உங்கள் வாழ்க்கையில் #எதிரி,
#விரோதி,
#பகைவன்,
#வெறுப்பவன்,
#பொறாமைக்காரன், #போட்டியாளன்,
உங்கள் பணியில் #குறை கண்டுபிடிப்பவன்,
உங்கள் #முதுகிற்குப்பின் பேசுபவன்
இவர்கள் இருப்பது இயற்கை ..
இது உங்களுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைப்பதற்காகத்தான்.
சிந்தித்தித்துப்பாருங்கள்,
நபிமார்களுக்கும் எதிரிகள் இருப்பதாக குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ
இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம்.
(அல்குர்ஆன் : 6:112)
எதுவரை என்றால் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் நோக்கி"
என் ரப்பே! எனக்கு எதிரிகளே இல்லாமல் ஆக்கு" எனப் பிரார்த்தித்த போது அல்லாஹ் சொன்னானாம்
"எனக்கே எதிரிகள் இல்லாமல் இல்லையே" என்று.
கருத்தென்ன வென்றால் அகிலமனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்விற்கே எதிரிகள் இருக்கும்போது
நமக்கு இருக்கக்கூடாது என ஆசைப்படுவீர்களா என்ன?
உங்களுக்கு எதிரிகளே இல்லை என்பது நடக்காத காரியம்.
உங்களின் மீது பொறாமை கொள்ளாதவன் இருப்பான் என்பது முடியாத காரியம்.
உங்களைக் கண்டு எரிச்சல் படாதவனே இல்லை என்பது நடக்காத காரியம்
இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான ஸய்யித்னா உமர்(ரழி) அவர்கள் சொல்கிறார்கள்:
"ஒருவனிடம் ஒரு அருட்கொடை இருந்தால் அதைக் கண்டு பொறாமை கொள்ளபவன் ஒருவன் இருப்பான்.
ஒருவன் ஈட்டியைப் போல் நேராக இருந்தாலும் அவனையும் குறை சொல்பவன் ஒருவன் இருப்பான்"
ஒருவனிடம் செல்வம் இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் அறிவாற்றல் இருந்தால் அவனுக்கொரு விரோதி இருப்பான்.
ஒருவனிடம் தனித்தன்மை இருந்தால் அவனுக்கு ஒரு விரோதி இருப்பான்
நீங்கள் ஒன்றில் வெற்றி பெற்றால் உங்களுக்கு ஒரு விரோதி உருவாகிவிடுவான்.
இது இயற்கையின் நியதி.இது வாழ்க்கையின் நடைமுறை.
எனவே அமைதியாக இருங்கள்
உங்களுக்கு விரோதிகளும் குறை சொல்பவர்களும் எதிரிகளும் இருப்பது எச்சரிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு வழிவகுக்கும்
#அஷ்ஷைக்_ராத்திப்அந்நாபிலிஸி
#கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி, காசிமி
.

No comments:
Post a Comment