குழப்பம் செய்வோருக்கு இடங்கொடுக்காதீர்
-------=--------
உங்களைப்பற்றி இன்னார் இப்படி சொல்கிறாரே
என்று ஒருவர் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களிடம் சொன்னார்.
#அவர் என்னைப்பற்றி சொன்னது உண்மையாக இருந்தால்
நீ அவரைப்பற்றி என்னிடம் கோள்மூட்டும் குற்றவாளியாகிறாய்.
அவர் என்னைப்பற்றி அவ்வாறு சொல்லாமலிருந்தால்
நீ ஒரு பொய்யன்
என்றார்கள் இமாம் .
வெட்கப்பட்டு அங்கே இருந்து அவர் நகர்ந்தார்.
--------------------------------------------------------------
உங்களைப் பற்றி இன்னார் இப்படி ஒரு குறை சொல்கிறார் என இமாம் அலி பின் ஹஸன்(ரஹ்) அவர்களிடம் ஒருவர் சொன்னார்.
அதற்கு இமாம் அவர்கள்,
அவர் சொன்னது போல் என்னிடம் அந்த குறை இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!
அவர் சொல்லும் குறை என்னிடம் இல்லையென்றால் குறை சொன்ன அவரை அல்லாஹ்
மன்னிப்பானாக!
----------------------------------------
அறிஞர் வஹப் பின் முனப்பஹ்(ரஹ்) அவர்களிடம் உங்களை அங்கு ஒருவர் ஏசிக்கொண்டுருக்கிறார்
என்றார்.
என்ன சகோதரரே! இன்று ஷைத்தானுக்கு உன்னைத்தவிர வேறு ஆள் கிடைக்கவில்லையோ?
என்றார் அறிஞர்.
--------------
ஒரு ஞானியிடம் மற்றொருவரைப்பற்றி ஒருவர் கோள் சொன்னார்.
அதற்கு அந்த ஞானி, இன்று நீ மூன்று தவறுகளை செய்துள்ளாய்.
எனக்கும் என் சகோதரனுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்த முயல்கிறாய்.
அமைதியாக இருக்கும் என் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறாய்.
உன்னின் மீது நான் வைத்திருந்த நன் மதிப்பை குலைத்து விட்டாய்.
#இதுதான் ஆன்றோர்களின் பண்பு.
குழப்பம் செய்யவோருக்கு இடங்கொடுக்க மாட்டார்கள்
---கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி
மீள்

No comments:
Post a Comment