Wednesday, September 20, 2017

உன்னயே நீ அறிவாய்.

சிலர் உங்களை தக்வாதாரி என்பார்கள்,சிலர் படுபாவி என்பார்கள்.
சிலர் குணக்குன்று என்பார்கள்,சிலர் அப்படி சொல்வார்கள்,சிலர் இப்படி சொல்வார்கள்.
   ஆனால் மற்றவர்களை விட உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.
     உங்களுடைய இரகசியத்தை உங்களை அன்றி மற்றொருவன் அறிந்திருக்கிறான் என்றால் அது அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
    உங்களுக்கும் அல்லாஹ் விற்குமிடையை உள்ள உறவை இரகசியமாக  -நேர்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
   பாராட்டுக்கள்உங்களை
கர்வமடையச் செய்திடவேண்டாம்.
      இகழ்ச்சிகள் உங்களை
சோகத்தில் ஆழ்த்திடவேண்டாம்.
         அல்லாஹ் சொல்கிறான்:

بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ‏ 
தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்து கொள்வான்.
(அல்குர்ஆன் : 75:14)
--------அரபியிலிருந்து தமிழில்
கணியூர் இஸ்மாயீல் நாஜி

Thursday, September 14, 2017

மறந்தவை நினைவிற்கு வர

நீங்கள் எதையாவது மறந்து விட்டால் அல்லாஹ்வை நினைவுறுங்கள்.உங்களுக்கு மறந்தது நினைவிற்கு வந்துவிடும்
ۚ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ
நீங்கள் மறந்து விட்டால் அல்லாஹ்வை நினையுங்கள் என்ற வசனத்திற்கு இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் விரிவுரையில் சொல்கிறார்கள்,

"ஏதாவது பிரச்சனையில் எனது சிந்தனை தடைபட்டு அதற்கான விளக்கம் கிடைக்காவிட்டால் ஆயிரம் முறை  இஸ்திஃபார் செய்வேன் அல்லாஹ் எனது உள்ளத்தில் அதற்கான தீர்வை திறந்துவிடுவான"்

லால்பேட்டை மன்பவுல் அன்வார் கலாசாலையில் நான் ஷைகுல்வரா அப்துல்ஜமீல் ஹஜ்ரத் அவர்களிடம் அரபு இலக்கண இலக்கியம் தொடர்பான முக்தஸருல் ம ஆனி என்ற நூலை ஒதினேன் அந்த பாடம் விளங்குவதற்கு கடினமாக இருக்கும் சில நேரங்களில் ஹஜரத் அவர்களிடம் நான் சந்தேகம் கேட்பேன் அவர்கள் இதற்கான விடையை நாளை சொல்கிறேன் என்பார்கள்
மறுநாள் பாடத்தை துவக்குமுன் நீங்கள் நேற்று என்ன கேட்டீர்கள் என்பார்கள்
(கவனிக்க ;ஹஜரத் எவ்வளவு சிறிய வயது மாணவனாக இருந்தாலும் வா போ என்றோ வாடா போடா என்றோ ஒருமையில் அழைக்க மாட்டார்கள்)

பின் அதற்கான விளக்கத்தைத் தருவார்கள் ஒரிரு முறை இதனைக் கவனித்த நான் ஹஜரத் அவர்களிடம்  நாங்கள் கேட்ட  கேள்விக்கு முதல் நாள் தெளிவு படுத்தாத நீங்கள் மறுநாள் எப்படி சொல்கிறீர்கள் எனக்கேட்டேன்
ஹஜரத் அவர்கள் சொன்னார்கள்;

நீங்கள் கேட்கும் போது அதற்கான  விடை எனக்கு தெரியாது

நான் தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு திக்ர் செய்து விட்டு கிதாபை விரித்து அந்த பகுதியை பார்ப்பேன் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையை  அல்லாஹ் என் உள்ளத்தில் உதிக்க வைப்பான்

சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ் எப்படிப்பட்ட மகானை அல்லாஹ் ஆசியராகக் கொடுத்தான்

அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக!

நாமும் எதையாவது மறந்து விட்டால் இஸ்திஃபார் செய்வோம்  இன்ஷா அல்லாஹ்
------மீள் பதிவு கணியூர் இஸ்மாயீல் நாஜி

Monday, September 11, 2017

மவ்லானா அஷ்ரப்அலி தானவி(ரஹ்)

ஆன்மீக குருவும் நவாப் பிரதிநிதியும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹகீமுல் உம்மத் மவ்லானா அஷ்ரப் அலி தானவி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள், ஆடம்பரங்களை விரும்பாத எளிமையானவர். வெளிப்பகட்டை விரும்பாதவர். அவர்கள் மாணவர்களின் அழைப்பின் பேரில் ஹைதராபாத் வந்தார்கள். மவ்லானா  அவர்களை சந்திக்க ஹைதராபாத் நவாப் நிஜாமின் பிரதிநிதி  வந்தார். அப்பொழுது அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடலைக் கேளுங்கள்:

நவாபின் பிரதிநிதி : மவ்லானா! தாங்கள் நவாபை சந்தித்தால் பயனுள்ளதாக இருக்கும்

மவ்லானா : யாருக்கு பலனுள்ளதாக இருக்கும்.

பிரதிநிதி : இருவருக்குமே!

மவ்லானா : அவரிடம் எனக்கு எந்த தேவையும் இல்லை. ஆதலால், அவரால் எனக்கு எந்த பயனும் இல்லை.

பிரதிநிதி : சரி தான். ஆனால், நவாபுக்கு பலனுள்ளதாக இருக்கும் மவ்லானா.

மவ்லானா : அப்படியானால் சந்திக்கலாம்.

பிரதிநிதி : மகிழ்ச்சி. நவாபிடம் நேரம் கேட்டு தங்களை வந்து அழைத்து செல்கிறேன்.

மவ்லானா : அவரை சந்திப்பதற்கு எனக்கு அவசியம் இல்லை. அவர் தான் என்னை சந்திக்க விரும்புகிறார். எனவே, அவர் தான் என்னை தேடி வர வேண்டுமே தவிர நான் அவரைத் தேடி அங்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

பிரதிநிதி : நல்லது. நவாபிடம் அவருக்கு எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று கேட்டு அவரை அழைத்து வருகிறேன்.

மவ்லானா : மீண்டும் தவறு செய்கிறீர். என்னை சந்திக்க அவர் தான் விரும்புகிறார். என்னிடம் தான் நீங்கள் நேரம் கேட்க வேண்டுமே தவிர அவரிடம் இல்லை.

பிரதிநிதி:நல்லது, மவ்லானா ஒரு நேரம் சொல்லுங்கள் ,நான் நவாபை அழைத்து வருகிறேன்

மவ்லானா:மன்னிக்கவும், இங்கே நான் விருந்தினாராக வந்திருக்கிறேன் ,என்னுடைய ஊரான தானாபவனாக இருந்தால் நான் என விருப்பத்திர்கேற்ப நேரம் ஒதுக்குவேன்,ஆனால்  இங்கே என்னை அழைத்தவர்கள் தான் நேரம் ஒதுக்கவேண்டும் ஏனென்றால், அவர்கள் என்னை அழைக்கும்போதே  சில நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் ,இங்கே அவர்களின் விருப்பதிற்கேற்பவே நான் செயல் பட முடியும் எனவே அவர்களை அணுகி நீங்கள் என்னுடைய நேரத்தை கேட்டு வாங்குங்கள் 

திகைத்து போன நவாபின்
பிரதிநிதி : நல்லது மவ்லானா! மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

இந்த வரலாற்றை எங்கள் வகுப்பில் சொன்ன ஆசிரியர், இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ்  அவர்கள், இஹ்யா உலூமுத் தீன் என்ற தங்களின் நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்கள்:
"ஒரு சிறந்த செல்வந்தன் யாரென்றால், மார்க்க அறிஞரின் வீட்டு வாசலில் நிற்பவன். மோசமான மார்க்க அறிஞர் யாரென்றால், ஒரு செல்வந்தரின் வீட்டு வாசலில் காத்து கிடப்பவர்."

யா அல்லாஹ்! உன்னை அல்லால் யாரிடமும் எத்தேவைக்கும் கையேந்தாத நிலையை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!
ஆமீன்!!!!

லைத்துல் கத்ர் இரவும் அரபா நாளும்

லைத்துல்கத்ர் இரவும்
அரபா நாளும்
---------------------===-==--------------*****
இரவுகளில் சிறந்தது லைத்துல் கத்ர்
நாட்களில் சிறந்தது அரபா நாள்

லைத்துல் கத்ர் என்று ஏற்படும் என்பதை
அல்லாஹ் நமக்கு குறிப்பாக அறிவிக்கவில்லை.

அரபாநாள் துல்ஹஜ்பிறை 9 அன்று என
நமக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
லைத்துல் கத்ர் பிந்தைய இரவில் அல்லாஹ்
முதல் வானத்தில் இறங்கி அருள்புரிகிறான்.

அரபா நாளில் அல்லாஹ் பகல் முழுவதும்
அருள் மழை பொழிகிறான்.
அரபா நாளன்று கேட்கப்படும் துஆக்கள்
உடனே ஒப்புக்கொள்ளப்படும் எனபதால்
பல பெரியார்கள் தங்களின் முக்கிய தேவைகளை அன்றைய தினம் கேட்பதற்காக
ஒத்திவைப்பார்களாம்.

அத்தகைய சிறப்பான நந்நாளில் நாம் நோன்பு நோற்போம் .

திக்ரு ,தஸ்பீஹ் இஸ்திஃபார் என பகல் பொழுதை பயனுள்ளதாக்குவோம்

குறைப்பாக புறம் பேசுதல் கோள் மூட்டுதல் அவதூறு பரத்தல் என என எந்த ஒரு பாவத்தையும் செய்யாமல் இருப்போம்

அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாக!
ஆமீன்.