Saturday, January 29, 2022

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை
**********************************************************************

கஸஸ் அத்தியாயத்தில் மூஸா நபியின் தாயாரை பார்த்து : அச்சம் கொள்ளாதீர்! கவலை கொள்ளாதீர்! என்று அல்லாஹ் சொல்கிறான்
மர்யம் அத்தியாயத்தில் மர்யம் அவர்களை பார்த்து : கவலைப்படாதீர் என அழைத்து சொன்னான்.
அஹ்ஜாப் அத்தியாயத்தில் நபியின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்

பல வசனங்கள் பெண்கள் கவலைப் பட கூடாது என்ற அர்த்தத்தில் வந்துள்ளன.

ஏனென்றால், பெண்களின் கவலை மிக ஆழமாக இருக்கும்.
கவலை பெண்களின் அழகைப் போக்கி விடும்.
கவலை பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்..
கவலைப் படும் பல பெண்கள் கருத்தரிப்பதில்லை.
கவலைப் படும் பெண்களின் முடி விரைவில் உதிர ஆரம்பிக்கிறது.

கவலை படும் எத்தனையோ பெண்களின் நிறம் மங்கி விடுகின்றது.

கண்ணாடி குடுவைகளிடம் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள்.
முரட்டுத்தனமாக கையாண்டு அவற்றை உடைத்துவிடாதீர்.

வார்த்தையினால் உங்கள் தாயாரை காயப்படுத்தாதீர்.
உங்கள் சகோதரியிடம் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்.
உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர்.
உங்கள் பெண் குழந்தைகளை புன்னகையுடன் அரவணையுங்கள்.
   எப்பொழுதும்  "பெண்களுக்கு நன்மையையே நாடுங்கள" என்ற நபிமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
    ----அரபியிலிருந்து தமிழில் 
கணியூர் இஸ்மாயீல் நாஜி (2015)

Thursday, January 20, 2022

 

 

                                                                துணுக்குகள்

 

 

இன்று அதிகாலை என்னை பிரமிக்க வைத்த அற்புத வரிகள்;
அருள் மறை குர்ஆனில் அல்லாஹ் அனைத்து இடங்களிலும் ظلومات #இருள்கள் என பன்மையிலும்
#நூர் ஒளி என ஒருமையிலும் குறிப்பிட்டுள்ளான்
என்ன காரணம்? இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள் ;
குர்ஆனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று,ஏனென்றால் நேர்வழி (நூர்) என்பது ஒன்றே ஒன்று தான் ஆனால் இருளின் பால் இட்டுச் செல்லும் பாவத்திற்கான வழிகள் பல உள்ளன.எனவேதான் இருள்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்....

 

சற்று முன் படித்ததில் பிடித்தது.

நீ நீர் போன்று இரு,அது தனக்கான பாதையை தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

பாறை போன்று இருக்காதே !...
அது மற்றவர்கள் செல்லும் பாதையையும்
மறைத்துவிடுகிறது.

 

ஹஜரத் அலி ரழி யல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்

:என்னை ஏமன் நாட்டிற்கு காஜி (நீதிபதி )யாக பணியாற்ற அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அனுப்பிய போது நான் கேட்டேன் :

அல்லாஹ்வின் தூதரே !நான் இளைஞன்,நீதி துறையில் எனக்கு அனுபவம் இல்லை ,என்னை அனுப்புகிறீர் களே ?

நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் உன் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவான் ,உன் நாவை உறுதியாக வைத்திருப்பான் .

இருவர் தொடர்பான வழக்கு உன் முன் வந்து அமர்ந்தால் முதலாம் நபரிடம் எப்படி வழக்கின் முழு விவரங்களைக் கேப்பீரோ அதே அளவு மற்றொருவர்

கூ றுவதையும் கேட்காமல் தீர்ப்பளிக்காதீர் ,அதுதான் நீர் என்ன தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதை உனக்குத் தெளிவாக்கும்.

ஹஜரத் அலி ரழி யல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

நான் காஜி யா க இருந்தவரை எனனுடைய தீர்ப்பில் நான் சந்தேகப்பட்டதே இல்லை

நூல்:அபூ தாவுத் 3282

 

எனது நண்பர்களில் இனிமையானவர்
எனக்குசகோதரராகிவிடுகிறார்.
------
என்ன அழகான பதில்
நண்பர்களையும் சகோதரர்களையும் விட்டுக்கொடுக்காத பதில்

 

سئل علي ابن ابي طالب رضي الله عنه من هو الأفضل اخوك أم صديقك،، "قال ما أحلى أخي أن يكون صديقي وما أحلى صديقي أن يكون أخي،،

ஞானத்தின் தலைவாசல் எனப் புகழப்படும் அறிஞர் கலீபா அலி ரழியல்லாஹு அவர்களிடம்

உங்களுடைய சகோதரர் சிறந்தவரா?

உங்கள் நண்பர் சிறந்தவரா ?

எனக் கேட்கப்பட்டது

எனது சகோதர்களில் இனிமையானவர்

எனக்கு நண்பராகிவிடுகிறார்

எனது நண்பர்களில் இனிமையானவர்

எனக்குசகோதரராகிவிடுகிறார்.

------என்ன அழகான பதில்

நண்பர்களையும் சகோதரர்களையும் விட்டுக்கொடுக்காத பதில்.

 

 

வாழ்க்கையில் இரண்டு விடயங்களை எப்பொழுதும நினைவில் வையுங்கள்.

#கோபமாக_இருக்குமபோது்எந்தமுடிவும்_
#எடுக்காதீர்.
#சந்தோஷத்தில்_மிதக்கும்போது_எந்தவாக்குறுதியும்அளிக்காதீர்

 

இன்று என்னை பெரிதும் சிந்திக்க வைத்த ஒரு பெரியாரின் கருத்து
"
நான் பல்வேறு மக்களுடன்பழகியதில் ஒன்றை புரிந்து கொண்டேன் எப்படி அல்லாஹ் மாந்தர்களை செல்வப் பங்கீட்டில் ஏழை என்றும் செல்வந்தன் என்றும் அமைத்திருக்கின்றானோ
அவ்வாறே நற்குணங்களையும் பங்கீடு செய்துள்ளான்
சிலர் நற்குணங்களை ப் பொறுத்தவரை பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் சிலர் வெறும் ஜீரோவாக இருக்கிறார்கள்"

 

عن إبراهيم ابن أدهم، قال: كان يقال ليس شيء أشد على إبليس من العالم الحليم، إن تكلم تكلم بعلم، وإن سكت سكت بحلم.
சகிப்புத்தன்மை மிக்க அறிஞர் மனிதர்களில் இப்லீஸிற்கு மிகப் பெரிய சவால்.(அவரை எளிதில் அவனால் வீழ்த்த முடியாது)
அவர் உரையாடினால் அறிவுப்பூர்வமாக உரையாடுவார்.
அவர் பேசாமல் மவ்னமாக இருந்தால்
அது சகிப்புத்தன்மை யுடன் கூடிய மவ்னமாக இருக்கும்....

-ஞானி மாலிக் பின் தீனார் ரஹீமஹுல்லாஹ் அன்ஹு

 

உங்களைவிட மற்றவர்கள் செல்வச் செழிப்பில் திழைப்பதைக்கண்டு நிராசையடைதீர்.

இந்த வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

அல்லாஹ் கொடுத்ததைக் கொண்டு

திருப்தியடையுங்கள்.

"அல்லாஹ் எனக்குப் போதுமானவன்.

அவன் எனக்கு இன்னும் அதிகம் வழங்குவான்"என சொல்லிக்கொள்ளுங்கள்.

மனதில் அமைதி ஏற்படும்.

وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَيُؤْتِيْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَ رَسُوْلُهٗۙ اِنَّاۤ اِلَى اللّٰهِ رٰغِبُوْنَ‏ 

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு கொண்டு “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து எங்களுக்கு இன்னும் அதிகம் வழங்குவான். அவனுடைய தூதரும் எங்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் ஆவல் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்களேயானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!

(அல்குர்ஆன் : 9:59)

 

📌قال تعالى

﴿ لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ﴾

🔸قال مالك بن دينار - رحمه الله :

إنك إن تنقل الحجارة مع الأبرار خير لك من أن تأكل الحلوى مع الفجار

🔹- تفسير سورة الفرقان للقرطبي -

لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ‌ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏ 

நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.”

(அல்குர்ஆன் : 25:29)

ஞானி மாலிக் பின் தீனார்(ரஹ்)

சொல்கிறார்:

நீ நல்லோர்களுடன் இணைந்து பாறங்கல்லை புரட்டுவது

பாவிகளுடன் இணைந்து

அல்வா சாப்பிடுவதை விட

சிறந்தது.

 

கலீபா மஃமூன் சபையை அலங்கரித்தவர் கணித மேதை அல்கவாரிஜிமி(கி.பி.781)

அவரிடம் ஒரு பெண்ணிற்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்"எனக்கேட்கப்பட்டது.

ஒரு பெண் நல்லொழுக்கமுள்ள குணவதியாக இருந்தால் முதல் மதிப்பெண்ணான ஒன்று கொடு.

அவளே அழகானவளாக இருந்தால்

ஒன்றிக்குப் பக்கத்தில் பூஜ்யத்தைச் சேர் பத்து மதிப்பெண்கள்.

அவளே செல்வம் படைத்தவளாக இருந்தால் இன்னொரு பூஜ்யத்தைச் சேர்த்துக்கொள்.100மதிப்பெண்ணாகும்.

அதே பெண் நல்ல கண்ணியமான பாராம்பரிய வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்தால் இன்னொரு பூஜ்யத்தைச் சேரு 1000மதிப்பெண்கள்.

ஆனால் முதலாம் எண்ணான ஒன்றாம் எண் இல்லையென்றால் அப்பெண் வெறும் பூஜ்யம் தான்.

 

மனதை கட்டுப்படுத்தும்
பயிற்சிகளில் முதலிடம்
மௌனமாக
இருக்கப்பழகுதல்

 

அல்லாஹ் உனக்கென நிர்ணயித்தவை இரண்டு மலைகளுக்கிடையே இருந்தாலும் உனக்குக் கிடைத்துவிடும்.
ஆனால் உனக்கென இல்லாதவை இரண்டு உதடுகளுக்கு மத்தியிலிருந்தாலும் கிடைக்காது

 

மூன்று விடயங்களை ஒரு முஃமினுக்கு பங்களிப்புசெய்யுங்கள்

* அவருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமலாவது இருங்கள்.

* அவருக்கு மகிழ்ச்சியைத் தர இயலாவிட்டாலும் துன்பம் தராமலாவது இருங்கள்

*அவரைப் புகழாவிட்டாலும் அவரை இகழாமலாவது இருங்கள்

--ஞானி யஹ்யா பின் ம ஆத் (ரஹ்)

அரபி டுவிட்டரிலிருந்து கணியூர் நாஜி

 

உண்மையான நண்பன்:
உன்னிடம் ஏதேனும் தவறைக்காணும்போது அதை பிறர்அறியாமல் காலில் போட்டு மிதிப்பான்.
உன்னிடம் காணும் நற்குணங்களை பிறர் அறிய உயர்த்திக்காட்டுவான்.
-----
அல்லாமா இப்னுல் அஸீர்(ரஹ்)

 

திர்ஹமும்,
தினாரும் கெட்ட நண்பர்கள்
நம்மைவிட்டு பிரியாதவரை நமக்கு நன்மை செய்யமாட்டார்கள்.
--
இமாம் ஹஸன் பஸரி(ரஹ்)

 

எவனுக்கு முஃமின்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை அவனுக்கும் மகிழ்ச்சியை அளிக்க வில்லையோ,
முஃமின்களுக்கு துன்பத்தைத் தருபவை அவனுக்கும் துன்பத்தைத் தரவில்லையோ
#அவன்_அவர்களைச்சேர்ந்தவனல்ல.
----
இமாம் இப்னுத்தைமிய்யா(ரஹ்)

 

لو أنكم توكلتم على الله حق توكله

لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا

سبحان مقسم الارزاق 😍

நீங்கள் அல்லாஹ் வின் மீது தவக்கல் -நம்பிக்கை வைக்கவேண்டிய முறையில் வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் உங்களுக்கும் உணவளிப்பான்.

அவைகள் காலை பசியுடன் கூட்டை விட்டு வெளியே பறக்கின்றன,மாலை வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன.

------நபிமொழி

வாழ்வாதாரங்களை பங்கீடு செய்யும் அல்லாஹ் பரிசுத்தமானவன்

 

வயோதிகரின் உள்ளம் இரண்டு விடையங்களை நேசிப்பதில் இளமையாகவே இருக்கும்.
#நீண்ட_வாழ்நாட்கள்

 

‏عن الشافعي أنه قال :

-

اجتناب المعاصي ، و ترك مالا يعنيك ينور القلب.

-

📝سير أعلام النبلاء : ١٠\٩٨.

பாவங்களை தவிர்த்தல்,

உனக்குத் தேவையில்லாத

விடயங்களை விட்டுவிடல்

#உள்ளத்தை_ஒளிமயமாக்கும்

--இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்

#இமாம்அவர்களின் இந்த ஆலோசனை முகநூல் பதிவாளர்களுக்கும் பொருந்தும்

 

பொருளாதார உதவியை வைத்து நட்பை எடைபோடாதீர்.
பெரும்பாலும் உண்மையான நண்பர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.-
கலிபா அலி(ரழி)அவர்கள்.

 

 

நம்மை மற்றவர்கள் புகழ்வதைக் கண்டு அகம்பாவம் கொள்ள வேண்டாம்.

நம்மிடமுள்ள நல்லவைகளை மட்டுமே அல்லாஹ் வெளிப்படுத்தியால் இந்தப்புகழும்,பாராட்டும்.

நம்முள்ளே மறைந்திருக்கும்

கெட்டவைகளை அவன் வெளியாக்கினால் என்னாகும்?

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்,

இஸ்திஃபார் செய்வோம்.

 

கடந்த கால வரலாற்றிலிருந்து அதிக பட்சம் நாம் பெறும் பாடம் என்னவென்றால்
மனிதன் கடந்தகால வரலாற்றிலிருந்து பெரும்பாலும் பாடம் கற்றுக்கொள்ளவதில்லை
என்பதுதான்

 

‏قال الحسن بن علي رضي الله عنهما:

"لو أن رجلا شتمني في أذني هذه،

واعتذر في أذني الأخرى،لقبلت عذره"

[اﻵداب ﻹبن مفلح: 1 /319]

இவரல்லவா பெரிய மனிதர்?

********************************

ஒருவர் எனது இந்த காதில் என்னை ஏசிபேசிவிட்டு, இன்னொரு காதில் மன்னிப்பு கேட்டால் உடனடியாக அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வேன்.

------ கலிபா அலி(ரழி)அவர்களின் மகனார் ஹஸன் (ரழி)அவர்கள்.

 ------------------------------------------------------------------------------------------------------------------from 6thaugust to 9th july
பாவங்களை தவிர்த்தல்,
உனக்குத் தேவையில்லாத
விடயங்களை விட்டுவிடல்
#உள்ளத்தை_ஒளிமயமாக்கும்
--
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்

#இமாம்அவர்களின் இந்த ஆலோசனை முகநூல் பதிவாளர்களுக்கும் பொருந்தும்

ஹஜரத் அலி ரழி யல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :
நான் காஜி யா க இருந்தவரை எனனுடைய தீர்ப்பில் நான் சந்தேகப்பட்டதே இல்லை


----
மீள். கணியூர் நாஜி