்றுகிறது…. எல்லாம் இரண்டே இரண்டு வரிகளில்.

இறைநம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்குச் சொல்லப்பட இருக்கின்றவை நீங்கலாக, மற்ற கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருக்கும்போது வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிடக் கூடாது. அல்லாஹ், தான் நாடுவதைச் சட்டமாக்குகின்றான். (5:1) இதுதான் அந்த வசனம்!

அரபி மூலத்தில் இரண்டு வரிகள்தான் உள்ளன. தமிழாக்கத்தில் அடைப்புக் குறியை நீக்கிய பிறகும்கூட இத்தனை வரிகள் தேவை! இதுதான் அரபிமொழியின் – திருக்குர் ஆனின் சொல்லாட்சி மகத்துவம். (அபூபக்ர் அந்நக்காஷ்)

இன்னொன்றைச் சொல்லலாம்! அரபிமொழியில் உள்ள நெடுங்கணக்கு 28 எழுத்துக்களைக் கொண்டது. இவற்றில் குறைந்தது 6 எழுத்துகளின் உச்சரிப்போ மொழிதலோ வேறு மொழிகளில் இல்லை. ளாத், ஐன், ஃகா, ஸாத், தோ, காஃப் ஆகியவையே அந்த ஆறு எழுத்துகளாகும்.

அரபிமொழி ஏற்கெனவே ஐ.நா. சபையால் அங்கீகர்க்கப்பட்ட 6 மொழிகளில் ஒன்றாகும். இப்போது டிசம்பர் – 18ஆம் நாளை உலக அரபி நாளாகவும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்தது 1973 டிசம்பர் – 18ஆம் நாள் என்பதால் அந்தத் தொடர்பிலேயே டிசம்பர் – 18ஐ உலக நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நாளை, அரபிமொழி கற்பிக்கும் மதரசாக்கள், அரபிக் கல்லூரிகள், பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தலாம். சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரபி மற்றும் உருது, ஃபார்சி துறை சென்ற ஆண்டிலிருந்து இந்நாளைச் சிறப்பாக அனுசரித்துவருகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரபி உரைகள், சிறப்பு விருந்தினரின் நிறைவான அரபி உரை, உரை நாடகம்… என அரபித் துறை பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சென்னை புதுக்கல்லூரி, வண்டலூர் புகாரியா, பிலாலியா ஆகிய கல்லூரிகளும் இவ்வாண்டு முதல் இந்நாளைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

கடந்த 18.12.2013 புதன் காலை சென்னைப் பல்கலை அரபித் துறை நடத்திய உலக அரபி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாணவ, மாணவியர் ஆற்றிய அரபி உரைகளைக் கேட்டுச் சிலிர்த்துப்போனேன். அழகான உரைகள்; ஆழமான கருத்துகள். முனைவர் ஜாகிர் ஹுசைன் பாகவி, முனைவர் அன்பர் பாதுஷா உலவி முதலான பேராசிரியர்களின் உழைப்பு நன்றாகவே வெளிப்பட்டது.

இன்னும் முஸ்லிம் கல்லூரிகள், பெண்கள் மதரசாக்கள், அரபிக் கல்லூரிகள் என எத்தனையோ கல்லூரிகள் உள்ளன. அங்கெல்லாம் இந்நாளை ஏன் நல்ல முறையில் பயன்படுத்தக் கூடாது? அரபி மெழியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, பரிசுகள் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தலாம் அல்லவா?

இதன்மூலம், மாணவர்களின் அரபிமொழி ஆற்றல் வளரவும் குர்ஆனின் மொழி கௌரவப்படுத்தப்படவும் இதை முன்னிட்டு சமுதாய மக்களுக்கு அரபிமொழி மீதான ஆர்வம் பிறக்கவும் வழி உண்டாகுமல்லவா? சொல்லுங்கள்!

வாழ்க! அரபிச் செம்மொழி!

By...
Mohamed Khan Baqavi Hazrath

Wednesday, December 16, 2020

குசைமா பின் ஸாபித் பொய் சொன்னார்களா

குசைமா பின் ஸாபித் என்ற நபி தோழர் பொய் சொன்னார்களா?? 
----------------------------------------------------------------------------------------------------
அதற்கு நபிகள் நாயகம் துணை நின்றார்களா???
பொய் என்றால் என்ன ?உண்மை என்றால் என்ன ?
-------------------------------------------------------------------------------------

1964 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் மன்பவுல்உலா  மதரஸாவில் ஓதினேன். அங்கு “மன்தீக்” என்று சொல்லப்படும் “லாஜிக்” பாடத்தை மறைந்த கம்பம் அப்துல் கனி ஹஜ்ரத் அவர்களிடம் கற்றேன். அவர்கள் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்
அவர்களிடம்  “ஹக் என்றால் என்ன?”, “ஸித்க் என்றால் என்ன?” என்று கேட்டேன்.
ஏனென்றால் “ஹக்” என்பதற்கும் “ஸித்க்” என்பதற்கும் “உண்மை” என்றே பொருள் கொள்கிறோம். அதற்கு ஹஜ்ரத் அவர்கள் குர்ஆனுடைய அடிப்படையில் நீண்ட ஒரு விளக்கத்தை தந்தார்கள்.
அதை நான் இங்கே மிக சுருக்கமாக பதிவு செய்கிறேன்.
“ஹக்” என்றால் எது நிலையாக இருக்கின்றதோ, உறுதியாக இருக்கின்றதோ,எது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதோ   அவைகளை ஹக் என்று சொல்வார்கள்.
“குர்ஆன், அல்லாஹ், நபி, மறுமை நாள்,” இவற்றை எல்லாம் குர்ஆன் ஹக் என்று சொல்கிறது. ஏனென்றால் அவை எல்லாம் உறுதியானவை, நிலையானவை.
உண்மை நிலைக்கு ஏற்ப ஒருவர் பேசினால் அதற்கும் “ஹக்கை” பேசினார் என்று சொல்லப்படும்.
“ஸித்க்” என்பது பேசு கின்ற ஒருவர் உளப்பூர்வமாக எதை நம்புகிறாரோ அதை பேசினால் அதற்கு “ஸித்க்” என்று சொல்லப்படும். அவர் சொல்வது உண்மை நிலைக்கு மாற்றமாக இருந்தாலும் சரியே.
“கித்ப்” என்பது ஒருவர்  தன்  உள்ளத்தில் பொய் என நம்பிக்கொண்டு உண்மையான செய்தியை சொன்னாலும் அது பொய்யென்றே சொல்லப்படும். 
இரண்டிற்கும் ஹஜ்ரத் நடைமுறை உதாரணத்தின் மூலம் விளக்கினார்.
“உன்னை தலைமை ஆசிரியர் அழைத்து, அப்துல் கனி ஹஜ்ரத் இருக்கிறாரா? என பார்த்து வா என்று சொல்லி அனுப்புகிறார். நீ என் அறை  வாசலுக்கு வருகிறாய். என் அறை  கதவு மூடி இருக்கிறது. வாசலில் என்னுடைய செருப்பு இருக்கிறது. செருப்பு இருப்பதனால் நான் உள்ளே இருப்பதாக நினைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்று, “கதவு சாத்தி இருக்கிறது. ஹஜ்ரத் உள்ளே இருக்கிறார்கள்.” என்று சொல்கிறாய்.
ஆனால், செருப்பு அறுந்து விட்ட காரணத்தால் அந்த செருப்பை வாசலில் போட்டு விட்டு நான் வேறு செருப்பை அணிந்து கொண்டுவெளியே சென்று விட்டேன்.
இப்பொழுது, நான் உள்ளே இருக்கிறேன் என்று நீ சொன்னது பொய் அல்ல “ஸித்க்” உண்மை. ஏனென்றால் நான் இருக்கிறேன் என்று நம்பியதால் சொல்கிறாய். 
ஆனால், அது “ஹக்” அல்ல. ஏனென்றால் அது உண்மை நிலைக்கு மாற்றமானது.
இதற்கு நேர் மாற்றமாக உண்மையான ஒரு நிகழ்வை ஒருவன் அது பொய் என்று நினைத்து கொண்டு அந்த உண்மையை சொன்னாலும் அது பொய் தான். ஏனென்றால், அவன் உள்ளத்தால் அதை பொய் என்று நம்புகிறான்.
உதாரணாமாக, குர்ஆனில் நயவஞ்சகர்களை பற்றி சொல்லும் பொழுது, 
63:1    إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
63:1. (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்.
இங்கே, நயவஞ்சகர்கள் நீங்கள் அல்லாஹ்வுடைய ரஸூல் என்று “ஹக்” ஆன உண்மையான செய்தியை தான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளத்தில் அதை பொய்யென நினைப்பதால் அல்லாஹ் அவர்களை பொய்யர்கள் என்று சொல்கிறான்.
    அதே நேரத்தில் மறைவானவற்றை நம்புகிற ,கண்ணால் பார்க்காத அல்லாஹ்வையும் ,மலக்குகளையும் ,சொர்க்க நரகத்தையும், நபிமார்களையும் நம்புகிற விசுவாசிகளை  அல்லாஹ் ஸாதிக்கீன்கள் உண்மையாளர்கள் என்கிறான். ஏனென்றால் அவர்களின் உள்ளம் எதை நம்புகிறதோ  அதனை உரக்க சொல்கிறார்கள் எனவே அவர்கள் உண்மையாளர்கள்.
 ஆனால் முனாஃபிக்குகள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன் நின்று அவர்களின் உள்ளம்  நம்பாத உண்மையை பொய் என எண்ணி  உரக்க சொல்கிறார்கள்,எனவே அவர்கள் பொய்யர்கள் “
 இந்த விளக்கத்தின்  அடிப்படையில் ஸஹாபி நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  உண்மை மட்டுமே பேசுவார்கள் என்ற நம்பிக்கையில்  சாட்சி சொல்ல முன் வருகிறார் இது எப்படி பொய் ஆகும் அவர் வியாபாரம் நடக்கும் பொழுது நான் பார்த்தேன் என்று சொல்லவில்லையே, அப்படி சொல்லியிருந்தால் அதை பொய் என்று சொல்லலாம்.
   இருவர் காஜியிடம் தாங்கள் பெருநாள் பிறையை பார்த்தாக சொல்கிறார்கள் ,ஆனால் அவர்கள் முஸ்லிமா,?உண்மை பேசுபவர்களா? என காஜிக்கு தெரியாது ,இந்த நேரத்தில் காஜிக்கு நன்கு அறிமுகமான இருவர் இந்த இருவரைப்பற்றி எங்களுக்கு தெரியும்,இவர்கள் உண்மையாளர்கள் என சாட்சி  சொன்னால் இவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களின் பிறை தெரிந்தது என்ற சாட்சியத்தை  காஜி ஏற்றுக்கொள்ளலாம் என மார்க்க சட்டம் சொல்கிறது.

Friday, December 11, 2020

‎هل ‏للمراة ‏قللين

هل للمرأة قلبين ؟؟؟
نعم. ﺃﺛﺒﺖ ﺍﻟﻘﺮﺁﻥ ﺃﻥ ﻟﻠﻤﺮﺃﺓ ﻗﻠﺒﻴﻦ ..!!
ﻓﻲ ﺇﺣﺪﻯ ﺍﻟﻤﺤﺎﺿﺮﺍﺕ ﺍﻟﺘﻲ ﺗﻀﻢ ﺍﻟﻌﺪﺩ ﺍﻟﻜﺒﻴﺮ ﻭﺍﻟﻜﺒﻴﺮ ﻣﻦ ﺍﻟﻄﻼ‌ﺏ ..
ﻛﺎﻥ ﺍﻟﺪﻛﺘﻮﺭ ﻳﺘﺤﺪﺙ ﻋﻦ ﺍﻟﻘﺮﺁﻥ ﺍﻟﻜﺮﻳﻢ
ﻭﻣﺎ ﻳﺤﻤﻠﻪ ﻣﻦ ﻓﺼﺎﺣﺔ ﻭﺩقه ﻋﺠﻴﺒﺔ ..ﻟﺪﺭﺟﺔ أﻧﻪ ﻟﻮ ﺍﺳﺘﺒﺪل ﻛﻠﻤﺔ ﻣﻜﺎﻥ ﻛﻠمه ﻟﺘﻐﻴﺮ ﺍﻟﻤﻌﻨﻰ ﻭﻛﺎﻥ ﻳﻀﺮﺏ ﺃﻣﺜﻠﻪ على ﺬﻟﻚ ..
ﻓﻘﺎﻡ ﺃﺣﺪ ﺍﻟﻄﻼ‌ﺏ الملحدين ﻭﻗﺎﻝ : ﺃﻧﺎ ﻻ‌ ﺃؤﻣﻦ ﺑﺬﻟﻚ ﻓﻬﻨﺎﻟﻚ ﻛﻠﻤﺎﺕ ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﺗﺪﻝ ﻋﻠﻰ ﺭﻛﺎﻛﺘﻪ ..!!!!
ﻭ ﺍﻟﺪﻟﻴﻞ ﻫﺬﻩ ﺍﻵ‌ﻳﺔ

(( ﻣَّﺎ ﺟَﻌَﻞَ ﺍﻟﻠَّﻪُ ﻟِﺮَﺟُﻞٍ ﻣِّﻦ ﻗَﻠْﺒَﻴْﻦِ ﻓِﻲ ﺟَﻮْﻓِﻪِ )) ..
ﻟﻤﺎﺫﺍ ﻗﺎﻝ ﺭﺟﻞ ﻭﻟﻢ ﻳﻘﻞ ﺑﺸﺮ ..؟؟
ﻓﺠﻤﻴﻊ ﺍﻟﺒﺸﺮ ﻻ‌ ﻳﻤﻠﻜﻮﻥ إﻻ‌ ﻗﻠﺒﺎً ﻭﺍﺣﺪﺍً بجوﻓﻬﻢ ﺳﻮﺍﺀ ﻛﺎﻧﻮﺍ ﺭﺟﺎﻻً‌ ﺃﻭ ﻧﺴﺎﺀ ..
ﻓﻲ ﻫﺬﻩ ﺍﻟﻠﺤﻈﺔ ﺣﻞ ﺑﺎﻟﻘﺎﻋﺔ ﺻﻤﺖ ﺭﻫﻴﺐ .. ﻭﺍﻷ‌ﻧﻈﺎﺭ ﺗﺘﺠﻪ ﻧﺤﻮ ﺍﻟﺪﻛﺘﻮﺭ ﻣﻨﺘﻈﺮﺓ ﺇﺟﺎﺑﺔ ﻣقنعه ..؟؟
ﻓﻌﻼً‌ ﻛﻼ‌ﻡ ﺍﻟﻄﺎﻟﺐ ﺻﺤﻴﺢ ﻻ‌ ﻳﻮﺟﺪ في ﺠﻮﻓﻨﺎ ﺇﻻ‌ ﻗﻠﺐ ﻭﺍﺣﺪ ..
ﺳﻮﺍﺀ ﻛﻨﺎ ﻧﺴﺎﺀ ﺃﻭ ﺭﺟﺎﻻ‌ ..
ﻓﻠﻤﺎﺫﺍ ﻗﺎﻝ ﺍﻟﻠﻪ عز وجل لرجل .!!؟؟ اقرؤوا الإجابة :
ﺍﻟﺘﻲ ﺗﺤﻤﻞ ﺇﻋﺠﺎﺯاً ودقة ..
ﻣﻦ ﺍﻟﻤﺴﺘﺤﻴﻞ ﺍﻟﺘﻮﺻﻞ ﺇﻟﻴها ﺇﻻ‌ ﺑﺎﻟﺘﺄﻣﻞ ﻭﺍﻟﺘﻔﻜﻴﺮ ﺍﻟﻌﻤﻴﻖ ﺑﺂﻳﺎﺕ ﺍﻟﻠﻪ ..

ﻗﺎﻝ ﺍﻟﺪﻛﺘﻮﺭ ﻟﻠﻄﺎﻟﺐ : ﻧﻌﻢ ﺍﻟﺮﺟﻞ ﻫﻮ ﺍﻟﻮﺣﻴﺪ ﺍﻟﺬﻱ ﻣﻦ ﺍﻟﻤﺴﺘﺤﻴﻞ ﺃﻥ ﻳﺤﻤﻞ ﻗﻠﺒﻴﻦ ﻓﻲ ﺟﻮﻓﻪ ..
ﻭﻟﻜﻦ ﺍﻟﻤﺮﺃﺓ ﻗﺪ ﺗﺤﻤﻞ ﻗﻠﺒﻴﻦ ﺑﺠﻮﻓﻬﺎ ﺇﺫﺍ ﺣﻤﻠﺖ ..
ﻓﻴﺼﺒﺢ ﺑﺠﻮﻓﻬﺎ ﻗﻠﺒﻬﺎ ﻭﻗﻠﺐ ﺍﻟﻄﻔﻞ ﺍﻟﺬﻱ ﺑﺪﺍﺧﻠﻬﺎ ..
ﺍﻧﻈﺮﻭﺍ ﺇﻟﻰ ﻣﻌﺠﺰﺓ ﺍﻟﻠﻪ ﺑﺎﻷ‌ﺭﺽ !!ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ ﻣﻌﺠﺰﺓ
ﺑﻜﻞ ﻛﻠمه .. بكل آية فيه .
ﻓﺎﻟﻠﻪ ﻻ‌ ﻳﻀﻊ ﻛﻠمه ﻓﻲ ﺁﻳﺔ ..
ﺇﻻ‌ ﻟﺤﻜﻤﺔ ﺭﺑﺎﻧيه ﻭﻟﻮ ﺍﺳﺘﺒﺪﻟﺖ ﻛﻠمه ﻣﻜﺎﻥ ﻛﻠمه ﻻ‌ﺧﺘﻠﺖ ﺍﻵ‌ﻳه
اذا أتممت القراءة علق بالصلاة على رسول الله لتصلك باقي المنشورات وجزاكم الله خيرا❤️

Wednesday, December 9, 2020

قصة ‏جمبلة

#قصه_جميله_ثمانية_أعجبتنى !!!!!

سأل أحد العلماء تلميذه :
منذُ متى صحبتني ؟
فقال التلميذ : منذُ ثلاثٍ وثلاثين سنة.
فقال العالم :
فما تعلمت منّي في هذه المدّة ؟
قال التلميذ : ثمانيَ مسائل.
قال العالم : إنّا لله وإنّا إليه راجعون ... !!
ذهب عمري معك ولم تتعلّم إلا ثماني مسائل فقط !
قال التلميذ : لم أتعلم غيرها ولا أحبّ أن اكذب عليك .
#فقال_العالم : هات ما عندك لأسمع .

#قال_التلميذ:

#الأولى : أني نظرت إلى الخلق فرأيت كلّ واحد يتخذ صاحباً ، فإذا ذهب إلى قبره فارقه صاحبُه ، فصاحبتُ الحسنات فإذا دخلتُ القبر دخلتْ معي .

#الثانية : أني نظرت في قول الله تعالى : " وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنّة هي المأوى " فأجهدت نفسي في دفع الهوى حتى استقرت على طاعة الله .

#الثالثة : أني نظرت إلى الخلْق فرأيت أنّ كلّ من معه شيءٌ له قيمة حفظه حتى لا يضيع ثم نظرت إلى قول الله تعالى :"ما عندكم ينفد وما عند الله باق " فكلما وقع في يدي شيءٌ له قيمة وجهته لله ليحفظه عنده.

#الرابعة: أني نظرت إلى الخلق فرأيت كلاً يتباهى بماله أو حسبه أو نسبه ثم نظرتُ إلى قول الله تعالى : " إنّ أكرمكم عند الله اتقاكم " فعملتُ في التقوى حتى أكونَ عند الله كريماً.

#الخامسة : أني نظرت إلى الخلق وهم يتحاسدون على نعيم الدنيا فنظرتُ إلى قول الله تعالى : "
نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا " فعلمتُ أن القسمة من عند الله فتركتُ الحسد عنّي .

#السادسة : أني نظرتُ إلى الخلق يعادي بعضهم بعضاً ويبغي بعضهم بعضا ويقاتل بعضهم بعضاً ونظرتُ إلى قول الله تعالى : " إنّ الشيطان لكم عدوّ فاتخذوه عدوّا " فتركتُ عداوة الخلق وتفرغتُ لعداوة الشيطان وحده .

#السابعة: أني نظرتُ إلى الخلق فرأيتُ كل واحد منهم يُكابد نفسه ويُذلّها في طلب الرزق حتى أنّه قد يدخل فيما لا يحلّ له فنظرتُ إلى قول الله تعالى : " وما من دابّة في الأرض إلا على الله رزقها " فعلمتُ أنّي واحدٌ من هذه الدوابّ ، فاشتغلتُ بما لله عليّ وتركتُ ما ليَ عنده .

#الثامنة : أنّي نظرتُ إلى الخلق فرأيتُ كلّ مخلوق منهم متوكّلاً على مخلوق مثله ؛ هذا على ماله وهذا على ضيعته وهذا على مركزه ونظرتُ إلى قول الله تعالى : " ومن يتوكّل على الله فهو حسبه " فتركتُ التوكّل على المخلوق واجتهدتُ في التوكّل على الله الخالق.
قال له الشيخ من اﻵن أنا تلميذك 

#ما أحقر الدنيا في تلك اللحظات!!
"لا إلــــــه إلا الــــــلــــــه"
فما طابت الدنيا إلا بذكره. .
ولا طابت الآخرة إلا بعفوه. .

#أسأل الله أن يجمعني بكم في الجنة!
ويجعلنا ممن قال فيهم:
(وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة) 

#خير الصاحب من أحبك في الله، وذَكَّرَك بالله، وخوفك من غضب الله، ورغبك في لقاء الله.

#إن شاء الله تكون صدقه جاريه لكل من قرأها وشاركها  .

إذا أتممت القراءه أكتب أشياء تؤجر عليها
1- صل على النبي صل الله عليه وسلم
2- لا إله إلا الله محمد رسول الله
3-تسبيح
4-استغفار
جعلها الله في ميزان حسناتك

Saturday, December 5, 2020

அனுபவம்

الاخطاء تجعلك حكيما

و الالم تجعلك قويا

உன்னைஅறியாமல் செய்யும் தவறுகள் 
உன்னை அறிவாளியாக்கும்.
பிறர் உனக்கு இழைக்கும் வேதனைகள் உன்னை பலசாலியாக்கும்.
அரபு பழமொழி

Friday, November 27, 2020

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

சிந்தித்துசெயல்படுங்கள்

#இன்று நீங்கள் ஒருவருக்கு அநீதி இழைத்தால் என்றாவது ஒருநாள் நீங்களும்
அநீதீ இழைக்கப்படுவீர்.

#இன்று ஒருவருக்கு எதிராக நீங்கள்
பொய் சொன்னால் என்றாவது ஒருநாள்
உங்களுக்கெதிராக யாராவது ஒருவரால் பொய்யுரைக்கப்படுவீர்.

#இன்று  ஒருவரை ஏமாற்றினால்
நாளை இன்னொருவரால் ஏமாற்றப்படுவீர்.

#இன்று இன்னொருவரின் சொத்தைநீங்கள்
அபகரித்தால் உங்கள சொத்து வேறொருவரால் என்றாவது ஒருநாள் அபகரிக்கப்படும். 
 
 #நாளை  மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வாறே
 #இன்று  நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

 நீங்கள் அல்லாஹ் வின் நேரடி  கண்காணிப்பில் இருப்பதை மறந்து விடாதீர்.
   ----அரபி டுவிட்டரிலிருந்து 
கணியூர் நாஜி(2017)

Thursday, November 26, 2020

இவ்வுலக வாழ்க்கயை நீருக்கு ஒப்பிட்டது ஏன்?

وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ 
 இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; 
(அல்குர்ஆன் : 18:45)

இவ்வுலக வாழ்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருக்கு ஒப்பிட்டான்?

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் தங்களுடைய விரிவுரையில்
 குறிப்பிடுகிறார்கள் : 
உலக வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உண்டான பொருத்தத்தை அறிஞர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்.

1 - தண்ணீர் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காது. அதே போன்று உலகமும் ஒரே நபரிடம் தங்கிருக்காது.

2 - தண்ணீர் ஒரே நிலையில் இருக்காது. அதனுடைய தன்மை மாறிவிடும்.இவ்வுலகமும் அவ்வாறு தான்.

3 - தண்ணீர் வற்றி காய்ந்துவிடும். அதுபோல, இவ்வுலகமும் ஒருநாள் அழிந்துவிடும்.

4 - தண்ணீரில் மூழ்கியவன் ஈரம்படாமல் வெளி வர முடியாது. அதேபோன்று, இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியவன் அதனுடைய குழப்பத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியாது.

5 - தண்ணீர் அளவுடன் இருந்தால் பலன் தரும் வளர்ச்சியை கொடுக்கும். அளவு கடந்தால் அழிவை தரும் துன்பத்தை தரும்
. இவ்வுலக  இன்பங்களும்அப்படித்தான் நமக்கு தேவைக்கேற்ப இருந்தால் பலன் தரும்.அளவிற்கு மிஞ்சினால் அழிவு நிச்சயம்.
---------77கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ

முஸ்லிம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

முஸ்லிமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்
*********************************************
   இமாம் பகரிப்னு அப்துல்லாஹ்அல்முஜ்னி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
 உன்னை விட வயதில் மூத்தவர்களை
கண்டால் இவர் என்னைவிட ஈமானிலும் நல்லமல்கள் புரிவதிலும் முந்திக்கொண்டார் எனவே  இவர் என்னை விட சிறந்தவர் எனச் சொல்.

உன்னை விட வயதில் குறைந்தவர்களைக் கண்டால் பாவங்கள் புரிவதிலும், குற்றங்கள் செய்வதிலும் இவரை விட நான் முந்திக்கொண்டேன்.  எனவே இவர் என்னைவிட சிறந்தவர் எனச் சொல்.
   
உன்னுடைய சகோதர்கள் உன்னை கண்ணியப்படுத்தினால்,சிறப்பு செய்தால் அது அவர்களின் பெருந்தன்மை எனச் சொல்
  
உன் விடயத்தில் அவர்களிடம் ஏதேனும் குறைகளைக் கண்டால் இதற்கு நான் செய்த பாவம்தான் காரணம் எனச் சொல்.
*****************************************
  ஒரு முறை ஜும்மா குத்பாவில் ஹஜரத் அமீருல்முஃமினீன் உமர்(ரழி)அவர்கள் சொன்னார்கள்:
முஃமினீன்களே பணிவுடன் இருங்கள் யார் ஒருவர் அல்லாஹ்விற்காக தன்னை இப்படித் தாழ்த்திக்கொள்கிறானோ (அப்பொழுது தனது உள்ளங்கையை தரையின்  பக்கம் திருப்பி கையை கீழே தாழ்த்தினார்கள்) அவரை அல்லாஹ் இப்படி உயர்த்துவான்(அப்பொழுது உள்ளங்கையை வானத்தின் பக்கம் திருப்பி கையை மேலே உயர்த்தினார்கள்.)
   நூல்:அஹ்மது
 ------தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ
--------------------------------

Thursday, November 19, 2020

நம்பிக்கையைத் திருடாத திருடன்

 


திருடன் ஒருவன் பாதையில் மணிபர்ஸ் ஒன்றுகிடப்பதைக் கண்டு எடுத்துப் பார்த்தான்.

அதில் நிறையப் பணமும் அதன் உரிமையாளரின் முகவரியும் இறைவனிடம் பாதுகாப்புவேண்டி ஒரு துஆவும் எழுதப்பட்ட சீட்டுமிருந்தன..

அந்தத் திருடன் உரிமையாளரிடம் அதை ஒப்படைத்தான்.

அவன் ஒரு திருடன் என்பதை அறிந்திருந்த அந்த உரிமையாளர்
'நீதான் திருடனாயிற்றே பணத்தை எடுத்துக் கொள்ளாமல் ஏன்ஒப்படைக்கிறாய்? எனக்கேட்டார்.

இந்தப் பணத்தை 'அல்லாஹ் பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் அதில் துஆவை எழுதிவைத்திருக்கிறீங்க'

இந்த துஆவின் பரக்கத்தால் பணம் காணாமல் போனாலும் திரும்ப கிடைத்துவிடும் என்றநம்பிக்கையில் எழுதிவைத்திருக்கிறீங்க

அந்த நம்பிக்கையை நான் திருட விரும்பவில்லை. ஒரு வேளை இந்தப் பணம் உங்களுக்குக் கிடைக்காமல்
உங்களின் இறைநம்பிக்கையில் சற்று பலவீன மேற்பட்டாலும் உங்களின் இறைநம்பிக்கையை திருடிய குற்றத்திற்கு நான் ஆளாவேன்.

நான் சராசரி திருடன் தான் ஆனால்
பணம் காசு,தங்கம் போன்றவைகளை திருடினால் ஏற்படும் பாவத்தை விட ஒருவனின் இறைநம்பிக்கையைத் திருடுவது பெரும் பாவம் என கருதினேன்'
எனவே இதை உங்களிடம் ஒப்படைத்தேன்' என்றான் திருடன்.

----அல்லாஹ் யாருக்கு எப்பொழுது ஹிதாயத்தைத் தருவான் என்பதை யாராலும் உறுதியுடன் கூறமுடியாது.
-----உருது இணையதளத்திலிருந்து
கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Saturday, November 14, 2020

ஈத்துவக்கும் இன்பம்

ஈத்துவக்கும் இன்பம்
_____________

    பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள்என்ன விலை? என்று கேட்டார்.
 வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய்
ஆப்பிள் 30ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார் 

அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க வியாபாரி வாழைப்பழம் கிலோ 5 ரூபாய் ஆப்பிள் கிலோ 10 ரூபாய் என்று சொன்னார்
அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னார்

 இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் தன்னிடம் விலை அதிகமாக சொல்லிவிட்டாரே என கோபப்பட்டு வியாபாரிடம் பேசத் தொடங்கினார்

 'எதுவும் பேசவேண்டாம்' என கண்களால் வியாபாரி  சைகை செய்தார் 

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொகையைக் கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு 

அல்லாஹ்வுக்கே நன்றி என்னுடைய குடும்பத்திற்கு இது  போதுமானதாக இருக்கும் என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்

 அப்பெண்மணி சென்ற பின்னர்
 வியாபாரி அந்த மனிதனைப் பார்த்து:

 சகோதரரே கோபித்துக் கொள்ளாதீர் உங்களை ஏமாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல நான் அல்லாஹ்வுடன்  வியாபாரம் செய்கிறேன்

 அந்தப் பெண்மணி   தனக்குக் கிடைக்கும்சொற்ப வருமானத்தை 
வைத்து ஆதரவற்ற நான்கு  குழந்தைகளை பராமரித்து வருகிறார்

   அவர் யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பவில்லை நானும் பலமுறை அவருக்கு உதவி செய்ய விரும்பினேன் ஆனாலும் அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை

  எனவே நான் யோசனை செய்து அவரின் தன்மானத்திற்கு  ஊறுவிளைவிக்காமல் மறைமுகமாக அவருக்கு உதவ நான்கு மடங்கு  விலையைக் குறைத்து  விற்பனை செய்கிறேன் "என்றவர்,

  #வணக்கத்திற்குறிய அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன் 
இந்த பெண்மணி வாரத்துக்கு ஒருமுறைதான் என்னிடத்தில் வியாபாரம் செய்வார் ஆனால் அவர் என்னிடம்
வியாபாரம் செய்யும் நாட்களில் எனக்கு
 நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்" என்றார் 

   இதைக் கேட்ட அந்த மனிதரின் கண்களில் இருந்து நீர் தாரைத் தாரையாக வழிந்தது அந்த வியாபாரியின தலையில் முத்தமிட்டார்

  #பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள்  வானத்தில் இருப்பவர்கள் உங்கள்மீது கருணை காட்டுவார்கள் என்பது நபிமொழி.

உண்மையில் பிரதிபலனை எதிர்பாராமல்
அல்லாஹ்விற்காக ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும் போது உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது
அனுபவித்தவர்களால்தான் உணர  முடியும்.

 நிகழ்வைப் படிக்கின்ற சகோதர்களே! தேவையுடையவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத வகையில் நீங்கள் உதவி செய்து பாருங்கள் அப்பொழுது அவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி உங்கள் உள்ளத்திலும் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நீங்கள் உணர்வீர்கள்.
----அரபியிலிருந்து தமிழில்
கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பஈ

மக்களின் உள்ளங்களை வெல்ல ஞானிகள் வழி

மக்களின் உள்ளங்களை வெல்ல
அறிவாளிகள் அறிவை நம்புவார்கள் 
ஞானிகள் இதயத்தை நம்புவார்கள்.
________________ 
ஹகீமுல் இஸ்லாம் மவ்லானா முஹம்மத் தய்யிப் காசிமி (ரஹ்)
-------------------------
பொதுவாக கல்வி மூலம் அறிவு பெற்றவர்கள் தாங்கள் கற்ற கல்வி ஞானத்தின் மூலமே மக்களை வென்று விடலாம் என்று நினைப்பார்கள்.

ஆனால், அல்லாஹ்  தன்னுடைய  சிறப்பு அடியாளர்களுக்கு அளிக்கின்ற ஹிக்மத் என்னும் அறிவு ஞானத்தை பெற்றவர்கள், வெகு ஜன மக்களின்  இதயத்தை வெல்வதின் மூலமே  வெற்றி பெறுவார்கள்.

#ஞானி ஜுனைதுல் பஃதாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காலத்தில் முஃதஜிலாக்கள்
 "இவ்வுலகிலும் மறுஉலகிலும் அல்லாஹ்வை பார்க்க இயலாது" என்று வாதிட்டனர்.

அந்த காலத்தில் இருந்த அறிஞர் பெருமக்கள் அவர்களிடம் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை சொல்லி வாதாடியும் அவர்களை விவாதத்தில் வெல்ல முடியவில்லை.

இறுதியில் ஞானி ஜுனைதுல் பஃதாதி அவர்களிடம் வந்தார்கள். அவர்களை எப்படி விவாதத்தால் வெல்வது என்று கேட்டார்கள்.

பொதுவாக ஞானி அவர்கள் இது போன்ற விவாதத்தில் ஈடுபட விரும்பமாட்டார்கள். ஆனால், பஃதாதி அவர்கள் அவர்களிடம் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டு அதை பொது மக்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

பஃதாதி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் விவாதம் செய்கிறார்கள் என்று கேள்விப் பட்ட உடன் பஃதாத் மாநகரத்தில் மக்கள் திரண்டார்கள்.

முஃதஜிலாக்கள் அறிஞர்களும் வருகை புரிந்தார்கள். ஞானி அவர்கள், அவர்களை நோக்கி "நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள"் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் "இம்மையிலோ மறுமையிலோ அல்லாஹ்வை கண்களால் பார்க்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை" என்றார்கள்.

அதற்கு ஞானி அவர்கள், "நான் கேட்பதற்கு அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை சொல்லுங்கள்.

அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று உங்களின் உள்ளம் விரும்புகிறதா? என்று கேட்டார்கள்.

அவர்கள், ஆமாம் எங்கள் உள்ளம் விரும்புகிறது"என்றார்கள்.

"பார்க்க முடியாத ஒன்றை உள்ளம் விரும்புமா?" என்ற ஞானி அவர்கள்
" வாசனையை நுகரத்தான் உள்ளம் விரும்பும்
காற்றை சுவாசிக்க தான் உள்ளம் ஆசைப்படும்
ருசியை சுவைக்கத்தான் உள்ளம் விரும்பும்.
இவற்றை எந்த மனிதனும் பார்க்க வேண்டும் என்று ஆசை பட மாட்டான்.

அவன் இதயத்தில் அந்த ஆசையே எழும்பாது.
ஏனென்றால்  அவற்றை கண்ணால் காண முடியாது 
எதை பார்க்க முடியுமோ அதை பார்க்கத்தான் இதயம் விரும்பும்.

எனவே, அல்லாஹ்வை பார்க்க முடியும் என்று உங்கள் இதயம் நம்புகிறது எனவேதான் அதை விரும்புகிறது என்றவர்கள்,"தொடர்ந்து

நம் இதயம் விரும்புகிற ஒன்றை தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மறுமையில் பவுர்ணமி இரவில் முழு நிலாவை நீங்கள் பார்ப்பதை போல் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்" என்று இதயம் நம்புவதை உறுதி படுத்தியிருக்கிறார்கள்."
என்றார்கள்.
டி
இந்த பதிலை கேட்டு திகைத்து போன முஃதஜிலாக்களின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.

பலர் அந்த இடத்திலேயே தவ்பா செய்தார்கள்.
பல நூறு அறிவியல் ஆதாரங்கள் ஏற்படுத்தாத மனமாற்றத்தை ஒரு ஞானி எதிரியின் இதயத்தை நோக்கி விட்ட அம்பு நிகழ்த்திக் காட்டியது.
-----معجزہ کیا ھے
என்ற நூலிலிருந்து 
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ,தேவ்பந்தி

Tuesday, November 10, 2020

கண்களில் நீரை வரவழைத்த மலரும் நினைவு

கண்களில் நீரை வரவழைத்த மலரும் நினைவு 
***********************
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபொழுது என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.ஏனென்றால் ஒரு நாள் நானும் இது போன்று ஒரு கடைவாசலில் நின்றேன்.
1967 ம் ஆண்டு லால்பேட்டை மதரசாவிலிருந்து மவ்லவி பாஜில் பட்டயம் பெற்று தேவ்பந்து மதரசாவில் கல்வி கற்க ஆசைப்பட்டேன்.அந்த நேரத்தில் 12 பிள்ளைகளுக்குத் தந்தையான என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.
என் தாத்தா இஸ்மாயில் ராவுத்தர் துவக்கிய இஸ்லாமிய  அரசு உதவி பெரும் ஆரம்ப பாடசாலையின் தாளாளராக இருந்தவர் அவருக்கான வருமானம் குறைவாக இருந்ததால் நான் ஏதேனும் பணியில் சேர்ந்தால் நல்லது என நினைத்தார்.  அப்பொழுது 
எனது உஸ்தாத் லால்பேட்டை ஷைகுல்வரா அப்துல்ஜமீல் ஹஜரத்(ரஹ்) அவர்களின் ஆலோசனைப்படி இஸ்திகாரா செய்ததில் சென்டரல் ரயில்  நிலையத்திலிருந்து ரயில் ஏறுவது போல் கனவு கண்டேன்..இதனை என் தந்தையிடம் சொன்னபோது என் தந்தை தேவ்பந்த் செல்ல அனுமதித்தார்.
  தேவ்பந்தில் தவ்ரதுல்ஹதீஸில் சேர நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
உருதுவிலும்,அரபியிலும் நடைபெற்ற  வாய்மொழித்தேர்வில் மொழி பிரச்சனையால் தோல்வியடைந்து தவ்ரதுல்ஹதீஸிற்கு முந்திய வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.
மதரஸாவின் விதிமுறைகளின் படி தேர்வில் தோல்வியடைந்தவர் காலாண்டு தேர்வில் 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் வரை அவர்களுக்கு இலவச உணவு கிடையாது  கட்டணம் செலுத்தினால் தான் உணவு கிடைக்கும்.
என் தந்தை பொருளாதார சிக்கலிலிருக்கும் போது அவரிடம் எப்படி கூடுதல் பணம் அனுப்பச் சொல்வது  என நான் தடுமாறினேன்,
அந்நிலையில் என்னை தேவ்பந்திற்கு அழைத்துச் சென்ற பெரம்பளூர் வடகரை மர்ஹூம் சுல்தான் ஹஜரத் என் அறைத் தோழராக இருந்தவர் "எனக்கு கிடைக்கும் இரண்டு ரொட்டியில் ஒன்றைத் தருகிறேன் வருகிற பணத்தை வைத்து சமாளித்துக்கொள்வோம்"என்றார் பெருந்தன்மையுடன்.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் மிகவும் சிரமத்துடன் அரைவயிறு நிரம்பிய நிலையிலேயே கழிந்தது.
இந்நிலையில் ஒருநாள் கடுமையான பசி கையில் ஒரு டீ குடிக்கும் அளவுதான் பைசா இருந்தது.
டீ குடிக்க ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கே சூடான #கபாப் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதை வாங்கி சாப்பிட எனக்கு ஆசையிருந்தாலும் கையில் பைசா இல்லை,அத்துடன் முதலாளியிடம் சென்று கடனாக கொடுங்கள் என்று கேட்கும் அளவு உருது மொழி தெரியாது. எனவே,  அதை பார்த்துக்கொண்டு நின்றேன்.
முதலாளி என்னைப் பார்த்து மவ்லவிசாப் கபாப் ஷாஹியே என்றார்" நான் பைசா நஹி" என்றேன்.
அவர் இரண்டு கபாபை கொடுத்து சாப்பிடுங்கள்,மணியார்டர் வந்த பின் பைசா கொடுங்கள்" என்றார்.
பின்னாளில் 'ஏன் பிச்சைக்காரனைப் போல் அங்கேயே நின்று கபாபை வாங்கி சாப்பிட்டோம்' என வருந்தியதுண்டு.
இறுதிவரை என் தந்தைக்கு இந்த நிகழ்வு தெரியாது. தெரிந்திருந்தால் மன வேதனை அடைந்திருப்பார்.
இன்று யாராவது சிறுவர்கள் டீகடை வாசலில் நின்று பிச்சை கேட்டால் இந்த நிகழ்வு என் நினைவிற்கு வரும்.
    அந்த மூன்று மாதங்களுக்குப் பின் காலாண்டுதேர்வில்65% மதிப்பெண் பெற்று ரஜாயி எனும் போர்வையும்,உதவி தொகையும்  மதரஸாவிலிருந்து கிடைக்கப் பெற்றேன்.
அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால்.
 -----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, November 1, 2020

யார் பொறுமையாய்?

#யார்_பொறுமையாளர்?

الَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ
 السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
13:23   جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
13:24   سَلَامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
13:24. “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)

  #ஸப்ரு செய்யுங்கள்" என்ற வார்த்தை முஸ்லிம் மக்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை. 

#ஸப்ரு என்ற வார்த்தை கோபப்படுபவர்களுக்கும் துக்கப்படுபவர்களுக்கும் சொல்லுகின்ற ஆறுதல் வார்த்தையாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் ஸப்ரு என்பது ஆழமான பொருள் கொண்டது.

#ஸப்ரு என்ற அரபி வார்த்தைக்கு கடினம், அடக்குதல் என்று பொருள். 

#ஸபர்து அத்தாபத-நான் வாகனத்தை எந்த வித துணையும் இன்றி அடக்கினேன்” என்று அரபியில் சொல்வார்கள்.

புனிதமிகு குர்ஆனில் 103 இடங்களில் எட்டு வகையான வார்த்தை அமைப்புடன் #ஸப்ரு என்ற வார்த்தை வந்துள்ளது.

இஸ்லாமிய ஷரியத்தில் மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர் தான் #ஸப்ரு.
 
நமது சக ஊழியரோ, வியாபாரியோ, நண்பரோ முறை தவறிய வழியில் ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து சொத்துகளாக வாங்கி குவிக்கிறார். நமது மனம் சொல்கிறது நாமும் ஏன் இப்படி செய்ய கூடாது என்று அந்நிலையில் இறைவனுக்கு அஞ்சி போதுமென்ற மனதோடு இருப்பதற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 அழகான இளம் மங்கையுடன் தனிமையில் இருக்க நேரிடுகிறது. அப்பொழுது ஏற்படும் மனக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கற்பு நெறியின் பெயரும் #ஸப்ரு தான்.

 ஒரு தவறு நடக்கிறது தவறு செய்கின்றவர் மேல் அதிகாரியோ அல்லது நெருக்கமான உறவினராக இருப்பதால் அவருடன் பகையைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்று மனம் அவர்களைக் கண்டிக்க வேண்டாமென்று தடுக்கிறது.அதனை கட்டுப்படுத்தி கண்டிக்கும் துணிவிற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடக்கும் போர்க்களத்தில் எதிரியின் வலிமையைக் கண்டு, மனம் அஞ்சும் போது அதனை அடக்கி எதிர்க்கின்ற வீரத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 கடும் குளிரில் கதகதப்பான மெத்தையில் மனதிற்கினிய மனைவி அருகே உறங்க பஜ்ரு தொழுகையின் பாங்கு ஒலி கேட்கும்பொழுது விடிந்து சூரியன் உதித்த பின் தொழலாம் என்று மனம் சொல்ல அதனை அடக்கி பள்ளிக்கு விரைந்து செல்லும் தக்வாவின் பெயரும் #ஸப்ரு தான்.

 ஒரு தனி நபரை பற்றியோ அல்லது ஒரு குடும்பத்தை பற்றியோ வெளியில் சொல்ல கூடாத ரகசியம் ஒன்று நமக்கு கிடைக்கிறது,யாரிடமாவது சொல் என்று நமது மனம் துடிக்க அந்த நேரத்தில் அவர்களின் ரகசியத்தை மறைப்பதற்கு பெயரும் #ஸப்ரு தான்.

 கடுமையான துக்கத்தின் போது மனதை அலைபாய வைக்காமல் அந்த சோதனையை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 செல்வம் சேர சேர வீண் ஆடம்பரங்களில் செலவழிக்காமல் தர்மம் செய்யும் ஈகை குணத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 எதிரே உணவிருக்க வயிற்றில் பசி இருக்க அதை உண்ணாமல், குளிர்ந்த நீர் இருக்க  நா வறண்டிருக்க அதனை பருகாமல், புது மனைவி பக்கத்தில் இருக்க மனதில் ஆசை இருக்க அதனை நிறைவேற்றாமல் அல்லாஹ்விற்காக கட்டுபடுத்தும் நோன்பிற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 நமது சகோதரர்களுடன் ஏற்படும் கருத்து வேற்றுமையில் உண்மை என்னவென்று தெரிந்துக் கொண்ட பின்னால் ஈகோவை விட்டு விட்டு  ஹக்கை ஏற்றுக் கொள்வதற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

   நாம் மேற்குறிப்பிட்ட தருணங்கள் எல்லா முஸ்லிம்களுக்கும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏற்படக்கூடியது தான். அந்தந்த நேரங்களில் அல்லாஹ்விற்காக மனதை கட்டுப் படுத்தக் கூடியவர்கள் தான் #பொறுமையாளர்கள். அத்தகைய #பொறுமையாளர்களைத் தான் சொர்க்க வாசலில் வானவர்கள்  வரவேற்பார்கள்.

  இப்பொழுது துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை ஓதிப் பாருங்கள் அந்த வசனங்கள் குறிப்பிடும் பொறுமையாளர்கள் யார் என்று நமக்கு புரியும்.

  எல்லாம் வல்ல அல்லாஹ் வானவர்கள் வரவேற்கும் அத்தகைய பொறுமையாளர்கள் கூட்டத்தில் நம்மை இணைத்து அருள்வானாக.ஆமீன்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ,தேவ்பந்தீ( 2018)

Friday, October 30, 2020

டெல்லி #ஜாமியா_மில்லியா #இஸ்லாமியா பல்கலைக்கழகம்

 


#உலமாக்களும் #முற்போக்கு சிந்தனைமிக்க முஸ்லிம் கல்வியாளர்களும் இணைந்து நூறு ஆண்டுகளுக்கு முன்கி.பி. 1920 ல் துவக்கிய டெல்லி #ஜாமியா_மில்லியா #இஸ்லாமியா பல்கலைக்கழகம் தேசிய அளவில் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இவ்வாண்டு (2020)10-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஜாமியா பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த சாதனையை செய்திருக்கிறது
சென்ற ஆண்டு நடைபெற்ற சிஐஏ போராட்டத்தில் ஜாமியா மாணவர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தனர்
இன்றுவரை சஃபூரா போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் வைத்து பாஸிஸ அரசு துன்புறுத்தி வருகிறது

இந்த பல்கலைக் கழகத்தை முடக்கிவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜாமியா தீவிரவாதிகளை உருவாக்குகிறது
என டெல்லி தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கிடையே மதக்கலவரத்தை உருவாக்க முயற்சித்தனர்.
அதை இந்து மாணவர்களே முறியடித்தனர்.

ஜாமியாவை அவர்கள் வெறுப்பதற்கு அடிப்படைக் காரணம் ஜாமியாவின் வரலாற்று பின்னணி தான்.

ஜாமியா #1920 இல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின்போது துவக்கப்பட்டது
ஆங்கிலேயர்களின் துணையுடன் நடக்கும் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் வெளியே வரவேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் தீர்மானம் இயற்றியது அந்த தீர்மானத்தை மால்டா சிறையிலிருந்து விடுதலையாகி வந்த வந்த தாருல் உலூம்தேவ்பந்த் தலைமை ஆசிரியர் #மௌலானா_மஹ்மூதுல்ஹஸன் #தேவ்பந்தி அவர்கள்,
"ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது முஸ்லிம்கள் மீது கட்டாய கடமை எனவே அவர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்
மூளையை மழுங்க வைத்து தனது அடிமையாக வைத்திருக்கும் இஸ்லாமிய கொள்கை களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானபாடத்திட்டத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என பத்வா வழங்கினார்.

(ஆங்கில மொழியைக் கற்கக் கூடாது என்றல்ல.)
(After returning to British India, Mahmud al-Hasan joined the Khilafat movement. He also issued his famous fatwa (legal opinion on Islamic law) of non-cooperation against the British rule in India.[
"Maulana Mahmud al-Hasan (1851-1920)". Jamia Millia Islamia website. 11 November 2004.)

பத்வா வெளியிட்ட பின் மவ்லானா அவர்கள், காந்திஜியுடன்
அப்போது வெள்ளையர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட Muhammadan Anglo-Oriental College (தற்பொழுது அலிகர் முஸ்லிம் பல் கலைக் கழகம்)இருக்கும் அலிகர் நகருக்கு தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாது சென்று அங்குள்ள பேராசிரியர்களையும்,மாணவர்களையும்
சந்தித்துப் பேசினார்கள்.
Muhammadan Anglo-Oriental College நிர்வாகம் பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக மாணவர்களும்,பேராசிரியர்களும் உணர்ந்ததால்
அவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒத்துழைப்பு நல்கினர்.
அதேநேரம்
அரசாங்க செல்வாக்கிலிருந்து விடுபடும் ஒரு புதிய தேசிய முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கான தேவையை சில மாணவர்களின் கோரிக்கையின் வாயிலாக உணரப்பட்டது

அதற்காக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கவேண்டும் என முடிவெடுத்து
மேறகத்திய கல்வியில் ஆர்வமுடைய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் இணைந்து அலிகரில் ஜாமியாவிற்காக29 October 1920. ல் மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்

அன்றைய ஜாமியா விற்கு அடித்தள மிட்டவர்கள்

#மவ்லானா_முஹம்மதுஅலி #ஜவ்ஹர்
,#டாக்டர்_முக்தார்_அப்பாஸ்அன்சாரி
#கவிஞர்அல்லாமா_இக்பால்,
#முப்திகிபாயத்துல்லாஹ்,
#மவ்லானாஅப்துல்பாரிபரங்மஹாலி,
#மவலானாசய்யித்சுலைமான்ந்த்வி,
#மவ்லானாஅபுல்கலாம்ஆஜாத்,
#மவலானா_ஹுஸைன்அஹ்மத்_மதனி
#ஹகீம்அஜ்மல்கான்,
#நவாப்இஸ்மாயீல்கான் மற்றும் பலர்.

#காந்திஜிஅவர்களும்
#கவிஞர்
#ரவீந்திரநாத்தாகூர் அவர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.
கவிஞர் தாகூர் அவர்கள்#
#one_of_the_most_progressive_educational
institutions_of_india

"இந்தியாவின் மிகவும் முற்போக்கான கல்வி நிறுவனங்களில் ஒன்று".
என பாராட்டினார்

அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய மவ்லானா ஷைகுல் ஹிந்த் அவர்களின் தலைமை உரையை மவ்லானா ஷப்பிர் அஹ்மத் உஸ்மானி அவர்கள் வாசித்தார்கள்
அந்தஉரையில் இந்த நிறுவனத்தின் நோக்கம் சமூகத்திற்கு சேவை செய்யும் ,தீமைகளை எதிர்த்துப் போராடும் மாணவர்களை உருவாக்குவதோடு இஸலாமிய விழிமியங்களையும் பாதுகாக்கும்.
இந்த நிறுவனம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுதரணமாக திகழும்."
எனக் குறிப்பிட்டார்கள்

ஜாமியாவிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான (மேனாள் குடியரசு தலைவர்) #டாக்டர்ஜாகிர்ஹுஸைன் "ஜாமியாவின் நோக்கத்தை இவ்வாறு எழுதுகிறார்

"ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இயக்கம் கல்வி மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கான போராட்டமாகும். இது இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு வரைபடத்தைத் தயாரிக்கும், ஆனால் அதே நேரத்தில் பொதுவான இந்தியர்களுக்கான தேசிய கலாச்சாரத்தை உருவாக்கும். உண்மையான மதக் கல்வி இந்திய முஸ்லிம்களிடையே தேசபக்தியையும் தேசிய ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் என்ற சிந்தனையின் அடித்தளத்தை அமைக்கும், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான நாடுகளின் ஒத்துழைப்பில் தனது பங்கை வகிக்கும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் பங்கெடுப்பதில் பெருமிதம் கொள்ளும் . ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை ஸ்தாபிப்பதன் நோக்கம், இந்திய முஸ்லிம்களுக்கான பொதுவான பாடத்திட்டத்தை எதிர்கால சவால்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, எதிர்காலத்தில் எஜமானர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவதும் ஆகும்.
#ஹக்கீம் அஜ்மல் கான் முதல் chancellor ஆகவும்,#மவ்லானா முஹம்மது அலி ஜவகர்Vice Chancellorஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

1926ல் ஜெர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த #பெர்லின் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற #டாக்டஜாஹிர்ஹுசைன்,
கல்வியல்துறையில் Ph.D.முடித்திருந்த #டாக்டர்ஆபித்ஹுஸைன்
ஆக்ஸ்போர்டின் வரலாற்று அறிஞர்
#முஹம்மதுமுஜீப் ஆகியோர்
பேராசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற வந்தனர்.
(இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே ஊதியத்தில் பணியாற்றினர்)

1928ல் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் vice chancellorபதவி ஏற்ற பின் ஜாமியா பல பொருளாதர சிக்கல்களுக்கிடையேயும் வளர்ந்தது
1936ல் ஜாமியா டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1939ம் வருடம், இளவயதிலேயே இஸ்லாமை ஏற்றவர் தத்துவஞானி,,சிறந்த கல்விமான்,சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் இருப்பவர் எனும் பல சிறப்புகளைக் கொண்ட
#மவ்லானா_உபைதுல்லாஹ்சிந்தி (1872-1944) அவர்கள் டாக்டர் ஜாகிர் ஹுசைனின் அழைப்பின் பேரில் ஜாமியாவில் தங்கி குறைந்த ஊதியத்தில் பணியாற்றினார். #ஷாவாலியுல்லாஹ்(ரஹ்) அவர்கள் பின்பற்றிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய விழுமியங்களையும்,கொள்கைகளையும் ஆய்வு செய்யும் islamic studies என்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கு #பைத்துல்ஹிக்மா எனபெயரிட்டார்.
அந்தத் துறை இன்றுவரை நடைபெற்று வருகிறது

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன் 1946ல் ஜாமியாவின்
இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
அப்பொழுது சுதந்திரப் போராட்டம் கொதிநிலையில் இருந்தது.

பாக்கிஸ்தான் வேண்டுமா? வேண்டாமா என்ற பிரச்சனையால் முஸ்லிம் சமுதாயம் பிளவுண்டு கிடந்தது.
இந்நிலையில் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தலைவராக வீற்றிருந்த விழாமேடையில்
இருதுருவங்களாக இருந்த தலைவர்கள் ஜாஹிர்ஹுஸைன் அவர்ளின் இரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
ஒருபக்கம் #முஹம்மதுஅலிஜின்னாசாஹிபும்
#லியாகத்அலிகானும் அமர்ந்திருக்க மறுபக்கம் #பண்டிட்_ஐவஹர்லால்நேருவும்
#ராஜாஜியும் அமர்ந்திருந்தனர்.
இது ஜாமியாவின் சிறப்பினை உணர்த்துகிறது.

1947ல் இந்தியப்பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஜாமியா பெரும் சேதத்தைச் சந்தித்தது.
பல்லாயிரம் நூல்களைக் கொண்ட ஜாமியாவின் நூலகம் முற்றிலும் தீக்கிரையானது.

சுதந்திர இந்தியாவில் ஜாமியாவின் வளர்சசி பற்றி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, October 18, 2020

நபிகளாரின் மீது நாம் வைக்கும் அன்பு எந்த வகையைச் சேர்ந்தது?

பெருமானார் ﷺ அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எந்த வகையைச் சேர்ந்தது?
 ------ கணியூர் இஸ்மாயீல் நாஜி யின் ஜும்மா உரை(15/11/2019)
-----------------------------     
       "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் உண்மையான முஃமினாக ஆகமாட்டார்"என அண்ணல்நபிﷺஅவர்கள் நவின்றுள்ளார்கள்.

       ஒருவரின் மீது நாம்வைக்கும் அன்பு பல காரணத்தினால் ஏற்படலாம்.
 இந்த நபிமொழி நம்மைப் பெற்றெடுத்த தந்தையை விட,நாம் ஈன்றெடுத்த பிள்ளைகளை விடவும் நபி அவர்களின் மீது அன்பு கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.

      தந்தையின் மீதும்,பிள்ளைகளின் மீதும் நமக்கேற்படும் பாசம் இயல்பானது. நம்மையறியாமலேயே ஏற்படுவது. அதற்கு அரபியில் '#ஹுப்புத்தபஈ' என்பார்கள்.

      அத்தகைய அன்பை நம்மால் அண்ணலாரின் மீது வைக்க முடியுமா?
முடியும் என நபித்தோழர்களின்  செயல்கள் நமக்குக் காட்டுகின்றன.

      புகாரி ஷரீபில் வருகிறது. நபித் தோழர் #அபுதல்ஹா(ரழி) சொல்கிறார்,கைபர் போர் முடிந்து நபிபெருமான்ﷺ அவர்களும்,அவர்களின் துணைவியார் #ஸபிய்யா(ரழி) அவர்களும் ஒரு ஒட்டகத்தில் எனக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள். நான் வேறொரு ஒட்டகத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தேன். திடீரென ஒட்டகம் காலிடரி கீழே சாய நபிஅவர்கள் ஒருபக்கமும்,துணைவியார் சற்றுத் தள்ளியும் கீழே விழுந்தார்கள்.

   இதைப் பார்த்த நான் பதறிப் போய் என்னையறியாமலேயே நபிஅவர்கள் விழுந்ததைப் போன்றே பூமியில் நானும். விழுந்தேன். (அதாவது என் ஒட்டகத்தை நிறுத்திகீழே இறங்க முற்படாமல் நபியவர்கள் விழுந்ததைப் போன்றே கீழே விழுந்தேன்)
     அண்ணலாரின் அருகே சென்று 'காயம் ஏதேனும் ஏற்பட்டதா நபியவர்களே என்று கேட்டேன்.
நபியவர்கள், ஸபிய்யா அவர்களைப் பார் என்று சொன்னார்கள்.

#அபுதல்ஹா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். 'நான் என் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அன்னையின் அருகில் சென்றேன். அந்த துணியால் அவர்கள் முகத்தை மூடி அவர்கள் கரங்களை பிடித்து மேலே தூக்கினேன். 

இந்த நிகழ்வு நபித்தோழர்கள் எந்த அளவு நபியவர்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள் என்று புரிகிறது.

நபித்தோழர்கள், தம் பிள்ளைகளிடம் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்னால் நபியவர்களுக்கு அடுத்து என் நேசத்திற்குரியவன் நீ என்று சொல்வார்களாம்.

#ஹஜ்ரத்_உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபியவர்களே! இந்த உலகத்தில் என் பெற்றோர், என் குழந்தைகள், மற்ற அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், என்னை நான் உங்களை விட அதிகமாக நேசிக்கிறேன் என்றார்.

" லா யா உமர்" முடியாது உமரே உங்களை விடவும் என்னை அதிகமாக நேசித்தால் தான் உண்மை முஃமினாக முடியும் என்றார்கள் நபியவர்கள்

சற்று நேரம் யோசித்த உமர் அவர்கள், இப்போது சொல்கிறேன் நபியவர்களே! என்னை விடவும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்".

"அல்ஆன யா உமர்" இப்போது தான் உமரே நீங்கள் உண்மையான முஃமீன் என்றார்கள் நபியவர்கள்.

#உவைஸ் கர்ணி அவர்கள் உஹது போரில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பல் ஷஹீதாக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கேட்டவுடன் எந்த பல் என்று தெரியாத காரணத்தால் தனது எல்லா பற்களையும் உடைத்துக் கொண்டார்களாம்.

இது நமக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கின்ற பேரன்பு அறிவிற்கு அப்பாற்பட்டது. 

 ஒன்றை நேசிப்பதற்கு  அழகும் ஒரு காரணம்.
அழகான குழந்தையைப் பார்த்தால், நமக்கு அந்த குழந்தையின் மீது அன்பு ஏற்படுகிறது.

அழகிற்காக ஒருவரை நேசிப்பது என்றால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள்.
நபியவர்கள் உள்ளும், புறமும் பூரண அழகுடையவர்கள்.

#அன்னை_ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா   அண்ணலாரின் ஒளிமிகு அழகை வர்ணித்த போது, " இரவு நேரங்களில் ஊசியின் காதுக்குள் நூலை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நூலையும் ஊசியையும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களின் புனிதமான உடல் அருகில் சென்று அந்த ஒளியில் ஊசியில் நூலைக் கோர்ப்பேன்.
மேலும் சொல்கிறார்கள், இருட்டில் ஏதேனும் பொருள் தெரியவில்லை என்றால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் கரங்களின் ஒளியினால் அவற்றை கண்டுப்பிடிப்பேன்.

 நபித் தோழர் #பராஉ இப்னு ஆஜிப் (ரழி)அவர்கள் சொல்கிறார்  ஒருமுறை பௌர்ணமி இரவில் அண்ணலாரின் முகத்தைப் பார்த்தேன்.
நிலவையும் நபியவர்களின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபியவர்களின் முகத்தில் உள்ள ஜமாலை -அழகை,  பௌர்ணமி நிலவில் என்னால் பார்க்க முடியவில்லை.

   #என் சகோதரர் யூசுப் நபியின் அழகு கவர்ச்சிகரமானது. காண்போரை கவர்ந்திழுக்கும் அழகு.
 #என்னழகோ பார்க்க பார்க்கப் பார்க்க காண்போரின் கண்களை குளிர வைக்கும் அழகு ' என்றார்கள் நாயகம்ﷺ அவர்கள்.

         சிலரை நாம் அவரிடமுள்ள #அறிவாற்றலுக்காக நேசிக்கிறோம்.

 அந்த  அடிப்படையில் நேசிப்பதாக இருந்தால் 'முந்திச்சென்றவர்கள் இனிமேல் வருபவர்கள் என அனைவருடைய கல்வி ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக   நவின்ற நபிகளார் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

குறைவான வார்த்தைகளில் ஆழமான, அதிகமான   கருத்து களைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்

       நாம் நபிகளாரின் மீது வைத்துள்ள அன்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும்  
அல்லாஹுவும் ரசூலும் நம்மிடம் எதிர்பார்ப்பது #ஹுப்புல்_இத்திபாஈ '  

        அதாவது ஒருவரை நாம் நேசித்தால் அவருடைய நடை,உடை பாவனைகளை நமது வாழ்வில் நமதாக்கிக் கொள்வோம்.

      வெறித்தனமான அரசியல்கட்சித் தொண்டனோ,சினிமா ரசிகனோ தனது நேசத்திற்குறியவரைப் போன்றே தனது சிகையை அலங்காரம் செய்துகொள்கிறான்.பேச்சிலும் செயலிலும் அவரைப் போன்றே தன்னை மாற்றிக் கொள்கிறான்.    
 
           நமது கண்மணி நாயகம்ﷺ அவர்கள் மீது நாம் உண்மையில் நேசமும்,பாசமும் கொண்டிருக்கிறோம் என்றால் நாம் சொல்லாலும்,செயலாலும் நற்குணத்தாலும் அவர்களைப் பின்பற்றவேண்டும்.

     அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களின் பெயரால் மவ்லூத் ஓதுகிறீர்கள். உங்களின் எண்ணத்திற்கேற்ப அதற்காக அல்லாஹ்விடம் கூலி உண்டு.

 ஆனால் அதே நேரத்தில் அண்ணலாரின் வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

 நபிஅவர்களைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் சொல் என்றால் அவர்களால் சொல்ல முடியுமா? இங்கிருக்கும் அனைவரும்  ஒரு கணம் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்? நபியவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்களில் ஆண்
 குழந்தைகள் எத்தனை? பெண குழந்தைகள் என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா?

 இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் எத்தனைபேர் தங்கள் வீட்டில் நபிஅவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்? 

எனவே அன்பு சகோதரர்களே! நபிஅவர்களின் மீது உண்மையான நேசம் என்பது அவர்களைப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது.
------- சிதம்பரம் இப்ராஹீம் நகர் மஸ்ஜிதில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயின் ஜும்மா உரையின் சுருக்கம்.

Thursday, October 15, 2020

தந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

பேராசையால் தன் மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை.
 ----
1967ம் ஆண்டு தேவ்பந்த் மதரஸாவிற்கு டெல்லிவரை ஒரு 'ரயிலிலும்', டில்லியிலிருந்து வேறொரு ரயிலிலிலும் தேவ்பந்த் செல்ல வேண்டும்.
அது தொடர்பாக  முன்பதிவு செய்ய அங்கே ஏற்கனவே கல்வி கற்று வரும் ஒரு சகோதரரிடம் ஆலோசனை கேட்டேன்.
    ரயிலில் செல்லும் மாணவர்களுக்கு இருவழி கட்டண சலுகை உண்டு.
இறுதியாண்டு மாணவர்கள் திரும்பிச் செல்லமாட்டார்கள்,ஆனால் அந்த பாஸ் அவர்களிடம் இருக்கும் அதை வாங்கி அவர் பெயரில் நீ கட்டண சலுகையுடன் டெல்லி செல்லலாம் ' என்ற ஆலோசனையை வழங்கினார்.
     இதை என் தந்தை - யாக்கூப் வாத்தியாரிடம் சொன்னேன்.
   அந்நேரம் என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.பயணக்கட்டணம் குறையும் என்றால் நல்லதுதானே என எண்ணுவார் என்றே எண்ணினேன்.
     ஆனால் என் தந்தை, 'போறது,நேர்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும் மார்க்கக் கல்வியைக் கற்க, அதன் துவக்கமே பித்தலாட்டமா? நீ அந்த கல்லூரியின் மாணவனாக இன்னும் சேராதபோது அந்தக் கல்லூரின் மாணவன் என இன்னொரு மாணவனின் பெயரைப் பயன்படித்தி கட்டண சலுகை பெறுவது,அரசாங்கத்தை ஏமாற்றும் செயலல்லவா? ஆலிமான நீயே மோசடி செய்யலாமா?' எனக்  கண்டித்தார்.
     என் தந்தை நான் தவறுசெய்த பொழுதெல்லாம் அடித்துக் கண்டிக்கத் தவறியதில்லை.
      என் தந்தை  என் பாட்டனாரால் ஆரம்பிக்கப்பட்ட கணியூர் இஸ்லாமிய துவக்கப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.
   எங்கள் பள்ளியில் ஒரு கிருத்துவர் ஆசிரியராக இருந்தார். ஒருமுறை அவர் சர்சிற்குச் செல்லும் வழியிலிருந்த வைக்கோல் போரின் மீது நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவ்வழியே வந்த அந்த ஆசிரியரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஒளிந்துகொண்டோம். இது போன்று இரண்டு மூன்று முறை செய்தோம்.
    மறுநாள் அந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் என் தந்தையிடம் சொல்லிவிட என் தந்தை மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப் படுத்தும்வண்ணம்  நடப்பியா? என பிரம்பால் அடித்தார். அதே நேரத்தில் எங்களிடம் நகைச்சுவையாகவும் பேசுவார்.
     ஒழுக்கத்தைக் செயல்வடிவில் கற்றுக் கொடுப்பவர்தான் தந்தை.
      நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் இளந்தளிர்களான அம்மாணவர்களைப் பார்த்து ஒரு இளைஞனின் தந்தை என்ற முறையில் என் மனம் பதைபதைத்தது.
    தந்தையின் பேராசையால்  அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. 
     கல்லூரி செல்லவேண்டியவன் சிறைக்குச் சென்றது அவன் உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கும்?
    இது எதனால் தன் மகனுக்கு நேர்வழியைக் கற்றுத்தர வேண்டிய தந்தையே அவனை தவறாக வழிநடத்தியதுதான் காரணம்.
       எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மல்லிப்பட்டினத்தில் நடந்த மீலாது விழாவில் கலந்து கொண்டு நானும் #மறுமலர்ச்சி_ஆசிரியர்_நாவலர் 
#ஏ_எம்_யூசுப்சாஹிபும்
பேருந்தில் ஒன்றாக  பட்டுக்கோட்டை பயணித்தோம். அப்பொழுது  அவர் என்னிடம் என் மகன் மருத்துவம் படிக்க ஆசைப் படுகிறேன் என்றான். நான் அவனிடம் சொல்லிவிட்டேன், எம்ஜிஆர் என் நண்பர் என்பதால் உனக்கு மருத்துவசீட்டு வாங்கித் தருவேன் என எதிர்பார்க்காதே! மெர்ரிட்டில்  நீ பாஸ் செய்தால் உன்னை அரசு மருத்துவக்கலலூரியில் சேர்க்கிறேன்' எனச் சொல்லிவிட்டேன் என்றார்.
 தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Wednesday, October 7, 2020

விவாதம், விதண்டாவாதம்

2014ம் ஆண்டு பதிவு

விவாதம் ,விதண்டாவாதம் 

விவாதம் செய்யாமல் ஏன் ஒதுங்கிறீர் என சிலர் என்னிடம் கேட்கின்றனர்
என்னுடைய ஆசிரியர்களின் வழி காட்டலின் அடிப்படையிலேயே இந்த முடிவிற்கு நான் வந்துள்ளேன் என் முகநூல் நண்பர்களாக பல ஆலிம் பெருமக்களும்,அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.
என் எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் கண்ணியமாக
 சுட்டிக்கா ட்டுகிரார்கள். 
அவர்களுக்காக இந்த விளக்கத்தை தருகிறேன் 
மதரசா என்றழைக்கப்படும் அரபுக்கல்லுரிகளில் நான்காவது அய்ந்தாவது வகுப்புகளில் மன்திக் எனப்படும் தர்க்கவியல் கற்றுக் கொடுக்கப்படுகிறது
அதில் விவாதம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கின்றனர்
مناظرة،
مجادلة 
مكابرة
முனாளரா என்பது ஆரோக்கியமான விவாதம் .இதில் விவாதம் செய்பவர்கள் எடுத்து க்கொண்ட விடயத்தில் ஆழ்ந்த விஷய ஞானம்உள்ளவர்களாக,திறந்த மனமுடன்இருப்பார்கள்  சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவுடன் விவாதம் செய்வார்கள்.
 உதாரணமாக ஒருவர் குர் ஆனில் எங்கெல்லாம் இப்படி செய்யுங்கள் என அம்ரு ஏவலாக வருகிறதோ அதைச்செய்வது கட்டாயம் வாஜிப் என்கிறார் ,மற்றவர் அதை மறுத்து குர் ஆனில் வரும் அனைத்து ஏவல் களையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளமுடியாது,சில இடங்களில் அதனை செய்வது நல்லது என ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளலாம் என வாதிட்டு அதற்கு ஆதாரமாக 
2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; 
எனும் வசனத்தில் فَاكْتُبُوهُ எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனும் வார்த்தை  அம்ரு ஏவலாக வந்துள்ளது இதற்கு விரிவுரை எழுதிய அனைத்து அறிஞர்களும் இது கடமையல்ல செய்யாவிட்டால் பாவமுமல்ல மாறாக உங்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஆலோசனையாக கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் என தன் வாதத்தை முன் வைக்கிறார் 
 மற்றவர் இதனை மறுக்கும் ஆதாரம் அவரிடம்  இல்லாததால் இதனை ஏற்றுக்கொள்கிறார்.
 
இது போன்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை,
இதை கலந்துரையாடல் என்றும் சொல்லலாம்.
 நபித்தோழர்களுக்கி டையே  இவ்வாறான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கலிபா அபூபக்கர் மற்றும் உமர் ரழியல்லாஹ் அன்ஹுமா அவர்களிடையே குர்ஆனின் வசனங்களை ஒன்று சேர்க்கும் விடயத்திலும்,ஜக்காத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்கும் விடயத்திலும் விவாதங்கள் நடைபெற்று பின் இருவரும் ஒரே முடிவை எடுத்தனர் 
    அடுத்து முஜாதலா எனப்படும் விதண்டாவாதம். இதில் ஈடுபடுவோர் ஏற்கனவே ஒரு விடயத்தில் இது தான் சரி யென முடிவு செய்திருப்பர். பின் தன் கருத்திற்கு எதிராக உள்ளவருடன் தன கருத்துதான் சரியானது எதிரி கருத்து தவறு என நிறுப்பிக்கமுயற்சி செய்வர்.எதிர் கருத்துள்ளவர் என்னதான் தங்களின் கருத்துக்கு ஆதரவாக ஆதாரங்களைக் காட்டினாலும் அதை பரிசிலிக்க மாட்டர்கள் .தங்கள் கருத்தே சரி என விதண்டாவாதம் செய்வார்கள் 
இது மன வருத்தத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் 

 மூன்றாவது முகாபரா இது, தான் பெரிய அறிஞர் என்னை யாராலும் வெல்ல முடியாது என்பதற்காகவே விவாதம் செய்வது இதுவும் தவறான விவாதம் 

   நான் லால்பேட்டை மதரசாவில்1966ம் ஆண்டுகல்வி கற்கும்போது 
என்னுடைய ஆசிரியர் கைருல்மில்லத் அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் இமாம் களை பின்பற்றாத வர்களிடம் எப்படி விவாதிப்பது என கேட்டேன் .அதற்கு உஸ்தாத் ஒரு கொள்கையை பிரச்சாரம் செய்பவர்களிடம் விவாதம் செய்யாதே, அவர்கள் ஒரு போதும் உன் கருத்தை பரிசீலிக்க மாட்டார்கள் மாறாக விவாதத்தை திசை திருப்பி  உன்னை குழப்புவார்கள்.
யார் உன்னிடம் தெரிந்துகொள்ள விளக்கம் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உன் கருத்தை முன் வை என்றார்கள் 
  எனவே தான் வீண் விவாதங்களில் ஈடுபடுவதில்லை,

அல்லாஹ் அனைத்து விடயங்கலிலும் நேர்வழி காட்டுவானாக 
ஆமீன்
-------கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ