முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் மூஃமீனாக இருக்கிறோமா???
****************************************
------ அரபி இணைய தளத்திலிருந்து
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
--------------------------------------------------
முஸ்லிமுக்கும் மூஃமினுக்கும் இடையே உள்ள வித்தியாசம் - குர்ஆன் கூறுவது என்ன??
குர்ஆன் கூறுவதை சற்று ஆய்வு செய்யுங்கள்.
குழப்பமான வேளையில் நம் நிலை என்னவென்று புரியும்..
முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடையாளமான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனால், கல்வியில், பொருளாதாரத்தில், வாழ்வியலில் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்த துர்பாக்கியங்களுக்கு என்ன காரணம்??
குர்ஆனில் வருகிறது –
49:14. “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக.
ஏன் முஸ்லிம்கள் இந்த துர்பாக்கியங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்??
இதற்கான விடையை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. ஏனென்றால், முஸ்லிம்கள் மூஃமினுடைய நிலைக்கு உயரவில்லை.
பின் வரும் ஆயத்துகள் சிந்தித்து பாருங்கள்.
முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைத்து இருக்கும்.
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.
30:47.முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
அவர்கள் மூஃமீனாக இருந்தால் உலக சமுதாயத்திற்கு மத்தியிலே உயர்வான இடத்தை அடைந்திருப்பார்கள்.
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.
3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் எந்த எதிரியாலும் அவர்கள் வீழ்த்தப்பட மாட்டார்கள்.
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.
4:141. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
அவர்கள் உண்மையான மூஃமீனாக இருந்திருந்தால்
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை;
முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் எல்லா நிலையிலும் அல்லாஹ் அவர்களுடன் இருந்திருப்பான்.
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.
8:19. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்.
ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் நிலையிலேயே நின்று விட்டார்கள். மூஃமின் நிலைக்கு உயரவில்லை.
அல்லாஹ் சொல்கிறான்.
அவர்களில் அதிகமானவர்கள் மூஃமீனாக இல்லை.
மூஃமின் என்றால் யார்??
இதற்கான விடையை குர்ஆன் இப்படி சொல்கிறது.
9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
சிந்தித்து பாருங்கள்!!
அல்லாஹ்வின் உதவியும், எதிரிகளை மிகைக்கும் ஆற்றலையும், உயர் அந்தஸ்த்தையும் அல்லாஹ், மூஃமீன்களுடன் இணைத்துள்ளான். முஸ்லிம்களுடன் அல்ல.
அல்லாஹ் விரும்புகிற அளவுக்கு நாம் உண்மையான மூஃமீனாக இருக்கிறோமா?????....
உங்களையும் என்னையும் அல்லாஹுத்தஆலா உண்மையான மூஃமினாக வாழ செய்து அந்நிலையிலேயே மரணிக்க செய்வானாக.

No comments:
Post a Comment