திருடன் ஒருவன் பாதையில் மணிபர்ஸ் ஒன்றுகிடப்பதைக் கண்டு எடுத்துப் பார்த்தான்.
அதில் நிறையப் பணமும் அதன் உரிமையாளரின் முகவரியும் இறைவனிடம் பாதுகாப்புவேண்டி ஒரு துஆவும் எழுதப்பட்ட சீட்டுமிருந்தன..
அந்தத் திருடன் உரிமையாளரிடம் அதை ஒப்படைத்தான்.
அவன் ஒரு திருடன் என்பதை அறிந்திருந்த அந்த உரிமையாளர்
'நீதான் திருடனாயிற்றே பணத்தை எடுத்துக் கொள்ளாமல் ஏன்ஒப்படைக்கிறாய்? எனக்கேட்டார்.
இந்தப் பணத்தை 'அல்லாஹ் பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் அதில் துஆவை எழுதிவைத்திருக்கிறீங்க'
இந்த துஆவின் பரக்கத்தால் பணம் காணாமல் போனாலும் திரும்ப கிடைத்துவிடும் என்றநம்பிக்கையில் எழுதிவைத்திருக்கிறீங்க
அந்த நம்பிக்கையை நான் திருட விரும்பவில்லை. ஒரு வேளை இந்தப் பணம் உங்களுக்குக் கிடைக்காமல்
உங்களின் இறைநம்பிக்கையில் சற்று பலவீன மேற்பட்டாலும் உங்களின் இறைநம்பிக்கையை திருடிய குற்றத்திற்கு நான் ஆளாவேன்.
நான் சராசரி திருடன் தான் ஆனால்
பணம் காசு,தங்கம் போன்றவைகளை திருடினால் ஏற்படும் பாவத்தை விட ஒருவனின் இறைநம்பிக்கையைத் திருடுவது பெரும் பாவம் என கருதினேன்'
எனவே இதை உங்களிடம் ஒப்படைத்தேன்' என்றான் திருடன்.
----அல்லாஹ் யாருக்கு எப்பொழுது ஹிதாயத்தைத் தருவான் என்பதை யாராலும் உறுதியுடன் கூறமுடியாது.
-----உருது இணையதளத்திலிருந்து
கணியூர் இஸ்மாயீல் நாஜி.

No comments:
Post a Comment