Wednesday, November 2, 2022

ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்
-----
ஒரு பெரியவர் சொல்கிறார்:
நான் மஸ்ஜிதுகள் நபவியில் பஜ்ர் 
  தொழுதுவிட்டு கிப்லாவை முன்னோக்கி  அமைந்திருந்தேன் 

அப்போது அங்கே ஒருவர் 60 வயதுக்கு மேல் இருக்கும் என் முன்னே வந்து அமர்ந்தார் 

 உங்களுடன் சில நிமிடங்கள் பேசலாமா என்றார்.
 தாரளமாக என்றேன் 
 என்னிடத்தில் ஒருவர் சில விஷயங்களை சொன்னார் அது எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது 

அதையே உங்களுக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன்
 நீங்கள் கேட்கிறீர்களா என்றார் 
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! சொல்லுங்கள் என்றேன்.

  நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  
"யார் என்மீது ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்தை அருளுகிறான்( முஸ்லிம்) எனச் சொல்கிறார்களே"
அல்லாஹ் அருளும் ஸலவாத் என்னவென்று தெரியுமா? 
 நபிகளார் மீது ஸலவாத் சொல்வதின் பலன் என்னவென்று தெரியுமா? என்றவர் ,
பலன் என்னவென்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது
அல்லாஹ் சொல்கிறான்
هُوَ الَّذِىْ يُصَلِّىْ عَلَيْكُمْ وَمَلٰٓٮِٕكَتُهٗ لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ  وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا‏
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 33:43)
 
அல்லாஹ்  சொல்லும் ஸலவாத் என்பது இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டு செல்வதாகும்
#அனைத்து நெருக்கடியும்
#அனைத்து 
சிரமங்களும்
#அனைத்துத் 
துன்பங்களும்
#அனைத்து
பாவங்களும்
#இருளாகும்
இவைகளில் ஏதேனும் ஒன்றினால் நீங்கள் பாதிக்கப்படும் போது அந்த இருளிலிருந்து வெளியேறும் வரை நபியவர்களின் மீது ஸலவாத் சொல்லுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள்

நபித்தோழர்  உபை பின் கஅப் (ரழி) அவர்கள் நபியவர்களிடம்
 எனது துஆ வில் அதிகமாக உங்கள் மீது ஸலவாத் சொல்கிறேன் எத்தனை தடவை சொல்ல வேண்டும்? எனக் கேட்டார்
நீ விரும்பு அளவு
என்றார்கள் நபியவர்கள்.
நான்கில் ஒரு பங்கு?
என்றார் நபித்தோழர்
இன்னும் அதிகப்படுத்தினால் உனக்கு பலன் தரும் என்றார்கள்
 நபியவர்கள்.
அரைவாசி? என்றார்
நபித்தோழர்.

மேலும்  அதிகப்படுத்தினால் உனக்கு பலன் தரும் என்றார்கள்
 நபியவர்கள்

மூன்றில் இரண்டு பங்கு? என்றார் நபித்தோழர்
நீ விரும்பினால் இன்னும் அதிகரிக்கலாம்
அது உனக்குப் பலன் தரும் என்றார்கள் நபியவர்கள்
أَجْعَلُ لَكَ صَلَاتِي كُلَّهَا
அப்படியானால் என் துஆ முழுவதையும்
உங்களுக்காக ஆக்கிக் கொள்ளவா?
என ஆர்வத்துடன் கேட்டார் உபை பின் 
கஅப்(ரழி)
قَالَ : إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ .رواه الترمذي (2457)

நபியவர்கள்  சொன்னார்கள் "அவ்வாறு நீ செய்தால் உனது கவலைகள் நீங்கி உன் பாவங்கள் மன்னிக்கப்படும்"

இந்த  ஹதீஸை சொன்ன அந்த மனிதர் சொன்னார்
உங்களுக்கு ஒரு துன்பம் வரும்பொழுது
அந்த துன்பம் நீங்கும் வரை
 நபியவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள் கவலை நீங்கும் என்றார்

நான் மனம் நெகிழ்ந்தவனாக, எனக்கு மிகவும் பயனுள்ள தகவலைத் தந்தீர்கள்.அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிவழங்குவானாக எனக் கூறி அவருக்காக துஆ செய்தேன்.

அவர், என்னுடைய ரப்பே! இந்த பேச்சை உனக்காக பேசினேன் 
என்னுடைய நன்மைகளின் பட்டியலில் பதிவு செய்யப்படுவதற்காக
எனச் சொல்லிய வண்ணம் சென்றுவிட்டார்.

இந்தத் தகவலை பதிவு செய்யும் பெரியவர் சொல்கிறார்:
அவர் இன்னோருவரிடமிருந்து கேட்டதை என்னிடம் பகிர்ந்து நன்மையை சம்பாதித்துக் கொண்டார்
நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்
எனக்கு அல்லாஹ் நற்கூலி தருவான் என ஆதரவு வைக்கிறேன்
நீங்களும் பயன் பெற்று மற்றவர்களுக்கும் பகிருங்கள்
 --அரபு இணையத்திலிருந்து
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

No comments:

Post a Comment