وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ
இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது;
(அல்குர்ஆன் : 18:45)
இவ்வுலக வாழ்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருக்கு ஒப்பிட்டான்?
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் தங்களுடைய விரிவுரையில்
குறிப்பிடுகிறார்கள் :
உலக வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உண்டான பொருத்தத்தை அறிஞர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்.
1 - தண்ணீர் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காது. அதே போன்று உலகமும் ஒரே நபரிடம் தங்கிருக்காது.
2 - தண்ணீர் ஒரே நிலையில் இருக்காது. அதனுடைய தன்மை மாறிவிடும்.இவ்வுலகமும் அவ்வாறு தான்.
3 - தண்ணீர் வற்றி காய்ந்துவிடும். அதுபோல, இவ்வுலகமும் ஒருநாள் அழிந்துவிடும்.
4 - தண்ணீரில் மூழ்கியவன் ஈரம்படாமல் வெளி வர முடியாது. அதேபோன்று, இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியவன் அதனுடைய குழப்பத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியாது.
5 - தண்ணீர் அளவுடன் இருந்தால் பலன் தரும் வளர்ச்சியை கொடுக்கும். அளவு கடந்தால் அழிவை தரும் துன்பத்தை தரும்
. இவ்வுலக இன்பங்களும்அப்படித்தான் நமக்கு தேவைக்கேற்ப இருந்தால் பலன் தரும்.அளவிற்கு மிஞ்சினால் அழிவு நிச்சயம்.

No comments:
Post a Comment