அராஜக ஆட்சியும் ,குழப்பமும் ,வறட்சியும்
தோன்றியதின் காரணம் என்ன?
------------------------------------------------------------------------
--------கணியூர் இஸ்மாயில் நாஜி யின் ஜும்மா உரையி லிருந்து
=================================================
30:41 ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
30:41. மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும்.
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ فَقَالَ: (يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ) [رواه ابن ماجة والحاكم]
இவ்வுலகை படைத்த அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஒரு நியதியை உருவாக்கினான்
வானம் பூமி ,சூரியன் ,சந்திரன் ,கால்நடைகள்,இன்ன பிற மிருகங்கள் முதல் கொண்டு மனிதன் வரை அவரவர் செல்ல வேண்டிய பாதைகளையு,ம் நிர்ணயித்து அதனை பின்பற்ற ஆணையுமிட்டான்....
கடலிலும் கரையிலும் ஃபஸாதுகள் வெளிப்பட துவங்கி விட்டன என அல்லாஹ் சொல்கிறான்.
ஃபஸாத் என்ற அரபி வார்த்தைக்கு கெட்டு போதல், வீணாக போதல், இயல்புக்கு மாறாக மாறுதல் என்று பொருளாகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து சீராக நடைபெற பாதைகள் அமைத்திருப்பார்கள். பாதசாரிகள் நடந்து செல்ல ஒரு நடைமேடை. இரு சக்கர வண்டிகள் செல்வதற்கு ஒரு பாதை. நான்கு சக்கர வண்டிகள் செல்ல ஒரு பாதை. பேருந்துகள் செல்ல ஒரு பாதை என்று பிரித்திருப்பார்கள்.
இடது பக்கமோ வலது பக்கமோ செல்ல விரும்புகின்றவர்கள் எந்த இடத்தில் பிறிய வேண்டும் என்பதற்காக ஒரு பாதை அமைத்திருப்பார்கள்.
எப்போது செல்ல வேண்டும், சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற விளக்குகள் அமைத்திருப்பார்கள்.
இந்த போக்குவரத்து விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் எவ்வித குழப்பமும் வராது. விபத்துகளும் ஏற்படாது. மாறாக, அப்பாதைகளில் செல்பவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்திற்கு செல்ல ஆரம்பித்தால் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாவதுடன் விபத்துகளும் ஏற்படும்.
இதை போன்று தான், அல்லாஹ் இவ்வுலகும் சீராக நடைபெற ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை அமைத்து கொடுத்திருக்கிறான்.
சூரியனும் சந்திரனும் பல்லாயிரம் ஆண்டுகளாக தனக்கென வகுக்கப்பட்ட பாதையில் சுழன்று கொண்டிருக்கின்றன. அவைகள் பாதை மாற ஆரம்பித்தால் இவ்வுலகம் இயங்க முடியாது.
அது போன்று தான் மனிதர்களுக்கும் இந்த பாதையில் தான் செல்ல வேண்டும் என்ய்ற்று வரையறுத்துன் கணவன் மனைவி, தாய் தந்தை, குடும்பம், வியாபாரி, விவசாயி இன்னும் பிற அலுவலர்கள், ஆட்சியாளர்கள், என மனிதர்களில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றார்களோ அவர்கள் அனைவர்களுக்கும் ஒரு பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவர்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் இருந்து மாறி வெவ்வேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்த காரணத்தால் இன்று குழப்பங்களும், கொந்தளிப்பும் உலகில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதாக இப்னுமாஜாவிலே ஒரு ஹதீஸ் ஓன்று வந்துள்ளது.
முஹாஜிரீன்களே! ஐந்து விடயங்களில் நீங்கள் சோதிக்கப்படுவீர்களானால் அவைகள் உங்களை பாதிக்காமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள்.
1 – ஒரு சமுதாயத்தில் வெக்கக்கேடான, மானக்கேடான விஷயங்கள் பகிரங்கமாக நடைபெற ஆரம்பித்தால் அவர்களுக்கு மத்தியிலே கொடும் நோய்கள், அவர்களுக்கு முன்னாள் கடந்து சென்ற சமூகத்தினர் அனுபவிக்காத நோய்களும், வேதனைகளும், பரவாமல் இருக்காது.
(((இன்று தொலைக்காட்சிகளிலேயும், பீச், பார்க் போன்ற பொது இடங்களிலும் கண்கள் கூசும் வெக்கக்கேடான காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
நபிகள் நாயகம் சொன்னதை போன்று இன்று HIV போன்ற கொடிய நோய்களும் நம் முன்னோர்கள் கண்டறியாத பிற நோய்களுக்கும் இந்த சமூகம் ஆளாகி கொண்டிருக்கிறது.)))
2 – எந்த சமுதாயத்தில் அளவிடுவதிலும், நிறுத்தலிலும் மோசடி செய்கிறார்களோ அந்த சமுதாயம் வறட்சியாலும் கடுமையான சிரமத்தாலும் ஆட்சியாளர்களின் அநியாயத்தாலும் பாதிக்கப் படுவார்கள்.
((( இன்று நாம் பார்க்கின்றோம். வியாபாரத்தில் பெரும்பாலானோர் நியாமாக நடப்பதில்லை. நேர்மையாக இருப்பதில்லை. அதனின் காரணமாக ஆட்சியாளர்கள் தாங்கள், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக, மக்களின் மீது அநியாயமாக வரிகளை விதிப்பதை பார்க்கின்றோம்.)))
3 – எந்த சமுதாயம் தங்களின் பொருட்களில் இருந்து கணக்கிட்டு ஜகாத் கொடுப்பதை தடுத்துக் கொள்கிறார்களோ அந்த சமுதாயம் வானத்திலிருந்து ஒரு துளி கூட கீழே விழாமல் தடுக்கப்பட்டு விடுவார்கள். கால் நடைகள் மட்டுமில்லை என்றால் ஒரு போதும் மழையே பெய்யாது.
((( இன்று நாம் பார்க்கின்றோம். பெரும்பாலான செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை கணக்கிட்டு ஜகாத் கொடுப்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் சீர் என்ற பெயரில் 3௦ பவுன், 4௦ பவுன் என்று நகையை பெறுகிறார்கள். ஆனால், அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் ஏற்று உணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் தான் இன்று பருவ மழை தவறி விடுவதை பார்க்கின்றோம்.)))
4 - எந்த சமுதாயம் அவர்கள் அல்லாஹ்விற்கும், ரஸுலிற்கும் கொடுத்த வாக்குகளை மீறுகிறார்களோ அவர்களின் மீது, அவர்களுக்கு தொடர்பே இல்லாதவர்களை அல்லாஹ் ஏவிவிடுவான். அவர்களின் கைகளில் உள்ள அனைத்தையும் பறித்து விட்டு சென்று விடுவார்கள்.
5 – எந்த சமுதாயத்தில் அவர்கள் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை கொண்டும், அல்லாஹ் இறக்கியதிலிருந்து தேர்ந்தெடுக்காமல் தீர்ப்பு வழங்கு கிறார்களோ அல்லாஹ் அவர்களுக்கு மத்தியிலே நெருக்கடியை ஏற்படுத்துவான்.
