Monday, October 28, 2019

பஜ்ர் தொழுகை தூக்கத்தை விட ஏன் சிறந்தது?

ஏன் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது?
**************************
   ஏனென்றால் தூக்கம் மன இச்சையின் அழைப்பு
தொழுகை மனிதனைப் படைத்த இறைவனின் அழைப்பு.

#தொழுகை_தூக்கத்தை_விடசிறந்தது:
ஏனென்றால், தூக்கம் சிறு மரணம்
பஜ்ர் தொழுகை புதிய வாழ்க்கை.

#தொழுகை_தூக்கத்தை_விடசிறந்தது
ஏனென்றால்,தூக்கம் உடலுக்கு ஆரோக்கியம்
தொழுகை ஆன்மா விற்கு ஆரோக்கியம்.

#தொழுகை_தூக்கத்தைவிடசிறந்தது
ஏனென்றால் தூக்கத்தில் இறைநம்பிக்கையாளனும், 
 இறை நிராகரிப்போனும் ஒன்றாக இணைகிறார்கள்
ஆனால் தொழுகையை இறைவிசுவாசி மட்டுமே நிறைவேற்றுகிறான்.

"எங்கள் காலத்தில் தொடர்ந்து பஜ்ரு தொழுகைக்கு வராதவரைப் பற்றி அவர் முனாபிக்காக இருப்பாரோ என சந்தேகிப்போம்" என நபித்தோழர்கள் சொல்கிறார்கள்.

பஜ்ரு தொழுகையைத்  தொடர்ந்து தொழாதவர்கள் சுயபரிசோதனை  செய்யட்டும் 
'நாம் ஏன் தொழுவதில்லை? என்று' .

#பஜ்ரு_தொழுவோம்"
      ---கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, October 27, 2019

ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்து சொல்லலமா

பிறந்த நாள் ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமா?

---------------------------------------------------------------------------------------------
பிறந்த நாளை மாற்று மத சகோதரர்கள் சிறப்பான நாளாக கருதி அதை கொண்டாடுகிறார்கள் .கொண்டாட்டம் என்றால் அன்றைய நாளை பெருநாளாக கருதி கோவிலுக்கு போவது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது சிறப்பு விருந்து மெழுகுவர்த்தி கொளுத்துவது என கொண்டாடுவார்கள்.இத்தகைய கொண்டாதிற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை ஏனென்றால் இரு பெருநாள்கள் மட்டுமே கொண்டாட தகுதி வாய்ந்தவை.
ஆனால் ஒரு முஸ்லிம் இன்று எனக்கு பிறந்த நாள் இத்துணை ஆண்டுகள் என அல்லாஹ் என்னை வாழ வைத்ததைப் போல
மேலும் பல ஆண்டுகள் வாழ துஆ செய்யுங்கள் என கேட்டாலோ அல்லது மற்றவர்கள் அவருக்காக துஆ செய்தாலோ அது பாவமாகுமா ? என்பது இன்றைய என்  கேள்வி  
 
பித் அத் என்பது அல்லாஹ் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் வழியாக பரிபூர்ணப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி அவர்கள் தங்கள் சொல்லால் ,செயலால் ,அங்கிகாரத்தால் அனுமதிக்காத ஒன்றை மார்க்கம் என்ற பெயரால் இதனை செய்வது சுன்னத் என்றோ அல்லாஹ்வின் கூலி கிடைக்குமென்றோ  சொன்னால் செய்தால் அதுதான்    பித் அத் ஆகுமே தவிர பிறந்த நாள் அன்று நமக்கு ஒரு வயது முடிந்துவிட்டது மேலும் பல ஆண்டுகள் வாழ அருள் புரி அல்லாஹ் என கேட்பதாலோ பிறரிடம் துஆ கேட்க சொல்வதாலோ
பிறர் நமக்கு துஆ செய்தாலோ அது பித் அத் எனும் வரம்புக்குள் வராது என்பது  என்  கருத்து.
ஹிஜ்ரி புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வது தொடர்பாக மறைந்த சவுதி தலைமை முப்தி அப்துல் அஜீஜ் இப்னு பாஜ் அவர்கள் அந்த நடைமுறை நபிகளார் காலத்திலோ ,நபி தோழர்கள் காலத்திலோ இல்லை இருப்பினும்  ஒருவர் இந்த வருடம் முழுவதும் நீங்கள் நன்றாக இருங்கள் என வாழ்த்தும்போது வ லக ஆமீன் உங்களுக்கு அப்படி ஆகட்டும் என்று சொல்வதோ அல்லது அவர் மற்றவர்களுக்கு துஆ செய்வதோ குற்றமில்லை என சொல்கிறார்.
எனவே அல்லாஹ் வும் நபியும் ஹராம் என சொல்லாத ஒன்றை ஹராம் என சொல்பவர்கள் அதற்கான சரியான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் 
இதில் நான் எந்த இடத்தில் தவறு கிறேன் என சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன் இன்ஷாஅல்லாஹ் 
இது ஒரு ஆரோக்கியமான விவாதம் குரான் ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்பபவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம் 
அல்லாஹ் நேரான வழியைக் காட்டுவானாக

Thursday, October 17, 2019

பேராசையால் தனது மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை

பேராசையால் தன் மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை.
----
1967ம் ஆண்டு தேவ்பந்த் மதரஸாவிற்கு டெல்லிவரை ஒரு 'ரயிலிலும்', டில்லியிலிருந்து வேறொரு ரயிலிலிலும் தேவ்பந்த் செல்ல வேண்டும்.
அது தொடர்பாக  முன்பதிவு செய்ய அங்கே ஏற்கனவே கல்வி கற்று வரும் ஒரு சகோதரரிடம் ஆலோசனை கேட்டேன்.
    ரயிலில் செல்லும் மாணவர்களுக்கு இருவழி கட்டண சலுகை உண்டு.
இறுதியாண்டு மாணவர்கள் திரும்பிச் செல்லமாட்டார்கள்,ஆனால் அந்த பாஸ் அவர்களிடம் இருக்கும் அதை வாங்கி அவர் பெயரில் நீ கட்டண சலுகையுடன் டெல்லி செல்லலாம் ' என்ற ஆலோசனையை வழங்கினார்.
     இதை என் தந்தை - யாக்கூப் வாத்தியாரிடம் சொன்னேன்.
   அந்நேரம் என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.பயணக்கட்டணம் குறையும் என்றால் நல்லதுதானே என எண்ணுவார் என்றே எண்ணினேன்.
     ஆனால் என் தந்தை, 'போறது,நேர்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும் மார்க்கக் கல்வியைக் கற்க, அதன் துவக்கமே பித்தலாட்டமா? நீ அந்த கல்லூரியின் மாணவனாக இன்னும் சேராதபோது அந்தக் கல்லூரின் மாணவன் என இன்னொரு மாணவனின் பெயரைப் பயன்படித்தி கட்டண சலுகை பெறுவது,அரசாங்கத்தை ஏமாற்றும் செயலல்லவா? ஆலிமான நீயே மோசடி செய்யலாமா?' எனக்  கண்டித்தார்.
     என் தந்தை நான் தவறுசெய்த பொழுதெல்லாம் அடித்துக் கண்டிக்கத் தவறியதில்லை.
      என் தந்தை  என் பாட்டனாரால் ஆரம்பிக்கப்பட்ட கணியூர் இஸ்லாமிய துவக்கப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.
   எங்கள் பள்ளியில் ஒரு கிருத்துவர் ஆசிரியராக இருந்தார். ஒருமுறை அவர் சர்சிற்குச் செல்லும் வழியிலிருந்த வைக்கோல் போரின் மீது நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவ்வழியே வந்த அந்த ஆசிரியரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஒளிந்துகொண்டோம். இது போன்று இரண்டு மூன்று முறை செய்தோம்.
    மறுநாள் அந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் என் தந்தையிடம் சொல்லிவிட என் தந்தை மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப் படுத்தும்வண்ணம்  நடப்பியா? என பிரம்பால் அடித்தார். அதே நேரத்தில் எங்களிடம் நகைச்சுவையாகவும் பேசுவார்.
     ஒழுக்கத்தைக் செயல்வடிவில் கற்றுக் கொடுப்பவர்தான் தந்தை.
      நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் இளந்தளிர்களான அம்மாணவர்களைப் பார்த்து ஒரு இளைஞனின் தந்தை என்ற முறையில் என் மனம் பதைபதைத்தது.
    தந்தையின் பேராசையால்  அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
     கல்லூரி செல்லவேண்டியவன் சிறைக்குச் சென்றது அவன் உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கும்?
    இது எதனால் தன் மகனுக்கு நேர்வழியைக் கற்றுத்தர வேண்டிய தந்தையே அவனை தவறாக வழிநடத்தியதுதான் காரணம்.
       எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மல்லிப்பட்டினத்தில் நடந்த மீலாது விழாவில் கலந்து கொண்டு நானும் #மறுமலர்ச்சி_ஆசிரியர்_நாவலர்
#ஏ_எம்_யூசுப்சாஹிபும்
பேருந்தில் ஒன்றாக  பட்டுக்கோட்டை பயணித்தோம். அப்பொழுது  அவர் என்னிடம் என் மகன் மருத்துவம் படிக்க ஆசைப் படுகிறான். நான் அவனிடம் சொல்லிவிட்டேன், எம்ஜிஆர் என் நண்பர் என்பதால் உனக்கு மருத்துவசீட்டு வாங்கித் தருவேன் என எதிர்பார்க்காதே! மெர்ரிட்டில்  நீ பாஸ் செய்தால் உன்னை அரசு மருத்துவக்கலலூரியில் சேர்க்கிறேன்' எனச் சொல்லிவிட்டேன் என்றார்.
தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

التهنيةبعيد غير المسلمين

https://archive.islamonline.net/?p=120