Thursday, September 28, 2023

மீலாதுந்நபி தின நலத்திட்டங்கள்

#இருபத்துஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சிறப்பு நிகழ்வு.

1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்விற்குப் பின் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இறுக்கமான மனநிலை நிலவியது.

#சிதம்பரம் பல்வேறு சமுதாயங்கள் இரண்டற கலந்துவாழும் நகரம். சமுதாய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக விளங்கும் நகரம்.
தொடர்ந்து முஸ்லிம்களுக்கும் பிற சமுதாயத்திற்குமிடையே நிகழும் நல்லுறவை மேம்படுத்தவும் இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேயத்தை அனைவரிடமும் கொண்டு செல்லும் நலத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கோடு சிதம்பர நகர அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாஅத்தின் முன்னிலையில் 16/03/1998ல்
#சிதம்பரம்_நகர_இஸ்லாமிய_ஐக்கியபேரவை உருவாக்கப்பட்டது.
அதன் தலைவராக 
மர்ஹும். டவுன் நாயிப் காஜி. அப்துஸ்ஸத்தார் ஸாஹிப் அவர்களும்
செயலாளராக,
மவ்லவீ. கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயியும்
பொருளாலராக,
கவிஞர். E.மஹ்பூப் ஹுஸைன் (ஜவ்ஹர்)
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேரவையின் முதல் நிகழ்வாக, 17/07/1998ல் அனைத்து மக்களுக்கும் அறிமுகமான #மீலாதுநபி விடுமுறை நாள் வந்தது.
அந்நாளை  #எல்லோருக்கும்சொந்தம்நபிகள்நாயகம் ﷺ என்ற தலைப்பில் அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தும் நலத்திட்டங்களை  செயல்படுத்த முடிவெடுத்து அந்நாளில் நோயாளிகள், ஆதரவற்ற முதியோர்கள்
மாற்றுத்திறனாளி கள்
போன்றவர்களைப் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதென்று முடிவெடுத்து செயல் படுத்த முனைந்தோம்
மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது

அந்த சேவை 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது

28/09/23 அன்று 
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை உன் நோயாளிகள் 200 பேருக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது. அன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

 மாரியப்ப நகர் #அன்பகம்முதியோர் இல்லம்,
 இண்டேன் கேஸ் பின்புறம் அமைந்துள்ள #CCWE #மனவளர்ச்சிகுன்றியமாணவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிரட், பழங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹபூப் உசேன் தலைமை வகித்தார். மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி, ஃபைசல் மஹால் முஹம்மது யாசீன் ஆசியன் ஷாப்பிங் மால் இக்பால், நவாப் பள்ளி ஜாக்கீர் உசேன், சையத் மொய்தீன், மிலன் ரெடிமேட் முஹம்மது எஹ்யா, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்கர் அலி பட்டேல், கண்காணிப்பாளர் முஹம்மது அலிகான், லால்பேட்டை  ஏ.எஸ்.அஹமது, எள்ளேரி ஆரிஃபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை #மருத்துவர் #சிவகாமி, தலைமை செவிலியர் #இமாக்குலேட், முஹம்மது ஜக்கரியா,பி.அப்துல்ரஹ்மான், முஸ்தபா, முஸம்மில் உசேன், முதஸ்ஸிர் உசேன், மௌலவி ஹாபிள் ஷாஹுல் ஹமீது, இமாம் ஹஜ் முஹம்மது ரப்பானி, தைய்யுப் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.

Friday, September 22, 2023

போட்டோ எடுப்பது தொடர்பாக

போட்டோ தொடர்பாக ஆலிம்களை கிண்டல் செய்து பதிவிட்டு தங்களுக்கு தாங்களே சபாஷ் என முதுகை தட்டிக் கொள்ளும் நவீன அறிவு ஜீவி களுக்கு சில கேள்விகள்.
போட்டோ எடுப்பது ஹராம் என கொடுக்கப்பட்ட பத்வாவை படித்து பார்த்துள்ளீர்களா?
அதில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள் தெரியுமா?
ஒன்றை ஹராம் எனச் சொல்லும் போது அவற்றிகு சில விதி விலக்குகளும் தரப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்த பத்வா இன்னும் நடைமுறையிலிருக்கிறது, வாபஸ் பெறப்படவில்லை என்றாவது உங்களுக்குத்தெரியுமா?
அல்லாஹ்வும் ரசூலும் ஒன்றை ஹராம் என அறிவித்ததற்கும்,
குர்ஆனில்,ஹதீஸில்  ஹலால் என்றோ,ஹராம் என்றோஅறிவிக்கப்படாத ஒன்றை தங்களது இஜ்திஹா தின் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் ஹராம் என அறிவிப்பதறகுமுள்ள வித்தியாசம் என்ன? என்பது தெரியுமா?
அவசியமின்றி போட்டோ எடுப்பது விரும்பத்தக்கதல்ல என்ற கொளகையுடன் தங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்காத பலமூத்த மார்க்க அறிஞர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
போட்டோ எடுப்பது தொடர்பாக விரிவான விளக்ங்களுடன் உருது நூல்கள் இருக்கின்றன அவகளைப் படியுங்கள். அல்லது மார்க்கத்தை முறையாக கற்றரிந்த மார்க்க அறிஞர்களிடம் நான் தொடுத்துள்ள வினாக்களுக்கு விடை தேட முயலுங்கள்.
ஏட்டுச் சுரைக்காய் க றிக்குதவாது
யூடூப் பார்த்துக் கொண்டு சுயமாக பிரசவம் பார்த்தவனைபோல  வெறும் தமிழில் உள்ள சட்ட நூல்களை படித்து விட்டு நானும் அறிஞன்தான் என ஆலிம்களை கிண்டல் செய்யாதீர்கள்
லட்சக்கணக்கான முஃமின்களுக்கு வழிகாட்டிகளான 
 மூத்தஅறிஞர்கள் ஒரு கருத்தை சொல்லி சென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கேதேனும் காரணம் இருக்கும் என்றுதான் ஒரு அறிவுள்ளவன்  சிந்திப்பான்  ஆலிம்களின்மீது வன்மம் உள்ளவர்கள் தாம்  சமயம் கிடைக்கபொழுதெல்லாம் அவர்களை நையாண்டி செய்வார்கள

அல்லாஹ் நன்கறிந்தவன் எண்ணத்திற்கேற்ப கூலி வழங்குவான்.