அன்புள்ள சகோதரருக்கு,வஅலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
என்னை மரியாதையுடன் அழைத்து என்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளை என்னிடமே கேட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி
நீடுர் மதரசாவிலிருந்து நான் குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டேன் என்பது தவறான தகவல்.ஏனென்றால்
1977ம் ஆண்டு மதரசாவில் ஏற்பட்ட ஒரு குழப்பத்தினால் மதரசா காலவரம்பின்றி மூடப்படுவதாக அறிவிக்கக்கப்பட்டது அந்த
செய்தி தினமணி ஏட்டியிலும் வெளியிடப்பட்டது. அப்பொழுது நானும், மவ்லவி,ஓ.எம்.அப்துல்காதிர் ஹழரத்தும்,மவ்லவி,
அப்துஸ்ஸலாம் ஹழரத்தும் மதரசா விலிருந்து வெளியேறினோமே தவிர நீக்கப்படவில்லை. மீண்டும் மதரசா திறந்தபோது மூன்று பேருமே வெவ்வேரு மதரசாவில் சேர்ந்து விட்டதால் மீண்டும் நான் நீடூர் மதரசாவில் சேரவில்லை.இப்பொழுது நான் நீடூர் மதரசாவின்
நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கிறேன்.மதரசாவிலிருந்து குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டவர், எப்படி அந்த மதரசாவின்
நிர்வாகக்குழுவில் வர முடியும்?
அடுத்து.சிம் இயக்கத்தில் முப்பது வயது நிரம்பியவர்கள் உறுப்பினராக இருக்கமுடியாது.சிம் இயக்கம் 1977ம் ஆண்டு துவக்கப்பட்டது
நான் 1947ம் ஆண்டு பிறந்தவன்.சிம் இயக்கம் துவக்கும் போது எனக்கு முப்பது வயது முடிந்துவிட்டது.அப்படி இருக்க உறுப்பினராக
இல்லாத என்னை எப்படி நீக்கமுடியும்?
சகோதாரரே! இது வரை உணர்வு இதழ் மூன்று முறை என்னை களங்கப்படுத்த முயன்று இருக்கிறது.2005 ம் ஆண்டு த.மு.மு.க தலைவர்
போராசிரியர்,ஜவாஹிருல்லாஹ்.அவர்களை ப் பாராட்டி நாலு வரி மக்கள் உரிமையில் எழுதினேன்.அதற்கு பதிலாக "பத்து ஆண்டுகளாக காணமல்
போனவரை கண்டு பிடித்த போராசிரியர் எனத்தலைப்பிட்டு என்னைப் பற்றி பத்தி பத்தியாக எழுதினார்
அதில் 1995ம் ஆண்டு த.மு.மு.க.ஆரம்பிக்கப்படுவதர்கு முன் முஸ்லிம் முண்ணனி என்ற அமைப்புத் துவக்கப்பட்டது,அதற்குத் தலைவராக
இஸ்மாயில்நாஜி தேர்ந்த்தெடுக்கப்பட்டார் நாகூரில் கலவரம் நட்ந்த போது போலிசிக்குப் பயந்து ஒதுங்கிக்கொண்ட கோழை என எழுதினார்
கவனியுங்கள் சகோதரரே 1977ல் நீடூரிலிருந்து குற்றச்சாட்டின் அடிப்படையில் .நீக்கப்பட்டவர் ஒரு கல்லூரிக்கு தகவல் தொடர்புக்கே தகுதி இல்லாதவர் போல் 2010.ல் எழுதும் பீ.சை(யினுலாப்தீன்) 1995ல் மாபெரும் சமுதாய இயக்கத்திற்கு அமீராக இஸ்மயில் நாஜியைத் தேர்ந்தெடுக்கிறார்.அப்பொழுது
அவருக்கு 1977ம் ஆண்டு மறந்து விட்டது அல்லது,நாஜிக்கு பாவவிமோசனம் கொடுத்துவிட்டார்.
பின் 2008 ம் ஆண்டு சிதம்பரம் மொளலவின் அட்டகாசம் எனும் தலைப்பில் என்னைப் பற்றி எழுதினார்.அதில் காவல்துறை அதிகாரிகளையும்
ரவ்டிகளையும் வைத்துக்கொண்டு தவ்ஹீத்வாதிகளை அடக்க முயன்றார் என் எழுதினார்.2005ல் போலிசைக்கண்டு பயந்த கோழையாக இருந்த
நாஜி 2008. போலிசைகையில் வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்யும் தாதாவாக நாஜியை பீ.சை சித்தரிக்கிறார்
தேவைப்படும்பொழுது தேவைப்படும் நபர் களுக்கு பாவமன்னிப்பு வழங்குவதற்கும்,தேவைப்படும் பொழுது தேவை இல்லாதவர்களின் மீது பாவச்சுமை ஏற்றி கழுவில் தொங்கவிடுவதறகும்(S.M.பாக்கருக்கு செய்தது போல்) இவர் என்ன கிறிஸ்துவ பாதிரியாரா? தூய வடிவில் இஸ்லாத்தைக் காட்டுகிறேன் என்ற பெயரில் தவ்ஹீத் சகோதரர்களின் பொருளாதாரத்தில் வெளிவரும் இதழில் தனக்கு ப்பிடிக்காத மனிதர்களின் மீது பழி சுமத்துவதைப் பற்றி அந்த சகோதரர்கள் கேட்க்கமாட்டார்களா?
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோர்கள இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் எனப் பார்க்காமல் அவர்களின் கடந்த காலங்களைத்தோண்டிப்பார்த்து அறைகுறையாக சில செய்திகள்த்தெரிந்து கொண்டு அதற்கு கண்ணும் மூக்கும் வைத்து செத்துப்போன பினத்தின் மீதுஅமர்ந்துக கொண்டு அசிங்கமான் பகுதிகள கொத்தித்தின்னும் பிணந்திண்னி கழுகுகள் போல் சிலர் நடந்து கொள்வது தூய இஸ்லாத்திற்கு
ஏற்புடையதா? அப்படி ஒரு முஸ்லிமின் மானத்தை ஏலம் விடுவதற்கு குர் ஆனிலிருந்தும் ஹதீசிலிருந்தும் நேரிடையான ஆதாரம் காட்ட இயலுமா? அப்படி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையை ஆராய ஆரம்பித்தால் என்னவாகும்? நான் பீ,ஜையின் கடந்த காலங்களின் நிகழ்வுகளை எழுதட்டும்மா? என்றவுடன் என்னின் மீது பல அம்புகள் பாய்கின்றன. எல்லாமே முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த வை. யாரை வேண்டுமானலும் 35ஆண்டுகளுக்கு முன் நடந்தவை என க்கூறாமல்அவர்களுக்கும் அல்லாஹ் விற்கு மட்டுமே தெரிந்திருக்கும் செய்திகளை தாங்கள் கண்ணால் பார்த்தது போன்று தங்கள் கற்பனையும் கலந்து அவர்களை அசிங்கப்படுத்துவதாக எண்ணி அவர்கள் எழுதலாம்.ஆனால் உண்மையான தவ்ஹீத்வாதி நடப்பது அனைத்தும் நன்மைக்கே என எண்ணுவான்.
கண்ணியமும் மரியாதையும் கேவலமும்,இழிவும் அல்லாஹ் வின் கையில் உள்ளவை.அல்லாஹ் ஒருவனை கண்ணியப்படுத்தநாடிநாடினால் எந்த
உணர்வலைகளும் அவனை கேவலப்படுத்த முடியாது.அதே போன்று அல்லாஹ் ஒருவனை கேவலப்படுத்த நாடிவிட்டால் எத்தனை பேர் ஜே போட்டாலும் அவனை பாதுகாக்கமுடியாது. பொதுவாக பீ.சையினுலாப்தீன் பிறரை கேவலப்படுத்த எதிரிக்குத் தகுந்தார் போல் குற்றம் சாட்டுவார்.
மதரசாவில் ஓதி.மதரசாவில் பனியாற்றிய காரணத்தால் பழக்கதோஷம் ஆலிம்களைப் பபற்றிய குற்றச்சாட்டில் கட்டாயம் ஒரினச்சேர்க்கை க்குற்றச்சாட்டு இருக்கும். தன்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின்( s.m.பாக்கர் போன்றோர்) மீது குற்றம் சாட்டும் பொழுது அதே பழக்கதோஷம்பொம்ப்பளை சமாச்சாரம் இருக்கும்.இயக்கத்தலைவர்களாக இருந்தால்(அபூஅப்துல்லாஹ்,கமாலுத்தீன் மதனி போன்றோர்)பொருளாதார குற்றச்சாட்டு இருக்கும்
என்வே அவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவருடைய குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நானும் அதைப் பொருட்படுத்தாமல்
தான் இருந்தேன் ஆனால்,ஏமாரதீர்கள் என்ற தலைப்பில் இணைய தளங்களில் மருத்துவ கல்லூரி தொடர்பாக அவர் விதைத்த சந்தேகவித்துக்கள் பரவ ஆரம்பித்த பொழுது நல்ல காரியம் தடை பெறக்கூடாது என்ற நோக்கில்தான் நான் பதில் எழுதினேன்.அவர் மொழியில் எழுதினால்தான் அவருக்கு உரைக்கும் என்பதால் அவர் நடையில் எழுதினேன்.
வக்ப் தொடர்பான உங்கள் கேள்விகளும் இஸ்மாயில்நாஜியின் அயோக்கியத்தனம் என்ற தலைப்பில் ஒரு சகோதரர் எழுப்பியுள்ள வினாக்களும்,வக்ப் என்றால் என்ன? வக்ப் வாரியத்தின் பொருப்பும் அவர்களின் அதிகார வரம்பும் என்ன என்பது தெரியாததன் விளைவு
நான் வியாபாரியாக இருப்பதால் என்க்கு பணிச்சுமையும் டென்ஷனும் அதிகம் எனக்குக் கிடைக்கும் சிறிது ஓய்வில்தான் கடிதம் எழுத முடிகிறது.என்னைப் பற்றிய உங்கள் சந்தேகத்திற்கு உடன் பதில் தராவிட்டால் அது வேறூ வகையாக்கருதப்படும் என்பதால் உடன் பதில் தருகிறேன். இன்ஷாஅல்லாஹ் வ்க்ப் தொடர்பான மற்ற வினாக்களுக்கு நாளை (வெள்ளிக்கிழ்மை) மாலை பதில் விளக்கமாக் எழுதுகிறேன்.
நாள மறூமையில் அல்லாஹ் விற்கு பதில் சொல்லவேண்டும் என்ற நினைவுடன் நம் செயல்கள அமைத்துக் கொள்ள அல்லாஹ் நமக்குத்
தவ்பீக் செய்வானாக ஆமீன்
Friday, January 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment