Tuesday, October 26, 2021

நபித்தோழர்களின் சிறப்பு


நபித் தோழர்களின் சிறப்பு
*******************
  அய்யாமுல் ஜாஹிலியா எனப்படும் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒழுக்கங்கெட்டவர்களாக வாழ்ந்தவர்கள் என எண்ணுவது அறிவீனம்.

ஒழுக்கக்கேடுகள் பரவலாக அக்காலத்தில் காணப்பட்டாலும் அவைகளைத் தவிர்த்தும் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் குழிதோண்டி புதைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த எல்லோரும் அவ்வாறு செய்திருந்தால் மணமுடிக்க பெண்களே இல்லாமல் போயிருப்பார்கள்.

அக்காலத்தில் வாழ்ந்த பல்லாயிரம் பேர்களில் நூற்றுக்கணக்கான பேர் நபியவர்களின் அழைப்பை ஏற்று உடனடியாக நபியவர்களின் நுபுத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள்,
அக் கொள்கைக்காக தங்களின் உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானார்கள் என்றால் அவர்களுக்கு இயற்கையிலேயே நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருந்திருக்கிறது என்று பொருள்.

   புகாரிஷரீபிலும்,முஸ்லிம் ஷரீபிலும் வரும் நபிமொழிகள இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன
"அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்' என்று பதிலளித்தார்கள்
புகாரி 3383
 عَنْ أَبِي هُرَيْرَةَ، بِحَدِيثٍ يَرْفَعُهُ، قَالَ: «النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا
"

தங்கம்வெள்ளி கனி மங்களைப் போன்று மனிதர்களும் கனிமங்கள் தாம்.
அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்' முஸ்லிம் 2638அரபி பதிப்பு 
தங்கம்,வெள்ளி போன்ற கனிமங்கள் எந்த நிலைமையிலும் தங்கள் இயல்பிலிருந்து மாறிவிடாது, அவைகள் மண்ணில் புதைந்திருந்தாலும் அவைகள் புழுதியடைந்து ஒளி குன்றுமே தவிர அதனின் அடிப்படைத் தன்மை மாறாது  மண்ணில் கிடந்ததை எடுத்து புடம் போட்டால் அது சொக்கத்தங்கமாக மாறிவிடும்.
அதைப்போன்று தான் நபித்தோழர்கள் தங்கமாகவும்,வெள்ளியாகவும் மூட நம்பிக்கைகளால் ஒளிஇழந்தவர்களாக அறியாமை காலத்தில் இருந்தார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன் நபிஅவர்கள் குர்ஆனின் ஜோதியால் புடம் போட்டு அவர்களை சிறந்த,நேர்மைமிக்க உலகமாந்தர்களின் மனங்களை
 வென்றெடுக்கும் வகையில் வெளிப்படுத்தினார்கள.
குர்ஆன் வாழ்க்கை நெறிகளாக-மது,வட்டி,
தகாத உறவு களை  விட்டும் விலகுமாறு ஆணையிட்ட போது  விவாதங்களில் ஈடுபடாமல் செவிமெடுத்தோம்,கட்டுப்பட்டோம் என வாழ்ந்து அல்லாஹ் விற்கு உவப்பான வர்களாக மாறினார்கள். 
நபித்தோழர்களை நேசிப்பது  ஈமானில் ஒரு பகுதி" என நபிபெருமான்ﷺ அவர்கள் நவின்றதையும் நினைவில் கொள்ளுங்கள்.
    சிலர் தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்த நபித்தோழர்களே ஒரு காலத்தில் தவறு செய்தவர்கள்தான் எனக் கூறுபவர்களுக்கான பதிவு இது.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பயீ

No comments:

Post a Comment