எனக்காக கதவை திறப்பவள் இவள்தான்
ஒரு குட்டிக் கதை
**************************
புதிதாக திருமண அந்த இளம்ஜோடி
ஒருநாள் "இன்று முழுவதும் நாம் யாரையும்
சந்திக்காமல் தனியாக இன்றைய நாளை கழிப்போம்,
யார் வந்து கதவைத்தட்டினாலும் எந்த பதிலும்
சொல்லாமல் மவ்னமாக இருந்துவிடுவோம்"என முடிவு செய்தனர்.
சற்று நேரத்தில் கணவனின் பெற்றோர் வந்து கதவைத்
தட்டினர்.கணவன் மனைவியைப் பார்த்தான்.
மனைவி நம் முடிவின்படி கதவைத் திறக்கக்கூடாது என கிசுகிசுத்தாள். கணவன் அமைதியாக இருந்துவிட்டான்.
பெற்றோர் திரும்பிச் சென்று விட்டனர்.
கொஞ்சநேரத்தில மீண்டும் கதவைத்தட்டும் சத்தம் கேட்டது, இம்முறை மனைவியின் பெற்றோர்.
கணவன் மனைவியைப் பார்த்தான்,அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைக் கண்டு பதறிப் போய் "என்னம்மா என்னாச்சு" என்றான்,
என் நல்வாழ்விற்காக எவ்வளவோ தியாகம் செய்த என் பெற்றோர்களை என்னை பார்க்காமல் திருப்பி அனுப்புவதை எண்ணி மனம் கலங்குகிறது"என்றாள் மனைவி.
மனமுருகிய கணவன் அழாதே! நம் முடிவை கைவிட்டு உன் பெற்றோரை அனுமதிப்போம் என்று கூறியவாறு கதவைத் திறந்தான்.
ஆண்டுகள் பல கடந்தன. அடுத்தடுத்து நான்கு ஆண்குழந்தைகள் பிறந்தன.
ஐந்தாவதாக பெண்குழந்தை பிறந்தது .கணவன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.
ஊர்மக்கள் அனைவரையும் அழைத்து பெரியளவில் விருந்தளித்தான்,
வந்திருந்த மக்கள், "நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றபோது ஏற்படாத பெருமகிழ்ச்சி ஒரு பெண் பிள்ளை பெற்றவுடன் ஏற்பட்டது ஏன்? என வினவினர்..
கணவன் சொன்னான்:
இந்த செல்லப்பெண்தான் எங்களது வயதான காலத்தில் எங்களுக்காக தனது வீட்டு வாசற்கதவைத் திறப்பவள்"
------- அரபு சிறுகதை. தமிழில் கணியூர் இஸமாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி

No comments:
Post a Comment