Thursday, November 26, 2020

இவ்வுலக வாழ்க்கயை நீருக்கு ஒப்பிட்டது ஏன்?

وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ 
 இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; 
(அல்குர்ஆன் : 18:45)

இவ்வுலக வாழ்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருக்கு ஒப்பிட்டான்?

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் தங்களுடைய விரிவுரையில்
 குறிப்பிடுகிறார்கள் : 
உலக வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உண்டான பொருத்தத்தை அறிஞர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்.

1 - தண்ணீர் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காது. அதே போன்று உலகமும் ஒரே நபரிடம் தங்கிருக்காது.

2 - தண்ணீர் ஒரே நிலையில் இருக்காது. அதனுடைய தன்மை மாறிவிடும்.இவ்வுலகமும் அவ்வாறு தான்.

3 - தண்ணீர் வற்றி காய்ந்துவிடும். அதுபோல, இவ்வுலகமும் ஒருநாள் அழிந்துவிடும்.

4 - தண்ணீரில் மூழ்கியவன் ஈரம்படாமல் வெளி வர முடியாது. அதேபோன்று, இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியவன் அதனுடைய குழப்பத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியாது.

5 - தண்ணீர் அளவுடன் இருந்தால் பலன் தரும் வளர்ச்சியை கொடுக்கும். அளவு கடந்தால் அழிவை தரும் துன்பத்தை தரும்
. இவ்வுலக  இன்பங்களும்அப்படித்தான் நமக்கு தேவைக்கேற்ப இருந்தால் பலன் தரும்.அளவிற்கு மிஞ்சினால் அழிவு நிச்சயம்.
---------77கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ

No comments:

Post a Comment