Wednesday, May 26, 2021

மஸ்ஜித் இமாம் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு மஸ்ஜித் இமாம் எப்படி இருக்கவேண்டும்?
----
 இமாமத் என்பது ஒரு பதவி அல்ல அது ஒரு பொறுப்பு
இப்பொழுது எல்லோருமே  -ஆலிம் பட்டம் பெறாதவர்களும்  இமாமாக நின்று தொழவைக்கிறார்கள்
அது தவறல்ல

ஆனால் தொழுகையின் பர்ளு,வாஜிப் களை அறிந்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனை.

ஆனால் ஒரு மஸ்ஜிதின் இமாமாக இருப்பவருக்கு கூடுதல் பொறுப்புண்டு.

அவர் தொழுகை கூடினால்தான் அவரை பின்பற்றி தொழுபவர்களின் தொழுகையும் கூடும். அவரின் தொழுகை நிறைவேறவில்லை  என்றால் அனைவரின் தொழுகையும் நிறை வேறாமல் போன பாவம் அவரைச் சேரும்.
எனவே, அவர் தன் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்,சிறுநீர் கழிக்கும் போதோ,அதன் பின்னரோ ஓரிரு துளிகள் ஆடையில் படாமல் கவனமாக இருக்கவேண்டும் ,

வுழுவும் பரிபூரணமான முறையில் கவனமுடன் செய்யவேண்டும்.
இந்த சட்டம் தொழுபவர்கள் அனைவருக்குமானது என்றாலும் தனிமனித தவறு அவனுடன் போகும்.

ஒரு இமாம் செய்யும் தவறு அவரைப் பின்பற்றித் தொழும் அனைவரையும் பாதிக்கும்.

நான் லால்பேட்டையில் 1964-67ல் ஓதும்போது சோழமாதேவியிலிருந்து ஒருவர் பத்து கேள்விகள் எழுதி இதற்கு பத்வா கொடுங்கள் என  கேட்டிருந்தார்.
அத்தனை கேள்வியும் இமாமைப் பற்றியே இருந்தது
பாவம் அந்த இமாமின் மீது அவருக்கு என்ன கோபமோ?
அதில் இரண்டு கேள்விகள் நினைவில் இருக்கிறது.

ஓன்று,எங்கள் இமாம் மொட்டைஅடிக்காமல் கிராப் வைத்திருக்கிறார் இது கூடுமா?

இரண்டு ,இமாம் சிறுநீர் கழித்துவிட்டு டேலா கட்டி உபயோகிக்காமல் வெறும் தண்ணீரை மட்டுமே உபயோகிக்கிறார் இது கூடுமா?

அக்காலத்தில் மண்ணைக் குழைத்து வட்டவட்ட மாக வரட்டி தட்டுவது போல் செய்து வைத்திருப்பார்கள்
அது சிறு துளிகளை உறுஞ்சிவிடும்.
வயோதிகர்கள் அந்த டேலக்கட்டியை வைத்துக் கொண்டு சிறுது நேரம் எழுந்து நின்றோ, சிறிது நேரம் நடந்த பின்தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள்.
இதைப் போன்று அந்த இமாம் செய்வதில்லை என்பதே குற்றச்சாட்டு.

டேலா கட்டியை கட்டாயம் உபயோகிக்கவேண்டிய அவசியமில்லை.
எனினும் இமாம் பேணுதலுக்காக இரண்டையும் உபயோகிப்பது விருப்பத் தக்கது என பதில் தரப்பட்டது.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் பொதுமக்கள் இமாமுடைய செயல்களை கூர்மையாக அவதானிக்கிறார்கள்.
இமாமிடம் என்ன குறை இருக்கிறது என்று ஆராய்வதற்காகவே ஒவ்வொரு மஹல்லா விலும் இரண்டு பேர் இருப்பார்கள்.
இமாம்கள் அல்லாஹ்விற்கு பயந்துதான் 
தொழுக வைப்பதற்கு தயாராகிறார்கள்.

இமாம் என்ற பொறுப்பை  பொது மக்கள் பலரும் அலட்சிமாக நினைக்கிறார்கள்.
அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது இமாம்களுக்குத்தான் தெரியும்.

 குறிப்பு :நான் இமாமாக பணியற்றியது இல்லை.
வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான்  தொண்டியில் ஏழு வக்துகள் தொடர்ச்சியாக இமாமத் செய்துள்ளேன்.

அதன்பின்  அந்தப் பக்கமே போனதில்லை.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Monday, May 24, 2021

அடி உதவுவதுபோல்

Kaniyur Ismail Najee Manbayee 

இரண்டாம் கலிபா அமீருல் முஃமீனின் உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்  ஆட்சி காலத்தில் “ஸுபய்க்” என்ற ஒரு மனிதர் இருந்தார்.
“தாரியாத்” என்ற அத்தியாயத்திற்கு நூதனமான விளக்கங்களை கூறி ஈராக் பகுதி முழுவதும் சுற்றி வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.
 விதவிதமான அவருடைய விளக்கத்தை கேட்டு முஸ்லிம்கள் மத்தியிலே தவறான எண்ணங்களும் கொள்கை குழப்பங்களும் ஏற்பட்டன.
மக்கள் பலவாறு எடுத்துக் கூறியும் அவர் தனது பரப்புரையை நிறுத்தவில்லை. இறுதியில், அப்பகுதியின் அதிகாரி அவரை கைது செய்து ஒரு தூதுவரின் துணையுடன் மதினாவிற்கு அனுப்பி வைத்தார்.

கலீபா விற்கு அந்த அதிகாரி எழுதிய கடிதத்தில் இந்த மனிதரின் பரப்புரையினால் வெகுஜன மக்களிடையே பெரிய குழப்பமும் கருத்து வேற்றுமையும் ஏற்பட்டிருக்கிறது இவரை விசாரியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை படித்த கலீபா அந்த குற்றவாளியை அழைத்து விசாரித்து அவருடைய கருத்து தவறு என்பதை உணர்த்தினா்கள்
ஆனால், அவர் திரும்ப திரும்ப தனது கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பொறுமையை இழந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது சாட்டையை வரவழைத்து அவரை அடிக்க ஆரம்பித்தார்.
ரத்தம் பெருக்கெடுத்து ஓட வலி தாங்க முடியாமல் அம்மனிதர் சத்தமிட்டு,

“"قذ ذهب الذي كنت أجده في راسي
 
( ألاصابه لابن حجر)
"என் மண்டையில் எதை ஏற்றி வைத்திருந்தேனோ அது போய் விட்டது” என கத்தினார்.

அதற்கு மேல் தண்டிக்காமல் கலீபா அவர்கள், அவரை விடுவித்து விட்டார்.

அம்மனிதர் அதன் பின் வாழ்நாள் முழுதும் அந்த பேச்சையே எடுக்கவில்லை.

சில நேரங்களில், ஆதாரங்களை காட்டி பேசுவது பலனளிப்பதில்லை.
சாட்டை வழியாக பேசுவது பலனளிப்பதாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால், பயம் இல்லாத மனப்பாங்கு தான் பல தவறுகளுக்கு வழி வகுக்கிறது. மனிதனுக்கு தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருக்குமேயானால், அவன் நேர்மையாக நடக்க முயற்சிப்பான்.
பயம் ஒரு மனிதனை நிதானமாக சிந்திக்க செய்கிறது.
நிதானமாக சிந்திப்பவன் தவறு செய்ய துணிய மாட்டான்.
தேவையில்லாத பேச்சுகளை பேச மாட்டான்.
பயம் மனிதனை திருத்தும் ஒரு கருவி.

                                                      
 _மவ்லானா வஹீதுத் தீன் கான் அவர்களின் “அர்ரிஸாலா” என்ற மாத இதழிலிருந்து.. (ஜனவரி 1983)
- தமிழில் கணியூர் இஸ்மாயில் நாஜி ஃபாஜில்மன்பஈ

Saturday, May 15, 2021

துக்கம் விசாரிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்

துக்கம் விசாரிக்கும் போது என்ன சொல்லவேண்டும்
------------------------------------------------------------==-----
என்னுடைய inபாக்ஸில் ஒரு சகோதரர் 
عظم الله أجركم وأحسن عزاءكم وغفر لميتكم
என்ற இந்த துஆ விற்கு என்ன பொருள்எனக்  கேட்டிருக்கிறார்.

அல்லாஹ் உங்களின் கூ லி யை அதிகமாக் குவானாக 
உங்களின் பொறுமையை அழகாக்குவானாக 
உங்களின் மய்யித்தை அல்லாஹ் மன்னிப்பானாக 
என்பது பொருள் 
முஸ்லீம் மவ்தாகி விட்டால் அவரின் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிப்பது நபி வழி மட்டுமின்றி ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமிற்  கு செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகும் 
அவ்வாறு துக்கம் விசாரிக்கும் போது என்ன  சொல்லவேண்டும் என்பதற்கு பல பெரியார்கள் பல்வேறு  வாக்கியங்களை சொல்லியுள்ளார்கள் .அதில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது 
ஆனால் நபி சல்லல் லாஹு அலைஹிவ ஸல் லம்  அவர்கள் தமது மகள் ஜைனப்(ரழி) அவர்களுக்கு சொன்ன ஆறுதல்   வார்த்தைகள் சிறப்பானது 
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ، وَلَهُ مَا أَعْطَى ، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ) رواه البخاري (1284) ، ومسلم (923) . 
எதை எடுத்தானோ அது அல்லாஹ்விற்கே சொந்தம் ,எதை கொடுத்தானோ அதுவும் அவனுக்கே. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு
எனவே பொறுமையாக இரு அதற்குரிய நன்மையை எதிர்பார்த்திரு.
புகாரி ,முஸ்லீம்
    மீள் பதிவு கணியூர் நாஜி

Thursday, May 13, 2021

படித்ததினால் மட்டும் பண்பு வந்திடுமா?

ஒரு முறை லால்பேட்டை மதரஸாவில் ஒரு மாணவர் திருடிவிட்டார் 
மதரஸா நிர்வாகிகளில் ஒருவர் ஓதரபிள்ளை திருடானாக இருக்கிறாரே என்றார் 

அதற்கு எங்கள் உஸ்தாத் அமானி ஹஜரத்(ரஹ்) அவர்கள் ஓதரபிள்ளை திருடனாக இருக்கிறார் எனச் சொல்லாதீங்க திருடுபவன் ஓத வந்திருக்கிறான் எனச்சொல்லுங்கள் எனறார்கள்.

  அவ்வாறே  மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுபவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களே எனச் சொல்லாதீர்கள். கீழ்த்தரமான குணமுடையவர்கள் அறிவுரை சொல்லும் இடத்திற்கு வந்துவிட்டார்களே என வேதனைப் படுங்கள்.

 டாக்டர். மு.வரதாசன். அவர்கள் ஒரு நாவலில் "படித்தவர்கள் பாவம் செய்கிறார்களே 
அவர்களின் படிப்பு அவர்களுக்கு பயன் தரவில்லையா?" என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்வார்:
     "படிப்பு என்பது ஒளி தரும் விளக்கைப் போன்றது. விளக்கு இருட்டான ஒரு அறையில் இருக்கும் குப்பைகளை காட்டுமே தவிர, விளக்கே குப்பைகளை நீக்காது.  படிப்பும் அப்படித்தான்,கற்ற கல்வி நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை சுட்டிக்காட்டும் நாம் தான் அழுக்கை நீக்கவேண்டும்"

எனவே படித்துவிட்டகாரணத்தினாலேயே அவர்கள் பரிசுத்தமானவர்களாக மாட்டார்கள்
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பயீ