Saturday, January 23, 2021

மகிழ்ச்சி என்றால் என்ன?

.
#மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பது எவ்வித சிக்கல்களும் இன்றி வாழ்வது என்று அர்த்தமல்ல,

 மாறாக  நேர்மறையான, நம்பிக்கையான உள்ளமுடையவனாக இருந்தால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

 விதியையும் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் மீதும்  நம்பிக்கை யுடன் இருந்தால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

 உங்களை வந்தடைந்தவைகள்  எவ்விதத்திலும் உங்களை வந்தடையாமல் இருக்காது என்றும் 

உங்களுக்கு கிடைக்காமல் போனவைகள் எந்நிலையிலும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் நீங்கள்  நம்பினால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

அருட்கொடைகிடைக்கும் போது நன்றி செலுத்துதல்
துன்பம் நேரிடும் போது பொறுமையுடன்
இருத்தல்
நற்கூலி கிடைக்குமென நற்செய்தி சொல்லுதல்
இத்தன்மைகள் உங்களிடத்தில் இருந்தால்
எந்நிலையிலும் நீங்கள் #சிறப்பாகவே இருப்பீர்கள்.
___முனைவர் ஷைக் ஆயிளுல் கர்னி அவர்களின் பதிவு விரிவாக்கப்பட்டுள்ளது
____கணியூர் இஸ்மாயில் நாஜி

Friday, January 22, 2021

கணவனைக் கவர்ந்தது எவ்வாறு?

கணவனைக் கவர்ந்தது எப்படி?
*************************************
உன்னை உன் கணவன் ஏன் அதிகம் நேசிக்கிறான்?
உன்னைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் பார்ப்பதில்லை,
ஆனால் அவனைச் சுற்றி உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களே?"
என ஒரு மனைவியிடம் கேட்கப்பட்டது?

அப்பெண் சொன்னாள்:
நான் மிக அழகானவளாக,சிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்.
#என் கணவன் என்னை வேதனைப்படுத்தினால் #மன்னித்துவிடுவேன்.

#அவர் கவலையுடன் வந்தால்
அக்கரையுடன் அவர் சொல்வதைக்
#காதுகொடுத்துக்_கேட்பேன்.

#அதிகமாகக் கொடுத்தால்
#அவரைப்_பாராட்டுவேன்.

 #குறைவாகக் கொடுத்தால் 
இருப்பதைக் கொண்டு
#போதுமாக்கிக்_கொள்வேன்.

#இப்படித்தான் என் இறைவன் 
எனக்கு கற்றுகொடுத்துள்ளான்.

காதலை நான் #துண்டித்ததில்லை.
அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதைவிட்டும்
#விலகிக்கொண்டதுமில்லை

#முட்கள் நிறைந்த பூமியானாலும்
அதில் நான் #ரோஜாவைத் தான் விளைவிப்பேன்.
    --அரபி இணைய தளத்திலிருந்து #கணியூர்நாஜி

Tuesday, January 12, 2021

நோயாளியை சந்திப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வை

நோயாளியை சந்திப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
--------------------
 முதலில் நோயாளியை சந்திப்பது நபிவழி என்பதையும்,அதற்கான நன்மை அல்லாஹ் தருவான் என்பதையும் நிய்யத்தாக கொள்ளவேண்டும்..

2.நோயுற்றிருக்கிறார் என கேள்விப்பட்டவுடனேயே நோயாளியைச் சந்திக்கவேண்டும்.

3,நோயாளியை  அவருக்கு சிரமமில்லாத நேரத்தில் சந்திக்க வேண்டும்.

4, நோயாளியின் தலைமாட்டு பகுதியில் அவரின் முகத்தை பார்த்த வண்ணம் அமர வேண்டும். பின், 
أسأل الله العظيم رب العرش العظيم  ان يشفيك 
அஸ்அலுல்லாஹ ல்அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அய் யஷ்பீக
மகத்தான அர்ஷின் ரப்பான மகத்தான அல்லாஹ்விடம்  உங்களை குணப்படுத்த கேட்கிறேன்
என்று ஏழு முறை சொல்லவேண்டும்.
  
5 .நோயுற்றவருக்கு  அல்லாஹ் விடமிருந்து பாவமன்னிப்பு,இன்னும் பல நன்மைகள்கிடைக்கும் என்பதை அவருக்கு நற்செய்தியாக கூறுவதுடன்,அல்லாஹ் வின் மீது நல்லெண்ணம் வைக்கவேண்டும் என்றும் அவனிடம் குணப்படுத்த துஆ செய்யவேண்டுமென அவருக்கு ஆறுதலாக பேசவேண்டும்.

6, நீண்ட நேரம் அமர்ந்து நோயாளிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சிரமம் தாராமல்  சீக்கிரமாக சந்திப்பை நிறைவு செய்யவேண்டும்.
-------من كتاب أن الدين  عند الله  الإسلام / محمد يسري إبراهيم 
தமிழில்: கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ ,தேவ்பந்த்