நீங்கள் #நாற்பது வயதில் இருந்தால், அல்லது நாற்பதை நெருங்கிவிட்டால், அல்லது அதற்கு சற்று அதிகமாக இருந்தால்,
திருக்குர்ஆன் ஒரு சிறப்பு பிரார்த்தனையுடன் தனிப்படுத்திய ஒரே வயது நாற்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்லாஹ் கூறுகிறான்:
حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ
இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு #நாற்பது வயது ஆகும்போது கூறுவான்:
“என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன். கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.”
(அல்குர்ஆன் : 46:15)
இது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பிரார்த்தனை,
இதில் கடந்த காலங்களில் அல்லாஹ் அருளியவைகளுக்கு நன்றி செலுத்துதல், வருங்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரார்த்தனை மற்றும் இந்த மார்க்கத்தின் மீது தனக்குள்ள உறுதிப்பாட்டை உறுதியாக்குவது ஆகியவை அடங்கும்.
இந்தப் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்
குறிப்பாக நாற்பதை எட்டியவர்களே இந்த துஆ உங்கள் அமல்களை ஏற்றுக்கொள்வதற்கு காரணமாகும்.
எனவே தொடர்ந்து இந்த துஆவை ஓதி வாருங்கள்
இந்த வசனத்தின் தொடரில் அல்லாஹ் சொல்கிறான்:
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ نَـتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَـتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ وَعْدَ الصِّدْقِ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ
இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 46:16
எவர் நாற்பது வயதிற்குள் நுழைகிறாரோ அவர் மறுமைக்கான கொள்முதல் செய்யும் சந்தைகளில் நுழைந்துவிட்டார்.
நாற்பது வயதுக்காரர்களே! மறுமையின் வசிப்பிடத்திற்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அறுபதுகளுக்கும் எழுபதுகளுக்கும் இடைப்பட்ட காலம் மரணத்துடன் நடக்கும் போராட்ட காலம்-(இப்னு ஹிப்பான்)
மற்றொரு
அறிவிப்பில்: எனது உம்மத்தில் எழுபது வயதுடையவர்கள் குறைவாக இருப்பார்கள் (தப்ரானி)
நாற்பது அல்லது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர், தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கடந்துவிட்டோம் குறைவான காலமே மீதம் இருக்கிறது என்பதை உணரவேண்டும்
கடந்த காலம் எப்படி போனது?
கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்தது போல் இருக்கிறது
எஞ்சியிருப்பதும் கடந்ததை விடக் குறைவாக இருந்தால், அதுவும் ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் கடந்து சென்று விடும்
,
நாற்பதை எட்டிய ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
!
அதாவது, நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, நாற்பது கோடைகாலம், நாற்பது குளிர்காலம், நாற்பது வசந்தகாலம் நாற்பது இலையுதிர் காலம்.
நாற்பது வயதில், நடுத்தர வயது தொடங்குகிறது,
இவ்வேளை கடுமையான கேள்வி மனிதனின் முன் தோன்றது:
கடந்த காலங்களில் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் என்ன சேகரித்தீர்கள்?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
உங்கள் இறைவனுடனான உறவில் நீங்கள் என்ன முன்னேற்றம் கண்டீர்கள்?
எழுபது எண்பது வயதுடைய மக்களைக் கேளுங்கள், அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்:
அக்காலம் ஒரு கனவு போல கடந்துவிட்டது, நேற்று நாங்கள் சிறுவர்களாக விளையாடினோம், இன்று அறுவடை செய்யும் நேரம் நெருங்கிவிட்டது, இறைவனை சந்திக்கும் நேரம் நெருங்குகிறது.
அதாவது, நாற்பது, ஐம்பது வயதைத் தாண்டியவர்களின் தலைமுறைச் சேர்ந்தவர்கள் , பெரும்பாலும் பாதி பேர் மண்ணுக்கு அடியில் இருக்கிறார்கள்
ஒரு நபரின் சகாக்கள் இறக்கும் போது, அவரது வயதில் உள்ளவர்கள், அவரின் இறுதிச் சடங்கில் சொல்வார்கள்:
நீங்கள் முந்திக்கொண்டீர், நாங்கள் பின்னால் உங்களுடன் வந்து சேருபவர்கள்"என்று.
ஆனால் அதன் பின் சொன்னதை மறந்துவிட்டு
ஒவ்வொருவரும் அவரவர் வருமானத்தைப் பெருக்குவதில் மும்முரமாக,
விதவிதமான
உணவு உண்பதிலும் மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடுவதில் பிஸியாக குழந்தைகளுடன், திருமணத்தில் பிஸியாக, உலகத்துடன், வியாபாரத்தில், இரவுகளில், பயணங்களில், பிஸியாக இருக்கிறார்கள்.
அவரது வயது ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள்
ஒரு நபர் நாற்பதை எட்டினால், அவர் மறுஉலகப் பயணத்திற்குத் தயாராக வேண்டும்.
அதனால் இவ்வுலகில் வாழ்கின்ற காலத்தில் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல.
மாறாக நாம் அந்த சுகபோகத்திலேயே மூழ்கி மறுமையை மறந்துவிடக்கூடாது என்பதுதான்
நாற்பது வயது என்பது இறைவன் உங்களுக்கு அனுப்பிய செய்தி:
"அடியானே! என்னை சந்திக்கும் நாள் நெருங்கிவிட்டது அதற்கு நீ தயாரா?"
#அல்_நாபுல்சியின் முத்துக்களிலிருந்து
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

No comments:
Post a Comment