Thursday, April 28, 2022

அழைப்பாளர் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு இஸ்லாமிய அழைப்பாளன் ஆத்திரமூட்டப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும

இலங்கை மவ்லானா முர்ஷித் அஹ்மத் ஹஜ்ரத் அவர்களின் அறவுரை
-----------------------------=8-----====-----=--===
ஒரு அழைப்பாளனுக்கு பொறுமையும்,நிதானமும் அவசியம்.
நம்மை ஆத்திரமூட்டி நிதானம் இழக்க வைக்க முயல்பவருக்கு நாம் பலியாகி விடக் கூடாது
மவ்லானா அஷ்ரப்அலி தானவி (ரஹ்)
அவர்கள் ஒரு ஊருக்கு உரையாற்ற சென்றார்கள். அவர்கள் உரை ஆற்ற துவங்குமுன் ஒருவர் எழுந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுப் பின் பேசுங்கள் என்றார்.என்ன கேள்வி என மவ்லானா கேட்க இந்த காகிதத்தில் எழுதியிரூக்கிறேன் என ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.அதில் முதல் கேள்வி
  நீ ஒரு காபிர் முஸ்லிமான எங்களிடம் பேசக்கூடாது" என இருந்தது.அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி என்னை காபிர் என்கிறாய் என விவாதம் செய்து கொண்டிருப்போம்
  ஆனால் மவ்லானா சொன்னார்கள்; நான் அம்பது ஆண்டுகளாக கலிமா சொல்லி தொழுது முஸ்லிமாக வாழ்கிறேன் இப்பொழுது என்னை காபிர்  என்கிறாய். இப்பொழுது உன் திருப்திக்காக இந்த மக்கள் முன் மீண்டும் கலிமா சொல்கிறேன். அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு
இப்பொழுது நான் முஸ்லிம் பேசலாமல்லவா?  என்றார்கள்.
  இரண்டாம் கேள்வி;
நீ ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் உனக்கு பேச தகுதியில்லை.
 ஆத்திரப்படாமல் மவ்லானா சொன்னார்கள்; நல்ல விஷயங்கள் சொல்வதற்கு குலம் தேவையில்லை .இருப்பினும் என் குலம் என்ன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் என் ஊரான தானபவன் வந்து விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்
 மூன்றாவது கேள்வி;
     எப்போதும் நீங்கள் கருத்து வேற்றுமை உள்ள செய்திகளையே பேசுகிறீர்கள்.
 மவ்லானா சொன்னார்கள்; நான் பேச ஆரம்பிக்கிறேன் எந்த இடத்தில் என் பேச்சு கருத்துவேற்றுமையை தூண்டும் விதமாக இருக்கிறதோ அங்கேயே என் பேச்சை நிற்பாட்டிவிடுங்கள்"
 அதன் பின் மவ்லானா பேச துவங்கினார்கள் பேசிமுடியும் வரை யாரும் எந்த குறுக்கீடும் செய்யவில்லை கூட்ட முடிவில் கேள்வி கேட்டவர் ஓடிவந்து மவ்லானாவின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டார்
    இப்படித்தான் நம் பேச்சின் மூலமும் நம்முடைய பணிவான நன்நடத்தையின் மூலமும் எதிரியையும் நண்பனாக்க வேண்டும்
-------கணியூரார்

No comments:

Post a Comment