Monday, November 27, 2017

வேடிக்கை மனிதன்

தினந்தோறும் மனிதன் இரவு பகல் மூன்று வகையாக சோதிக்கப்படுகிறான்.ஆனால் அவன் அவைகளில் ஒன்றிலிருந்தும் படிப்பினைப் பெறுவதில்லை.

1.ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாட்களில் ஒன்றை இழக்கிறான்.ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை,அதற்கு முக்கியத்துவத்தையும் கொடுப்பதில்லை.. மாறாக பொருளாதார இழப்பு ஏற்பட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்,அதைப்பற்றி கவலைப்படுகிறான்.

2. ஒவ்வொரு நாளும் அல்லாஹ் அளிக்கும் ரிஜ்கை உண்ணுகிறான். அது ஹலாலாக இருந்தால் மறுமையில்  அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினாயா?எனக் கேட்கப்படுவான். அது ஹராமான வழியில் வந்திருந்தால் மறுமையில் தண்டிக்கப்படுவான்.
அதைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை.

3. ஒவ்வொரு நாளும் மெது,மெதுவாக மறுமையின் பால் நெருங்கிக் கொண்டிருக்கிறான், அதே அளவு இவ்வுலக வாழ்க்கையிலிருந்து தூரமாக நகர்ந்து கொண்டிருக்கிறான். நிலைமை  இவ்வாறிருக்க
அழியப்போகும் இவ்வுலக வாழ்க்கைக்கு  கொடுக்கும் முக்கியத்துவத்தை அழியாத மறுமைவாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.
நாம் செல்லுமிடம் சொர்க்கமா எனும் சிந்தனையின்றி வாழ்க்கையை கடக்கிறான்.
    வேடிக்கையான மனிதன்.
-----------அரபு  இணைதளத்திலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி

No comments:

Post a Comment