#சோர்வடையாதே சகோதரா!
சற்று எண்ணிப்பார்
#எத்துணை முறை நீ கேட்டதை
அவன் கொடுத்திருக்கிறான்
#எத்துணை முறை அவனை
நீ அழைத்த போது அவன்
உனக்கு பதிலளித்துள்ளான்
#எத்துணை முறை நீ சறுக்கி விழுகின்ற
நேரத்தில் உன்னைத் தாங்கிப்பிடித்துள்ளான்
எத்துணை முறை உன் தேவைகளை
நிறைவேற்றியுள்ளான்
எனவே கவலைப்படாதே
சோர்ந்து போகாதே
அவனிடமே முறையிடு
உன் நிலையை அவன்
முன் வை
அவன் உன் குறையைத் தீர்ப்பான்
என நல்லெண்ணம் கொள்
அவன் மீதே நம்பிக்கை வை
அவனுடைய முடிவை
திருப்தியுடன் ஏற்றுக்கொள்
அவன் எனக்குப் போதுமானவன்
என மன அமைதி கொள்
திரும்ப திரும்ப இந்த வசனத்தை
சொல்லிக் கொண்டே இரு.
وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ
உபவ் விளு அம்ரீ இலல்லாஹ் இன்னல்லாஹ பஸீரும் பில் இபாத்
என்னுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்"
(அல்குர்ஆன் : 40:44)
---முனைவர் ஷைக் #ஆயிளுல் கர்னி
அவர்களின் டுவிட்டர் செய்தியிலிருந்து
சிறிய இணைப்புடன் #கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:
Post a Comment